சனியின் சூழ்ச்சி.. சிவனுடன் மோதும் கார்த்திகேயன் - திருப்புமுனை காட்சிகளுடன் செல்லவுள்ள சிவசக்தி திருவிளையாடல் எபிசோட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சனியின் சூழ்ச்சி.. சிவனுடன் மோதும் கார்த்திகேயன் - திருப்புமுனை காட்சிகளுடன் செல்லவுள்ள சிவசக்தி திருவிளையாடல் எபிசோட்

சனியின் சூழ்ச்சி.. சிவனுடன் மோதும் கார்த்திகேயன் - திருப்புமுனை காட்சிகளுடன் செல்லவுள்ள சிவசக்தி திருவிளையாடல் எபிசோட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 27, 2024 09:20 AM IST

சிவபெருமான், கார்த்திகேயன் இடையிலான போர், இந்த சூழலில் கார்த்திகேயன் தேவயானை திருமணம் நடக்குமா? அடுத்து என்ன நடக்கும் என்ற திருப்புமுனை காட்சிகளுடன் சிவசக்தி திருவிளையாடல் அடுத்த எபிசோட் ஒளிபரப்பாகவுள்ளன.

சனியின் சூழ்ச்சி.. சிவனுடன் மோதும் கார்த்திகேயன் - திருப்புமுனை காட்சிகளுடன் செல்லவுள்ள சிவசக்தி திருவிளையாடல் எபிசோட்
சனியின் சூழ்ச்சி.. சிவனுடன் மோதும் கார்த்திகேயன் - திருப்புமுனை காட்சிகளுடன் செல்லவுள்ள சிவசக்தி திருவிளையாடல் எபிசோட்

சிவனுக்கு எதிராக திரும்பும் கார்த்திகேயன்

அசுர மாதா திதிக்கு, சிவன் பார்வதியை அழிக்க இருந்த அனைத்து மார்க்கமும் அடைக்கப்படுகிறது. இதனால், சூர்ய புத்திரனான சனி தேவனை நாடுகிறார் அசுர மாதா திதி. சனி பகவான், சிவன் பார்வதியின் குடுபத்துக்கு எதிராக திரும்புகிறார். கார்த்திகேயனை சனியின் பிடியில் சிக்க வைத்து, கார்த்திகேயனை சிவனுக்கு எதிராக திருப்புகிறார். இதனால் கைலாயத்தில் பிரச்னை உருவாகிறது.

இந்திரனின் மகளான தேவயானையயை திருமணம் செய்ய கார்த்திகேயன் விரும்புகிறார். ஆனால், சிவன் மீது கொண்ட வன்மத்தால், கார்த்திகேயன் தேவயானை திருமணத்துக்கு இந்திரன் மறுத்துவிடுகிறார். இதனால் இந்திர லோகத்தில் இருந்து தேவயானையயை கடத்தி செல்கிறார் கார்த்திகேயன்.

சிவபெருமான், கார்த்திகேயன் இடையே போர்

இதனை கண்ட சிவபெருமான் அவர்களை தடுக்கிறார். அதனால் சிவபெருமான் மீது கோபம் கொள்ளும் கார்த்திகேயன், அவருடன் போருக்கு தாயாரகிறான். அவர்களின் போரை தடுக்க வழி தெரியாமல் தேவர்கள் கலங்கி நிற்கிறார்கள்.

சிவபெருமான், கார்த்திகேயன் போரை யார் தடுப்பார்கள்? கார்த்திகேயன் தேவயானை திருமணம் நடக்குமா? அடுத்து என்ன நடக்கும் என்ற திருப்புமுனை காட்சிகளுடன் அடுத்த எபிசோடுகள் செல்ல இருக்கிறது.

