திட்டம் நிறைவேறிய குஷியில் சிவசங்கரி.. அடுத்த நிமிஷமே வந்து நிப்பேன்.. சவால் விட்ட கயல்.. சீரியல் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  திட்டம் நிறைவேறிய குஷியில் சிவசங்கரி.. அடுத்த நிமிஷமே வந்து நிப்பேன்.. சவால் விட்ட கயல்.. சீரியல் அப்டேட்

திட்டம் நிறைவேறிய குஷியில் சிவசங்கரி.. அடுத்த நிமிஷமே வந்து நிப்பேன்.. சவால் விட்ட கயல்.. சீரியல் அப்டேட்

Malavica Natarajan HT Tamil
Dec 16, 2024 09:28 AM IST

கயலின் குடும்பத்தை பழிவாங்கும் நோக்கத்தோடு சிவசங்கரி போட்ட திட்டம் நிறைவேறியதால், அவர் சந்தோஷத்தில் இருக்கிறார்.

திட்டம் நிறைவேறிய குஷியில் சிவசங்கரி.. அடுத்த நிமிஷமே வந்து நிப்பேன்.. சவால் விட்ட கயல்.. சீரியல் அப்டேட்
திட்டம் நிறைவேறிய குஷியில் சிவசங்கரி.. அடுத்த நிமிஷமே வந்து நிப்பேன்.. சவால் விட்ட கயல்.. சீரியல் அப்டேட்

அம்மாவுடன் சண்டை

இதற்கிடையில், கயலின் சொந்த ஊருக்கு சென்றபோது, தன் அம்மா கயலுக்கு எதிராக செய்த அத்தனை சதிகளையும் அறிந்த எழில் அதிர்ச்சி அடைந்தார். அத்தோடு நில்லாமல் அதுபற்றி கேள்வி எழுப்பி தன் அம்மாவிடம் சண்டையும் போட்டார்.

ஆறுதல் சொன்ன எழில்

இதையடுத்து ஆத்திரம் தாங்க முடியாத எழில், இனி நான் உங்கள் மகனே இல்லை எனக் கூரி கயலுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அப்போது, பணத்திற்கு ஆசைப்பட்டு தான் நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டங்குற பேர் மாறி என் வெற்றிக்கு பின்னாடி நீ இருக்கங்குற பேர் மட்டும் தான் இருக்கனும் என எழில் கயலுக்கு ஆறுதல் சொல்கிறான்.

பக்கா பிளானில் சிவசங்கரி

தன் மகன் எழிலை வீட்டை விட்டு கூட்டிச் சென்ற கயல் குடும்பத்தை பழிவாங்கும் குறிக்கோளில் இருந்த சிவசங்கரி, கயலின் அத்தை வேதவள்ளியை தன் திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறாள். ஏற்கனேவே, கயலின் அத்தை வேதவள்ளிக்கு அவரது மகள் ஷாலினியும் கயலின் தம்பி அன்புவும் காதலிக்கிறார்களோ என்ற சந்தேகம் அடிக்கடி எழுந்து வந்தது. இதற்காக கயல் குடும்பத்துடன் பலமுறை சண்டையும் போட்டிருக்கிறார். இதை வாய்ப்பாக பயன்படுத்தி, அவர்கள் இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.

மீண்டும் சண்டை போட்ட வேதவள்ளி

கயலின் அண்ணன் மூர்த்தி கத்திக் குத்து பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சமயத்தில் கூட வேதவள்ளி, அன்புவின் வளர்ப்பு குறித்து தவறாக பேசி, இனி உங்கள் குடும்பத்துடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்றார். பின் மூர்த்தியை காப்பாற்ற இருவரும் வந்தது தெரிந்து மன்னிப்பு கேட்டார்.

இப்போது, மீண்டும் கயல் வீட்டிற்கு சென்று, என் மகள் ஷாலினி பக்கம் உங்கள் மகன் அன்பு வந்தால் பழைய வேதவள்ளியை பார்க்க வேண்டி இருக்கும் என மிரட்டிவிட்டு சென்றுள்ளார். இதனால், மனமுடைந்து போன கயலின் அம்மா அதை கயலிடம் சொல்கிறாள்.

இதைக் கேட்ட கயல், அன்புவிற்கு உண்மையிலேயே ஷாலினியை பிடித்திருந்தால் அன்புவிற்கு போலிஸ் போஸ்டிங் வந்த அடுத்த நொடி அவனுக்கு துணையாக நான் நிற்பேன் என கூரி சவால் விடுகிறாள். இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.

லோன் கொடுக்க மறுக்கும் வங்கி

முன்னதாக, வீட்டை விட்டு வெளியேறிய கயலும் எழிலும் புதிய தொழில் தொடங்குவதற்காக ஒரு வங்கியில் லோன் கேட்டு சென்றுள்ளனர். அப்போது, அங்குள்ள மேனேஜர், உங்களுக்கு லோன் குடுக்கக் கூடாது என கூறிவிட்டதாத சொல்கிறார். பின், விவரம் கேட்டால் யாரோ இவர்களுக்கு லோன் தரக்கூடாது எனக் கூறியதாக சொல்கிறார். இதையடுத்து அது யார் என்பதை அறிகிறார் கயல்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.