'மறக்குமா நெஞ்சம்..' ஏ.ஆர். ரஹ்மான் கான்செர்ட் பஞ்சாயத்து.. 50 ஆயிரம் கட்ட ஆர்டர் போட்ட கோர்ட்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'மறக்குமா நெஞ்சம்..' ஏ.ஆர். ரஹ்மான் கான்செர்ட் பஞ்சாயத்து.. 50 ஆயிரம் கட்ட ஆர்டர் போட்ட கோர்ட்..

'மறக்குமா நெஞ்சம்..' ஏ.ஆர். ரஹ்மான் கான்செர்ட் பஞ்சாயத்து.. 50 ஆயிரம் கட்ட ஆர்டர் போட்ட கோர்ட்..

Malavica Natarajan HT Tamil
Updated Jun 09, 2025 06:32 PM IST

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் எடுத்தும் நிகழ்ச்சியை காண முடியாதவருக்கு, 50 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

'மறக்குமா நெஞ்சம்..' ஏ.ஆர். ரஹ்மான் கான்செர்ட் பஞ்சாயத்து.. 50 ஆயிரம் கட்ட ஆர்டர் போட்ட கோர்ட்..
'மறக்குமா நெஞ்சம்..' ஏ.ஆர். ரஹ்மான் கான்செர்ட் பஞ்சாயத்து.. 50 ஆயிரம் கட்ட ஆர்டர் போட்ட கோர்ட்..

நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு

அந்த சமயத்தில், நிகழ்ச்சி நடந்த போது கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக நிகழ்ச்சியை கண்டு ரசிக்க முடியாததால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், டிக்கெட் கட்டணத்தை வட்டியுடன் திருப்பித் தர கோரியும் சென்னையை சேர்ந்த அர்ஜுன் என்பவர் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

இழப்பீடு வழங்க உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தும் நிகழ்ச்சியை காண முடியாதவருக்கு, 50 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க, நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஏ.சி.டி.சி. நிறுவனம் , 50 ஆயிரம் ரூபாயை இழப்பீடாகவும், 5 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவாகவும் மொத்தம் 55 ஆயிரம் ரூபாயை இரண்டு மாதங்களில் மனுதாரர் அர்ஜுனுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

விமர்சனங்களை சந்தித்த நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரஹ்மான் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆரம்பத்தில், இந்த நிகழ்ச்சி சில ஒழுங்கமைப்புக் குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக பெரும் விமர்சனங்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

மன்னிப்பு கோரிய ரஹ்மான்

சர்ச்சைகள் காரணமாக, ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டதுடன், இந்த நிகழ்ச்சியை மீண்டும் நடத்த உறுதி அளித்தார். அதன்படி, 2023 செப்டம்பர் 10 ஆம் தேதி அதே புளூ லாகூன் கடற்கரையில் ஒரு இலவச நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.