படத்த ரிவியூ பண்ணது குத்தமாயா? ஸ்கீரினில் நடக்கும் கொலைகள்.. ஸ்கோர் செய்தாரா சந்தானம்?; டிடி நெக்ஸ்ட் லெவல் படம் எப்படி?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  படத்த ரிவியூ பண்ணது குத்தமாயா? ஸ்கீரினில் நடக்கும் கொலைகள்.. ஸ்கோர் செய்தாரா சந்தானம்?; டிடி நெக்ஸ்ட் லெவல் படம் எப்படி?

படத்த ரிவியூ பண்ணது குத்தமாயா? ஸ்கீரினில் நடக்கும் கொலைகள்.. ஸ்கோர் செய்தாரா சந்தானம்?; டிடி நெக்ஸ்ட் லெவல் படம் எப்படி?

HT Tamil HT Tamil Published May 16, 2025 12:13 PM IST
HT Tamil HT Tamil
Published May 16, 2025 12:13 PM IST

தியேட்டருக்குள் செல்லும் சந்தானமும் அவரது குடும்பமும் படத்தின் காட்சிகளில் வரும் கதாபாத்திரங்களாக மாறுகிறார்கள்.

படத்த ரிவியூ பண்ணது குத்தமாயா? ஸ்கீரில் நடக்கும் கொலைகள்..  ஸ்கோர் செய்தாரா சந்தானம்.. டிடி நெக்ஸ்ட் லெவல் படம் எப்படி?
படத்த ரிவியூ பண்ணது குத்தமாயா? ஸ்கீரில் நடக்கும் கொலைகள்.. ஸ்கோர் செய்தாரா சந்தானம்.. டிடி நெக்ஸ்ட் லெவல் படம் எப்படி?

கதையின் கரு:

யூடியூப்பில் சந்தானம் வித்தியாசமாக விமர்சனம் செய்வதால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் செல்வராகவன் விமர்சனம் செய்பவர்களை பேயாக வந்து கொலை செய்து வருகிறார். இந்த நிலையில் சந்தானத்தை குறிவைக்கும் செல்வராகவன் சந்தானம் மட்டுமல்லாது அவரது குடும்பமான தந்தை நிழல்கள் ரவி, தாய் கஸ்தூரி, தங்கை யாஷிகா ஆனந்த் ஆகியோரை ஒரு படத்தின் பிரீமியர் காட்சிக்கு அழைக்கிறார்.

இதனையடுத்து தியேட்டருக்குள் செல்லும் சந்தானமும் அவரது குடும்பமும் படத்தின் காட்சிகளில் வரும் கதாபாத்திரங்களாக மாறுகிறார்கள். அப்போதுதான் தான் ஒரு மாய உலகில் சிக்கி இருப்பதை சந்தானம் உணர்கிறார். அதிலிருந்து சந்தானமும் அவரது குடும்பமும் எப்படித்தப்பித்தது என்பது மீதிக்கதை!

சந்தானத்தின் காமெடி வொர்க் அவுட் ஆனதா?

சந்தானத்திற்கே உரித்தான உடல் மொழி, டைமிங் காமெடி கவுண்டர்கள் தியேட்டரில் அனல் பறக்கின்றன. குறிப்பாக மொட்டை ராஜேந்திரனுடன் இவர் அடிக்கும் லூட்டிகள் சிரிப்புக்கு கேரண்டி.. பேயாக வரும் நாயகி கீதிகா நடிப்பில் கவனம் ஈர்க்க யாஷிகா கவர்ச்சியில் சொக்க வைக்கிறார். இன்ஸ்பெக்டராக வரும் கெளதம், லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட நடிகர்கள் கதைக்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

இயக்குநர் பிரேம் ஆனந்த் சினிமா விமர்சகர்களை குறிவைத்து கதைக்களத்தை அமைத்தது சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் இருந்தது. நடிகர்களிடம் அவர் நடிப்பு வாங்கிய விதம் சிறப்பு. முதல் பாதியில் கதைக்குள் வருவதற்காக காமெடிகளை தள்ளிவைத்த இயக்குநர், இரண்டாம் பாதியில் மொத்தமாக காமெடிகளை இறக்கி சிரிக்க வைத்திருக்கிறார்.

செல்வராகவனுக்கு முன் கதை இல்லாதது, நிகழ்கள் ரவியை வைத்து எடுக்கப்பட்ட சில அறுவறுக்கத்தக்க காமெடிகள் உள்ளிட்ட்வை ரசிக்கும் படியாக இல்லை; சந்தானத்தின் மெனக்கெடல்தான் படம் தோய்வடையும் போதெல்லாம் தூக்கி நிறுத்துகிறது. அஃப்ரோவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் வகையில் இருந்தாலும், பின்னணி கதைக்கு பலம் சேர்த்து இருக்கிறது.