Thalapathy Vijay: சர்ச்சை ஆரம்பம்.. ‘ரத்த வெறியை தூண்டுகிறார்' - விஜய் மீது டி.ஜி.பி ஆஃபிசில் புகார்! -என்ன பஞ்சாயத்து?
நடிகர் விஜய் மீது யார் புகார் கொடுத்தாலும், அவர்கள் நற்பணி இயக்கத்தை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களை மிரட்டும் தொணியில், வெடிச்சா என் பாய்ஸ் தான் என்ற வார்த்தையால் மிரட்டுகிறார் விஜய்.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம், தி கோட். அதாவது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest Of All Time) என்பதின் சுருக்கமே ‘ தி கோட்’. இது விஜய்யின் 68ஆவது படமாகும். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்துவருகிறார்.
தவிர, இந்தப் படத்தில் பிரசாத், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கும் நிலையில், படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘விசில் போடு’ தமிழ் புத்தாண்டு தின ஸ்பெஷலாக நேற்று வெளியானது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான இந்த பாடல் பெரிதாக நன்றாக இல்லை என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. இந்த நிலையில், தற்போது சமூக ஆர்வலர் ஒருவர், சென்னை டிஜிபி அலுவலகத்தில் விஜய் மீது புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார்.
அந்த புகாரில், “நடிகர் விஜய் பிரச்சினையை தூண்டும் வகையிலும், போதை பொருட்களை ஆதரிக்கும் வகையிலும், தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். லியோ திரைப்படத்தில் கூட, போதை பொருளை ஆதரித்து பாடல் வெளியிட்டார் என்பதையும் இங்கு சுட்டி காட்டுகிறேன்.
தற்போது விஜய் தனது சொந்தக் குரலில் பாடிய பாடலின் (விசில் போடு) வரிகள், நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், மதுப்பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் இருக்கிறது.
குறிப்பாக பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா? என்ற வரியில் தணிக்கை குழு வாரிய சட்டத்தின்படி, போதை பொருள் மற்றும் மதுபான பாட்டில்கள் காட்சிகளாக இடம் பெறும் இடங்களில், விழிப்புணர்வு வாசகம் வைக்க வேண்டும். ஆனால் நடிகர் விஜய் அதை வைக்கவில்லை.!
பாடலில் அதிரடி கலக்கட்டுமா? சேம்பைன தான் தொறக்கட்டுமா? என்ற பாடல் வரி இடம் பெற்று இருக்கிறது. தமிழ் சினிமாவில் மத்தியில் போதைப்பொருள் மற்றும் ரவுடியிசத்தை ஆதரிக்கும் வகையில், அதிரடி காட்டட்டுமா என்ற வரியும் இடம்பெற்றுள்ளது.
பாடல் வரிகள், தமிழக அரசியலில் சில தலைவர்களை சுட்டிக்காட்டும் வகையில் இருக்கிறது. குறிப்பாக சீமான், நடிகர் கமல் மற்றும் மன்சூர் அலிகான் போன்ற நடிகர்களைச் சுட்டிக்காட்டும் வகையில், மைக்கை கையில் எடுக்கட்டுமா என்ற வாசகம், ஒருவர் மனதை புண்படுத்தும் வகையிலும் மற்றும் வார்த்தைகளால் துன்புறுத்தும் வகையிலும் உள்ளது.
நடிகர் விஜய் மீது யார் புகார் கொடுத்தாலும், அவர்கள் நற்பணி இயக்கத்தை வைத்து, சம்பந்தப்பட்ட நபர்களை மிரட்டும் தொணியில், வெடிச்சா என் பாய்ஸ் தான் என்ற வார்த்தையால் மிரட்டுகிறார்.
நடிகர் விஜய் மணிப்பூர் கலவரத்தில் குரல் கொடுக்கவில்லை, குறிப்பாக நாட்டில் எது நடந்தாலும், கண்டும் காணாமல் தன் படத்திற்காக வாயை திறக்கும் நடிகராக மட்டுமே நடிகர் விஜய் உள்ளார் என்பது அனைவரும் அறிந்த உண்மையே.
ரத்தம் பத்தட்டும், விசில் போடு ஹே நண்பா, நண்பி விசில் போடு என்று இளைஞர்கள் மத்தியில், ரத்த வெறியை தூண்டும் வகையில் நடிகர் விஜய் செயல்பட்டு வருகிறார்.” என்று அவர் அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்