தியா யார்? நிஷாந்தி யார்? முடிச்சுகள் அவிழும் நேரம் - மோகினி ஆட்டம் ஆரம்பம் இந்த வார எபிசோட் அப்டேட்
அக்னிசூத்ராவால் உயிரை இழக்க தியா யார், நிஷாந்தி யார் என்று முடிச்சுகள் அவிழும் விதமாக மோகினி ஆட்டம் ஆரம்பம் இந்த வார எபிசோட் அமையவுள்ளது. இது பற்றி விவராகமாக பார்க்கலாம்

தியா யார்? நிஷாந்தி யார்? முடிச்சுகள் அவிழும் நேரம் - மோகினி ஆட்டம் ஆரம்பம் இந்த வார எபிசோட் அப்டேட்
தமிழில் ஒளிபரப்பாகும் டிவி சீரியல்களில் திகில் கலந்த த்ரில்லர் தொடராக மோகினி ஆட்டம் ஆரம்பம் இருந்து வருகிறது. இந்த சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 8:30 மணிக்கு கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலின் வரும் வாரத்துக்கான எபிசோட் அப்டேட் என்ன என்பதை பார்க்கலாம்
மரத்தில் கட்டப்பட்ட நிஷாந்தி
தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தியா, நிஷாந்தியின் மூக்குத்தியை திருப்பி வழங்குவதுபோல் நடிக்கிறாள். ஆனால், நிஷாந்தியை புனித ஆலமரத்துக்கு கட்ட முயலும் முயற்சியில் தியா தோல்வியடைகிறாள்.
காரணம் தனது கணவனாகிய மோகனுடன் இருந்து நிஷாந்தியை மரத்தில் கட்ட வேண்டும் என்று அறிந்துகொள்கிறாள். சூழலும் அவளுக்கு ஆதரவாய் அமைகிறது. மோகனும், தியாவும் ஒன்றிணைந்து நிஷாந்தியை சுமங்கலி தாலி கொண்டு மரத்தில் காட்டுகின்றனர்