Kadhal Sukumar: தனி குடித்தனம்.. நகைகளை வாங்கி திருமணம் செய்வதாக ஏமாற்றிவிட்டார்.. காதல் சுகுமார் மீது துணை நடிகை புகார்
Complaint Against Kadhal Sukumar: திருமணம் செய்வதாக கூறி தனி குடித்தனம் நடத்திவிட்டு பணம், நகைகளை வாங்கி ஏமாற்றிவிட்டதாக காதல் சுகுமார் மீது துணை நடிகை புகார் அளித்துள்ளார்.

தமிழ் சினிமா ரசிகர்களை தனது அற்புதமான காமெடியால் வயிறு குலுங்கு சிரிக்க வைத்து வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவரை போன்ற தோற்றத்திலும், இவரது பாடிலாங்குவேஜ், டயலாக் டெலிவரியை அப்படியே வெளிப்படுத்தும் விதமாகவும் பல்வேறு காமெடியன்கள் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார்கள். ஆனால் அவர்களில் யாரும் வடிவேலுவுக்கு இணையாக ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கவில்லை.
அந்த வகையில் பார்ப்பதற்கு வடிவேலு போன்ற சாயல், பேச்சு என இருந்து வருவதுடன், தமிழ் சினிமா தனக்கென ஒரு இடத்தையும் பிடித்திருப்பவர் காதல் சுகுமார். ஆரம்பத்தில் இவர் வடிவேலு போலவே காமெடிகள் செய்து வந்தாலும், காதல் படத்தில் சோலவாக இவர் வெளிப்படுத்திய காமெடி பெர்பார்மென்ஸால் காதல் சுகுமார் என்று அழைக்கப்பட்டார். நடிகனாக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் தமிழில் சில படங்களை இயக்கியுள்ளார் காதல் சுகுமார்.
ஏமாற்றிவிட்டதாக புகார்
காதல் சுகுமார் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சில ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு, நகை மற்றும் பணத்தை பெற்று மோசடி செய்துவிட்டதாக துணை நடிகை ஒருவர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், காதல் சுகுமாரிடம் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.