'அடிச்சான் பாரு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்.. வாசன் அவுட்.. மஞ்சள் வீரன் ஹீரோ இவர்தான்! - குஷியில் கூல் சுரேஷ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'அடிச்சான் பாரு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்.. வாசன் அவுட்.. மஞ்சள் வீரன் ஹீரோ இவர்தான்! - குஷியில் கூல் சுரேஷ்

'அடிச்சான் பாரு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்.. வாசன் அவுட்.. மஞ்சள் வீரன் ஹீரோ இவர்தான்! - குஷியில் கூல் சுரேஷ்

Kalyani Pandiyan S HT Tamil
Published Oct 14, 2024 01:09 PM IST

மஞ்சள் வீரன் திரைப்படத்தில் கதாநாயகனாக டிடிஎஃப் வாசன் கமிட் செய்யப்பட்டு நீக்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக நடிகர் கூல் சுரேஷ் கதாநாயகனாக கமிட் செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

'அடிச்சான் பாரு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்.. வாசன் அவுட்.. மஞ்சள் வீரன் ஹீரோ இவர்தான்! - குஷியில் கூல் சுரேஷ்
'அடிச்சான் பாரு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்.. வாசன் அவுட்.. மஞ்சள் வீரன் ஹீரோ இவர்தான்! - குஷியில் கூல் சுரேஷ்

கூல் சுரேஷ்
கூல் சுரேஷ்

இது குறித்து வெளியான வீடியோவில், மஞ்சள் வீரன் படக்குழுவினருடன் மாலை போட்டுக்கொண்டு பேசிய கூல் சுரேஷ், “ நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுதான். உங்கள் மனதிற்குள் நினைப்பீர்கள் அல்லவா அதுதான். விரைவில் உங்களுக்கு செய்தி வரும் Wait and see.. என்று கூறியதோடு, மஞ்சள் வீரன் படத்தின் இயக்குநர் செல்அம்மின் மீது பூ தூவி, மஞ்சள் வீரனே வா... மகாதேவனே வா என்று புகழ் பாடியிருக்கிறார். இதன் மூலம் மஞ்சள் வீரன் படத்தில் கூல் சுரேஷ் கதாநாயகனாக நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

முன்னதாக, மஞ்சள் வீரன் இயக்குநர் தனக்கு துரோகம் இழைத்து விட்டதாக டிடிஎஃப் வாசன் பேசினார்.

அதில் அவர், “மஞ்சள் வீரன் திரைப்படத்தை பொறுத்த அளவுக்கு, ஒரே ஒரு போட்டோ ஷூட் மற்றும் பட பூஜை மட்டுமே நடந்திருக்கிறது. பட பூஜைக்கும், அவர்களது அலுவலக முன்பணத்திற்கும் நான்தான் பண உதவி செய்தேன். நான் அதற்காக பணத்தை ஏமாற்றி விட்டார்கள் என்றெல்லாம் கூற மாட்டேன். அவர் நெருக்கடியில் இருப்பதை என்னால் உணர முடிந்த காரணத்தால் நான் என்னால் முடிந்த உதவியை அவருக்குச் செய்தேன்.

காசு வேண்டாம்

அந்தக் காசெல்லாம் எனக்கு தற்போது திரும்ப வேண்டாம். போன் அடித்தால் அவர் எடுக்காமல் உடன் இருப்பவரை வைத்து பேச வைப்பதற்கான காரணம் கூட இதுவாக இருக்கலாம். அதற்காகத்தான் நான் சொல்கிறேன். படத்தின் 30 சதவீத வேலைகள் முடிந்த நேரத்தில் நான் படத்தில் இருந்து நீக்கப்பட்ட தாக பேசி இருக்கிறார். அது பொய்.

நான் பதிலடி கொடுப்பேன்

நான் கொடுத்த காசை வைத்து நீங்கள் வாழ்க்கையில் பெரிய ஆளாக வாருங்கள். அது எனக்கு சந்தோசம்தான். என்னுடைய வாழ்க்கையில் என்னிடம் இருந்த நிறைய விஷயங்களை நான் இழந்து இருக்கிறேன்; எவ்வளவோ விஷயங்களில் நான் ஏமாந்து இருக்கிறேன். இன்னும் என்னெல்லாம் நடக்கப் போகிறதோ என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு இப்படிப்பட்ட ஒரு துரோகத்தை செய்த அவர்களுக்கு வெற்றியின் மூலம் பதிலடி கொடுப்பேன்” என்று பேசினார்” என்று பேசினார்.

இதற்கு பதிலடி கொடுத்த செல்அம், “சரியான ஆம்பளையாக இருந்தால், இங்கிருக்கும் எல்லா பத்திரிக்கை முன்னரும் வரவேண்டும். என்னுடன் அவர் நேருக்கு நேராக அமர்ந்து பேட்டிக்கொடுக்க வேண்டும். அப்போது உண்மை தெரியும். போனில் பேசுவது, பின்னால் இருந்து ஒளிந்து கொண்டு பேசுவது, பாம்பேவில் இருந்து கொண்டு பேசுவதெல்லாம் என்னிடம் நடக்காது. தைரியம் இருந்தால், நேரில் வா என்றைக்கு தேதி என்று சொல். அன்றைய தேதியில் நான் உன்னை நேருக்கு நேராக சந்திக்கிறேன்” என்றார்.

இதற்கிடையே, அந்த பேட்டியில் அவரிடம் பேட்டி எடுத்த தொகுப்பாளர், டிடிஎஃப் வாசனின் நண்பரான அஜீஸூக்கு போன் செய்து, செல்அம் உடன் பேச வைத்தார். அப்போது பேசிய அஜீஸ், நான் அவர்களுடன் கிட்டத்தட்ட ஒன்றை வருடங்களாக பயணித்துக் கொண்டிருக்கிறேன். டி டி எஃப் வாசன், அவரைப்பற்றி பேசி பணம் சம்பாதித்து விட்டார் என்று பேட்டி கொடுத்திருக்கிறார் உண்மையில் டிடிஎப் வாசனை கமிட் செய்வதற்கு முன்னால் இவர் யார் என்று யாருக்கும் தெரியாது. அவருடன் நேர்காணல் வேண்டும் என்கிறாரா? அவருடன் நேர்காணல் செய்து நாங்கள் என்ன சம்பதிக்கப்போகிறோம். அவர் கூறுவது அனைத்தும் பொய்” என்று கூறினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.