எழிலை தவிக்க விடும் சிவசங்கரி.. கயலை பழிவாங்க புதிய திட்டம்.. பரபரப்பான சூழலில் கயல் சீரியல்..
வீட்டை விட்டு வெளியேறிய எழிலுக்கு எந்த வங்கியிலும் கடன் கொடுக்க கூடாது என தன் பண பலத்தை பயன்படுத்தி சிவசங்கரி தவிக்க விடுகிறார்.
தன்னை அறைந்த கயலை பழிவாங்குவதே நோக்கமாகக் கொண்டிருந்த சிவசங்கரி, கயலிடமிருந்து எழிலைப் பிரித்து எப்படியாவது தீபிகாவிற்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என பல்வேறு திட்டங்களைத் தீட்டினார். ஆனால், அத்தனையும் தகர்த்து எறிந்து கயலும் எழிலும் பலகட்ட போராட்டங்களுக்கு மத்தியில் கல்யாணம் செய்து கொண்டனர்.
அம்மாவுடன் சண்டை
இதற்கிடையில், கயலின் சொந்த ஊருக்கு சென்றபோது, தன் அம்மா கயலுக்கு எதிராக செய்த அத்தனை சதிகளையும் அறிந்த எழில் அதிர்ச்சி அடைந்தார். அத்தோடு நில்லாமல் அதுபற்றி கேள்வி எழுப்பி தன் அம்மாவிடம் சண்டையும் போட்டார்.
ஆறுதல் சொன்ன எழில்
இதையடுத்து ஆத்திரம் தாங்க முடியாத எழில், இனி நான் உங்கள் மகனே இல்லை எனக் கூரி கயலுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அப்போது, பணத்திற்கு ஆசைப்பட்டு தான் நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டங்குற பேர் மாறி என் வெற்றிக்கு பின்னாடி நீ இருக்கங்குற பேர் மட்டும் தான் இருக்கனும் என எழில் கயலுக்கு ஆறுதல் சொல்கிறான்.
லோன் கொடுக்க மறுக்கும் வங்கி
இதைத் தொடர்ந்து கயலும் எழிலும் புதிய தொளில் தொடங்குவதற்காக ஒரு வங்கியில் லோன் கேட்டு சென்றுள்ளனர். அப்போது, அங்குள்ள மேனேஜர், உங்களுக்கு லோன் குடுக்கக் கூடாது என கூறிவிட்டதாத சொல்கிறார். பின், விவரம் கேட்டால் யாரோ இவர்களுக்கு லோன் தரக்கூடாது எனக் கூறியதாக சொல்கிறார்.
பக்கா பிளானில் சிவசங்கரி
லோன் தரக்கூடாது என சொல்லும் நபர் யார், அதை எப்படி கயலும் எழிலும் சமாளித்து முன்னேறுவார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தால் சிவசங்கரி வேறு ஒரு திட்டம் தீட்டி உள்ளார்.
ஏற்கனவே, கயலின் அத்தை வேதவள்ளிக்கு அவரது மகள் ஷாலினியும் கயலின் தம்பி அன்புவும் காதலிக்கிறார்களோ என்ற சந்தேகம் அடிக்கடி எழுந்து வந்தது. இதற்காக கயல் குடும்பத்துடன் பலமுறை சண்டையும் போட்டிருக்கிறார்.
கல்யாணம் வரை சென்ற அன்பு
கயலின் அண்ணன் மூர்த்தி கத்திக் குத்து பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சமயத்தில் கூட வேதவள்ளி, அன்புவின் வளர்ப்பு குறித்து தவறாக பேசி, இனி உங்கள் குடும்பத்துடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்றார். பின் மூர்த்தியை காப்பாற்ற இருவரும் வந்தது தெரிந்து மன்னிப்பு கேட்டார்.
இதற்கிடையில், தற்போது ஷாலினியும் அன்புவும் காதலித்து கல்யாணம் செய்வது வரை சென்றுள்ளனர். கயலை பழிவாங்க காரணம் தேடி அலைந்த சிவசங்கரி கயலின் தம்பி அன்புவை வைத்தே காய் நகர்த்த திட்டம் தீட்டி வேதவள்ளியை சந்திக்க செல்கிறார்.
இந்த பரபரப்பான காட்சிகளால் கயல் அடுத்தடுத்து என்ன பிரச்சனையில் சிக்குவாரோ என்ற பதற்றம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்