சிவன் நடராஜர் அவதாரம் எடுக்கும் முன் கதை

இந்த வாரம் ஒளிபரப்பான எபிசோடுகளின் முன் கதையாக,அபஸ்மாரன் பார்வதிதேவியின் நினைவுகளை அழிக்கிறான். அதன் பிறகு, மக்களின் நினைவுகளை குழப்பி பிரபஞ்சத்தில் பெரும் குழப்பத்தை உருவாக்குகிறான். அபஸ்மரனை அழிக்க நினைக்கும் கார்த்திகேயனும் அவன் பிடியில் சிக்குகிறார். கார்த்திகேயன் உள்பட தேவர்கள் அனைவரும் அசுர அரசன் சும்பனுக்கு துதிபாடத் தொடங்குகிறார்கள். மொத்த அசுர குலமும் குதுகலிக்கிறது. அபஸ்மரனை அடக்க, சிவன் நடராஜர் அவதாரம் எடுக்கிறார். அபஸ்மரனை அழித்தால், பிரபஞ்சம் சமநிலை இழக்கும் அபாயம் இருக்கிறது. அதனால் அபஸ்மரனை அழிக்காமல் தான் காலுக்கு அடியில் அழுத்தி வைக்கிறார் நடராஜர்.

அபஸ்மரனை நடராஜரிடம் இருந்து விடுதலை செய்ய, அசுர குரு சுக்ராச்சாரியார் யோசனை அளிக்கிறார். அதன் படி அறுபதாயிரம் சூர்யா புத்திரர்களின் அஸ்தியைக் கொண்டு ஆயுதம் ஒன்றை தயாரிக்க வேண்டும் என்று சொல்கிறார் சுக்ராச்சாரியார். எப்படி இது சாத்தியம் என்று சும்பன் கேட்க, சுக்ராச்சாரியார் ஏற்கனவே அறுபதாயிரம் அஸ்தி தயாராக உள்ளது. அதை எடுத்து வந்தால் போதும் என்று அது பற்றி விளக்குகிறார்.

முன்னொரு காலத்தில் சூர்ய குலத்தைச் சேர்ந்த மன்னன் சாகரன் அஸ்வமேத யாகம் செய்தான். அவன் குதிரை சொர்க்கத்தையும் கடக்கும் என இந்திரன் அஞ்சினான். அதனால் சூழ்ச்சி செய்து அந்த குதிரையை கபில முனியின் ஆஸ்ரமத்தில் கட்டிவைத்தான். குதிரையைத் தேடிச் சென்ற, சாகரனின் அறுபதாயிரம் புத்திரர்கள் தவத்தில் இருக்கும் கபில முனிதான் இந்த வேலையைச் செய்தது என்று தவறாக நினைத்தார்கள். அவரின் தவத்தினைக் கலைத்தார்கள். கடும் கோபம் கொண்ட முனி அறுபதாயிரம் புத்திரர்களையும் சாபத்தினால் எரித்துவிட்டார்.

இந்திரனின் சுழ்ச்சியால் கபில முனியின் கோபத்தில் சாம்பலானார்கள் அறுபதாயிரம் சூர்ய புத்திரர்கள். அந்த அஸ்தி இன்னும் உள்ளது. அதன் மூலம் தான் ஆயுதம் தயாரிக்க திட்டமிட வேண்டும் என்கிறார்.

பகீரதனுக்கு வரம் கொடுக்கும் பிரம்ம தேவர்

மறுபுறம் சூர்ய குலத்தைச் சேர்ந்த பகீரதன் தன் முன்னோர்கள் அறுபதாயிரம் பேருக்கும் மோட்சம் கிடைக்க பிரம்மதேவரை நோக்கி தவம் இருக்கிறார். மும்மூர்த்திகள் அசுரர்களின் சூழ்ச்சியை முறியடிக்க திட்டமிடுகிறார்கள். பிரம்ம தேவர் பகீரதனுக்கு வரம் கொடுக்க முடிவு செய்கிறார். அதன்படி, பிரம்மனின் கமண்டலத்தில் இருந்து கங்கையை பூமிக்கு அனுப்பி அறுபதாயிரம் சூர்ய புத்திரர்களின் அஸ்திக்கும் பாவ விமோசனம் அளிக்கும்படி பகீரதன் கேட்கிறார். பிரம்மா தயங்குகிறார்.

பகீரதன் ஏன் வரம் தர மறுக்கிறீர்கள் என்று கேட்கிறார். அப்போது பிரம்மா கங்கையின் வேகத்தை பூமியால் தாங்க முடியாது என்று எடுத்துரைகிறார். அப்போது சிவன் தன் ஜடாமுடியால் தான் கங்கையை தாங்குவதாக கூறி பிரம்மாவை வரம் தரச் சொல்கிறார். கங்கை பூமிக்கு வந்து அசுரர்களின் திட்டத்தை முறியடிக்கிறார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.