இது தான் ரியல் சிங்கப்பெண்.. குடும்பத்துக்காக ஆனந்தி எடுக்கும் ரிஸ்க்.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்..
தன் அக்காவின் திருமணத்திற்காக காசு சேர்க்க உடைந்த கையை வைத்துக் கொண்டு போட்டியில் பங்கேற்க வருகிறார் ஆனந்தி.
கிராமத்தில் உள்ள தனது குடும்ப கஷ்டத்தை போக்க கார்மெண்ட்ஸ் பணியில் சேர்கிறார் ஆனந்தி. இவரை பட்டிக்காடு என கிண்டல் செய்யும் கார்மெண்ட்ஸ் சூப்பர் வைசர் கருணாகரணும், அவருடன் ஹாஸ்டலில் இருக்கும் மித்ராவிற்கும் ஆரம்பத்தில் இருந்தே ஏழாம் பொருத்தம் தான்.
மட்டம் தட்டும் கருணாகரன்
இதனால், ஆரம்பத்தில் இருந்தே ஆனந்தியை இந்தக் கம்பெனியில் இருந்து வெளியேற்ற பல முயற்சிகளை செய்கின்றனர். அதுமட்டுமின்றி, கார்மெண்ட்ஸில் டைலர் வேலைக்கு வந்த ஆனந்தியை மட்டம் தட்டி வேறு வேலைக்கு அமர்த்துகிறார். இவை எதுவும் அறியாமல் இருந்த கம்பெனியின் ஒனர் மகேஷிற்கு மெல்ல மெல்ல ஆனந்தி மேல் காதல் வந்தது. இதை தன் தோழி மித்ராவிடம் சொல்ல, அவள் மேலும் ஆனந்தி மீது கோவமடைகிறார்.
சவாலில் வென்ற ஆனந்தி
இதற்கிடையில், ஆனந்தியை கம்பெனியை விட்டு விரட்ட நினைத்தால், அவரை ஏன் டைலராக வேலை செய்ய விடவில்லை என மகேஷ் கேட்க அப்போதே நடத்தப்பட்ட போட்டியில் அதிக துணிகளை தைத்து சதித் திட்டங்களுக்கு மத்தியிலும் ஜெயித்தார் ஆனந்தி.
மித்ராவின் சதித்திட்டம்
இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத மித்ரா, தன் நண்பர்களுடன் சேர்ந்து ஹாஸ்டல் பாத்ரூமிற்கு வெளியே சோப்புத் தண்ணீரை ஊற்றி ஆனந்தியின் கையை உடைத்தனர்.
இதனால், ஆனந்தி கார்மெண்ட்ஸிற்கு வந்து எந்த வேலையும் செய்ய முடியாது என நினைத்தனர். ஆனால், ஆனந்தி தன் அக்காவின் திருமண செலவிற்காக காசு ரெடி பண்ண வேண்டும். அதற்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை எனக் கூறி, உடைந்த கையை வைத்துக் கொண்டு கம்பெனிக்கு வருகிறாள்.
இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
மித்ராவின் கொடூர செயல்
முன்னதாக, இரவு ஆனந்தி ஹாஸ்டல் பாத்ரூமில் இருப்பதை அறிந்த மித்ரா, அவரது நண்பர்கள் துணையுடன் ஆனந்தி இருக்கும் பாத்ரூம் அறையின் கதவை தட்டினாள். பின் ஆனந்தி வருவதற்குள் வெளியில் சோப்பு நுரை தண்ணீரை கொட்டிவிட்டு தப்பிச் சென்றாள்,
தன்னை கூப்பிடும் சத்தம் கேட்ட ஆனந்தி கீழே கால் வைக்கும் போது வழுக்கி விழுந்து கையில் பயங்கரமாக அடிபட்டுள்ளது. இதனால், எழுந்து நிற்க முடியாமல் பயங்கரமாக கத்தி அழுதாள். ஆனந்தியின் குரலைக் கேட்டு அந்தப் பக்கம் வந்த வார்டன் ஆனந்தியை காப்பாற்றினார்.
சண்டையிட்ட மித்ரா
பின் ஆனந்தி இப்படி கீழே விழுந்ததற்கு மித்ராவும் அவரது நண்பர்களும் தான் காரணம் என ஆனந்தியின் நண்பர்கள் குற்றம் சாட்டினர். இதற்கு மித்ரா மறுப்பு தெரிவித்து சண்டையிட்டாள். இதையடுத்து ஆனந்தி அடுத்த நாள் வேலைக்கு சென்றாளா? மித்ரா அவளது சவாலில் ஜெயித்தாளா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்