தோற்றத்தில் தியாவை போல் மற்றொரு மோகினி உருவம்.. யார் இந்த ஷலாகா? புதிய திருப்பத்துடன் மோகினி ஆட்டம் ஆரம்பம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தோற்றத்தில் தியாவை போல் மற்றொரு மோகினி உருவம்.. யார் இந்த ஷலாகா? புதிய திருப்பத்துடன் மோகினி ஆட்டம் ஆரம்பம்

தோற்றத்தில் தியாவை போல் மற்றொரு மோகினி உருவம்.. யார் இந்த ஷலாகா? புதிய திருப்பத்துடன் மோகினி ஆட்டம் ஆரம்பம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 12, 2024 04:58 PM IST

தோற்றத்தில் தியாவை போல் மற்றொரு மோகினி உருவமாக ஷலாகா தோன்றுகிறாள். யார் இந்த ஷலாகா என்கிற பின்னணி சொல்லும் விதமாக புதிய திருப்பத்துடன் கூடிய காட்சிகள் மோகினி ஆட்டம் ஆரம்பம் சீரியலில் இடம்பெறவுள்ளது.

தோற்றத்தில் தியாவை போல் மற்றொரு மோகினி உருவம்.. யார் இந்த ஷலாகா? புதிய திருப்பத்துடன் மோகினி ஆட்டம் ஆரம்பம்
தோற்றத்தில் தியாவை போல் மற்றொரு மோகினி உருவம்.. யார் இந்த ஷலாகா? புதிய திருப்பத்துடன் மோகினி ஆட்டம் ஆரம்பம்

இதையடுத்து தொடரில் மற்றொரு திருப்பமாக தோற்றத்தில் தியாவை போல் உருவம் கொண்ட மற்றொரு மோகினியாக ஷலாகா உருவெடுக்கும் காட்சிகள் இடம்பெறவுள்ளன.

நிஷாந்தியை மீட்கும் மோகன்

மந்திர சாம்ராஜ்யத்தில், நிஷாந்தி மலர் புதர்களால் பிணைக்கப்பட்டு உதவிக்காக காத்திருக்கையில், மஹா அசுரனின் சதியையும் எதிர்கொண்டு, மோகன் நிஷாந்தியை மரணத்தின் விளிம்பில் இருந்து மீட்கிறான். பின்னர், ஒரு மாய மனிதர் வெளிப்பட்டு, மந்திர சாம்ராஜ்யத்திலிருந்து தப்பிப்பது இருவருக்கும் சாத்தியமில்லை என்று எச்சரிக்கிறது.

இதனை எதிர்கொண்டு, மகா அசுரன் நிஷாந்திக்கும் மோகனுக்கும் ஒரு சதி ஒப்பந்தம் வழங்குகிறார். அதாவது, மோகனை கைவிட்டால் நிஷாந்தி சக்தியுடன் வாழ முடியும்; நிஷாந்தியை விட்டு விலகினால் மோகனுக்கு சுதந்திரம் கிடைக்கும். ஆனால் இருவரும் இந்த சதியை மறுத்து, மகா அசுரனின் சிலையை தேட செல்கிறார்கள். அப்போது, நிஷாந்தியின் பாடலின் மூலம், மோகனுக்கு ஷாந்தனுவின் பழைய நினைவுகள் மீண்டும் எழுகின்றன.

தியாவை போல் அவதாரமெடுக்கும் ஷலாகா

ஆனால், நிஷாந்தி, மகா அசுரனின் தீய நோக்கங்களை உணர்ந்து, மோகனை பாதுகாக்க தன்னுடைய துணிச்சலான முடிவுகளை எடுக்கிறாள். மகா அசுரன், ஷலாகாவுக்கு அவளுடைய நித்திய இளமையை அளிக்க, மோகினியாக மாறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறான். இதுவே கதையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது.

எதிர் பாரத திருப்பங்களுடன் இவர்கள் இருவரின் கதை எப்படி முடிவடையும்? 'மோகினி ஆட்டம் ஆரம்பம்' தொடரின் திருப்பங்களை காண கலர்ஸ் தமிழில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு தவறாமல் பாருங்கள்.

புதிய வில்லியாகும் ஷலாகா

முன்னதாக, இந்த தொடரின் இந்த வார எபிசோட் அப்டேட்டாக, மகா அசுரனின் சூனியம் கலந்த ஆப்பிளை சாப்பிட்டதால், மோகனின் உடல் சூடேறி உயிருக்கு போராடும் நிலையில் உள்ளது. இதைப் பார்த்து தாங்க முடியாத நிஷாந்தி, தனது உயிரைப் பொருட்படுத்தாமல் மந்திர சக்தியால் மோகனை குணப்படுத்த உதவுகிறாள்.

ஆனால், நிஷாந்தியின் உதவியை அறிந்த மோகன், எரிச்சலுடன் அவளது செயல்களை ஒப்புக்கொள்ள மறுக்கிறான். கோவத்தில் மகா அசுரனை எதிர்கொள்கிறாள் நிஷாந்தி. ஆனால் மகா அசுரன், அவளை மந்திர சாம்ராஜ்யத்துக்கு அனுப்பி விடுகிறார். விஷ்வன், நிஷாந்தியை மீட்க மோகனின் உதவியை நாட, மோகன், வேறு வழியின்றி, அவனின் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறான்.

மந்திர சாம்ராஜ்யத்தில், நிஷாந்தி மலர் புதர்களால் பிணைக்கப்பட்டு, உதவிக்காக காத்திருக்கிறாள். அவள் குரலைக் கேட்டு மோகன் கண்டுபிடிக்கிறான். ஆனால் அவர்கள் அறியாது ஓர் மர்ம உருவம் ஒன்று அவர்களை நோட்டமிட்டு கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது யார் என்பது குறித்து காண்பிக்கப்படுகிறது. தோற்றத்தில் தியாவை போல் இருக்கும் ஷலாகா புதிய வில்லியாக அவதாரம் எடுப்பார் என தெரிகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.