D imman: துரோகம்.. விவாகரத்து.. மறுமணம்.. ‘நீ இருந்திருந்தா இதெல்லாம் நடந்துரும்மா’ - பேட்டியில் உடைந்த டி. இமான்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  D Imman: துரோகம்.. விவாகரத்து.. மறுமணம்.. ‘நீ இருந்திருந்தா இதெல்லாம் நடந்துரும்மா’ - பேட்டியில் உடைந்த டி. இமான்

D imman: துரோகம்.. விவாகரத்து.. மறுமணம்.. ‘நீ இருந்திருந்தா இதெல்லாம் நடந்துரும்மா’ - பேட்டியில் உடைந்த டி. இமான்

Kalyani Pandiyan S HT Tamil
Published Jul 21, 2024 04:30 PM IST

D imman: சில பேர் நம்முடைய வாழ்க்கையில் இல்லை என்றால் இல்லைதான். அவர்களை நாம் எந்த நபர்களைக் கொண்டும் நிரப்பிட முடியாது. - டி. இமான்

D imman:  துரோகம்.. விவாகரத்து.. மறுமணம்.. ‘நீ இருந்திருந்தா இதெல்லாம் நடந்துரும்மா’ - பேட்டியில் உடைந்த டி. இமான்
D imman: துரோகம்.. விவாகரத்து.. மறுமணம்.. ‘நீ இருந்திருந்தா இதெல்லாம் நடந்துரும்மா’ - பேட்டியில் உடைந்த டி. இமான்

இது குறித்து அவர் பேசும் போது, “அம்மா, என்னுடைய இசையில் கடைசியாக பார்த்த திரைப்படம், தனுஷ் நடிப்பில் வெளியான திருவிளையாடல் ஆரம்பம். அப்போது அவரை தியேட்டருக்கு வீல் சேரில் தான் அழைத்து வர வேண்டிய சூழ்நிலை இருந்தது. அந்த படம் மிகப்பெரிய வெற்றித்திரைப்படமாக மாறியது. அந்தப் படத்தை பார்த்த பின்னர், என்னுடைய அம்மா, என்னிடம் வந்து கையை மிகவும் இறுக்கிப் பிடித்து, சூப்பராக இசையமைத்திருக்கிறாய் என்று மெய்சிலிர்த்தார். அதனை என்னால் மறக்கவே முடியாது. 

நான் அப்படியே உடைந்து போய் விட்டேன். என்னுடைய ஸ்டூடியோவில் என்னுடைய அம்மாவின் போட்டோவை வைத்திருக்கிறேன்.

அவருடைய மறைவை என்னால் இன்று வரை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. காரணம் என்னவென்றால், அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. வழக்கம் போல காலையில் நான் பாடலுக்கான ரெக்கார்டிங் வேலைகளில் இருந்தேன். அப்பொழுதே அம்மா இறந்து விட்டார். ஆனால் அப்பா என்னிடம் சொல்லவே இல்லை. 

அந்த வேலையை முடித்து விட்டு, மாலை வீட்டிற்கு வரும்பொழுது தான், என்னிடம் அப்பா இப்படி ஒன்று நடந்திருக்கிறது என்பதைச் சொன்னார். அதைக் கேட்ட பொழுது, நான் அப்படியே உடைந்து போய் விட்டேன். என்னுடைய ஸ்டூடியோவில் என்னுடைய அம்மாவின் போட்டோவை வைத்திருக்கிறேன். அவ்வப்போது அதனை பார்ப்பது உண்டு. பேசுவது உண்டு. கதறி அழுவதும் உண்டு. 

நான் சிறுவயதிலிருந்தே நான் அம்மா பிள்ளை தான். என்னுடைய முகமும், அவருடைய முகமும் ஒன்று போல இருக்கும்” என்று பேசினார்.

அம்மா ஏன் எனக்கு மட்டும் இதெல்லாம் நடக்கிறது என்று கேட்டு இருக்கிறேன். நீங்கள் இருந்திருந்தால், எனக்கு இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் நடந்து இருக்காது என்று சொல்லி இருக்கிறேன்.  நீங்கள் ஒரு வேளை இங்கு இருந்திருந்தால், எனக்கு நடந்த இந்த விஷயங்களை, நீங்கள் தட்டிக் கேட்டிருப்பீர்களே என்று கதறி இருக்கிறேன். 

சில பேர் நம்முடைய வாழ்க்கையில் இல்லை என்றால் இல்லைதான். அவர்களை நாம் எந்த நபர்களைக் கொண்டும் நிரப்பிட முடியாது. இன்னொருவர் இருந்தால் கூட, அது வேறொருவராக மட்டும்தான் இருக்க முடியுமே, தவிர அவறாக இருக்க முடியாது. நான் சிறுவயதிலிருந்தே நான் அம்மா பிள்ளை தான். என்னுடைய முகமும், அவருடைய முகமும் ஒன்று போல இருக்கும்” என்று பேசினார். 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: