புதிய அவதாரம் எடுக்கும் ஈசன்.. பார்வதிக்கு நேரும் துன்பத்தை சிவன் எப்படிப் போக்கினார்? சிவசக்தி திருவிளையாடல் இந்த வாரம்
உலகத்தைக் காக்கும் ஈசன் புதிய அவதாரம் எடுத்து, பார்வதிக்கு நேரும் துன்பத்தை சிவன் எப்படி போக்கினார் என்பது சிவசக்தி திருவிளையாடல் வரும் வாரம் எபிசோடில் இடம்பெறவுள்ளது.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், மிகப் பிரமாண்டமாகவும் பார்ப்போரை ஈர்க்கும் வகையில் மிகுந்த சுவாரஸ்யத்தோடும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது. சிவசக்தி திருவிளையாடல் ஆன்மிகப் புராண தொடர் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் வெற்றித் தொடராக ஜூன் மாதம் முதல் ஒளிப்பரப்பாகி வருகிறது. சிவசக்தி திருவிளையாடல் வரும் வாரம் நடக்கபோவது என்ன என்பதை பார்க்கலாம்
சங்கசூரன் வதம் முடிந்ததும் அசுர குல அரசனாகப் பொறுப்பேற்கும் சும்பன், தானே சிவனாகும் ஆசை கொள்கிறான். தனது தம்பியை கொன்ற இந்திரனையும் தேவர்களையும் பழிவாங்கத் துடிக்கிறான் சும்பன். அதற்கு முதலில் மகாதேவர் சிவனை வலுவிழக்கச் செய்ய, அசுரன் அபஸ்மரனைப் பாதாளச் சிறையில் இருந்து விடுவிக்கிறான்.
நினைவை இழக்கும் பார்வதி
அபஸ்மரன், மும்மூர்த்திகளைத் தவிர எல்லோரையும் வசியம் செய்து, அவன் சொல்படி கேட்கவைக்கும் வல்லமை கொண்டவன். அவன், பார்வதி தேவியின் ஞாபகங்களை அனைத்தையும் வசியம் செய்து, பார்வதி தான் ஒரு லோகமாதா என்கிற நினைவை அழிக்கிறான். அவளது மணவாழ்வு பற்றிய அத்தனை நினைவுகளையும் அழிக்கிறான்.
இதன் பின்னர் பார்வதிக்கு சிவன், யார் என்றே தெரியவில்லை. பார்வதிக்கு பழைய நினைவுகளைக் கொண்டுவரும் போராட்டத்தில் சிவன் கவனத்தைக் குவிக்க, அபஸ்மரனின் அசுர அட்டகாசத்தால் பூலோக மானிடர் முதல் எல்லோரும் சிவனுக்கு எதிராகத் திரும்புகின்றனர். அவனைச் சிறைப்பிடிக்க வந்த நாராயணரைக்கூட சிறுசூழ்ச்சிசெய்து பின்னடவை அடையச் செய்கிறான் அபஸ்மரன்.
இவனின் வசியத்தில் பார்வதி மட்டுமல்ல, சிவபார்வதி அம்சமான கார்த்திகேயன்கூட பாதிக்கப்படுகிறான். அபஸ்மரனைக் கொன்றால் பிரஞ்சத்தில் உள்ள அனைவரும் தங்கள் நினைவு ஒழுங்கை இழந்துவிடும் ஆபத்தில் மாட்டிக்கொள்கிறது பிரபஞ்சம். இதற்கு ஒரே தீர்வு சிவன் கையில்தான் இருக்கிறது என பிரம்மன், நாராயணர், லட்சுமி தேவி, சரஸ்வதி தேவி எல்லோரும் நம்புகின்றனர்.
பார்வதியையும், கார்த்திக்கேயனையும் சேர்த்து இந்தப் பிரபஞ்சத்துக்கு வந்த ஆபத்தைக் காக்க, சிவன் நடராஜர் அவதாரம் எடுக்கிறார்.
ஆட்டம் காணும் அசுர குலம்
அசுர அரசன் சங்கசூரனை மகாதேவர் வதம் செய்த பிறகு அசுர குலம் பயத்தில் ஆட்டம் காண்கிறது. அசுர குல குரு சுக்கிராச்சார்யரும், அசுர குல மாதா திதியும் உடைந்துபோகின்றனர். இந்த நெருக்கடியான காலத்தில் அசுரன் சும்பனும், அவனது தம்பி நிசும்பனும் அசுர குலத்தின் புதிய நம்பிக்கையாக வளர்கின்றனர்.
ஒரு பெண்ணின் கையால்தான் அவர்களுக்கு மரணம் கிடைக்கும் என பிரம்மனிடம் இருந்து வரம் பெறுகின்றனர். ஒரு கட்டத்தில் அசுர அரசனாகும் சும்பன் செய்த காரியத்தால், சிவன் - பார்வதி வாழ்க்கையில் ஒரு துன்பம் நேர்கிறது. அதனைக் களையும் கர்மத்தின் இறுதியில் உலக மக்களுக்கு ஒரு புதிய வழிப்பாட்டு முறையும் சிவனின் புதிய அவதாரமும் நிகழ்கின்றன. அவை என்ன? உலகத்தைக் காக்கும் ஈசனின் வாழ்க்கையில் நேர்ந்த துன்பம் என்ன? பார்வதிக்கு நேரும் துன்பத்தை சிவன் எப்படிப் போக்கினார்?
விறுவிறுவென நகரும் சிவசக்தி திருவிளையாடல் மெகா தொடரை உங்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு காணத் தவறாதீர்கள்.