Nayanthara Vs Dhanush: நெட்பிளிக்ஸ் வழக்கை தள்ளுபடி செய்த கோர்ட்.. இனி என்ன நடக்க போகிறது?
Nayanthara Vs Dhanush: தனுஷ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி நெட்பிளிக்ஸ் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Nayanthara Vs Dhanush: நயன்தாரா பியாண்ட் தி ஃபேரிடேல் ஆவணப் படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை பயன்படுத்தியிருந்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனுஷ், நயன்தாரா மற்றும் நெட்பிளிக்ஸ்க்கு எதிராக ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு நெட்பிளிக்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
நெட்பிளிக்ஸ் மனு
முன்னதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ்சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ஆரம்ப கட்டத்திலேயே நிராகரிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.
ஆரம்பத்திலே தள்ளுபடி செய்ய வேண்டும்
மேலும், இதுகுறித்த வழக்கு விசாரணை நீதிமதி குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது. அதில், நெட்பிளிக்ஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பார்த்தசாரதி, திரைப்படத்தில் இடம்பெறாத படப்பிடிப்பு காட்சிகளுக்கு வொண்டர்பார் நிறுவனம் பதிப்புரிமை கோர முடியாது. படப்பிடிப்பு காட்சிகள் 2020ம் ஆண்டே வெளியான போதும், தாமதமாக 2024 ம் ஆண்டு தான் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.
காப்புரிமை இல்லை
மேலும், இந்த வழக்கை காப்பிரைட் சட்டத்தின் கீழ் தொடர முடியாது. இந்த காட்சிகள் கடந்த 2020 ம் ஆண்டே முதலே பொதுத்தளத்தில் உள்ளது. மூன்றாவது நபர் தான் இந்த காட்சிகளை எடுத்தார் என வாதிட்டார்.
அதுமட்டுமின்றி, ஆவணப்படம் வெளியான 1 வாரம் கழித்து தனுஷ் தரப்பு வழக்கு தொடர்ந்ததால் இதனை ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வழியுறுத்தினார்.
எல்லாவற்றிற்கும் காப்புரிமை
பின்னர் தனுஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட உடை, சிகை அலங்காரம் என அனைத்திற்கும் காப்புரிமை உள்ளதால் இவை அனைத்தும் வொண்டர் பார் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றார்.
வழக்கு தள்ளுபடி
இந்நிலையில், இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வொண்டர்பார் நிறுவனத்தின் வழக்கை நிராகரிக்க வேண்டும் என நெட்பிலிக்ஸ் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அத்துடன், வொண்டர்பார் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை பிப்ரவரி 5ம் தேதிக்கு தள்ளி வைத்தும் உத்தரவிட்டார்.
தனுஷ் - நயன்தாரா வழக்கு பின்னணி
நடிகை நயன்தாரா, தனது திருமண ஆவண படத்துக்கு தனது வொண்டர் பார் நிறுவனம் தயாரித்த நானும் ரெளடிதான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி, ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் தரப்பில் நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.
இதற்கு தனுஷ் மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து நடிகை நயன்தாரா தரப்பில் வெளியிட்ட அறிக்கை திரையுலகினர் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
தனுஷ் சார்பில் மனு
பின், நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தரப்பில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் மற்றும் நடிகை நயன்தாராவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், மும்பையை சேர்ந்த நெட்பிலிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், தனுஷ் மற்றும் நயன்தாரா தரப்புக்கு இடையேயான பிரச்சனை தமிழக அதிகார வரம்புக்குள் நடைபெற்றுள்ளதால், சென்னை உயர் நீதிமன்றத்திலேயே இந்த உரிமையியல் வழக்கு தொடரலாம் எனஉத்தரவிட்டார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்