மகா அசுரன் vs மோகன்: மோகினியை காப்பாற்றும் முயற்சியில் நடக்கப்போவது என்ன? மோகினி ஆட்டம் ஆரம்பம் இந்த வார எபிசோட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மகா அசுரன் Vs மோகன்: மோகினியை காப்பாற்றும் முயற்சியில் நடக்கப்போவது என்ன? மோகினி ஆட்டம் ஆரம்பம் இந்த வார எபிசோட்

மகா அசுரன் vs மோகன்: மோகினியை காப்பாற்றும் முயற்சியில் நடக்கப்போவது என்ன? மோகினி ஆட்டம் ஆரம்பம் இந்த வார எபிசோட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Dec 11, 2024 02:40 PM IST

மகா அசுரன் vs மோகன் இடையே மோதல் நடக்க, மோகினியை காப்பாற்றும் முயற்சியில் நடக்கப்போவது என்ன? என்கிற பரபரப்பு மிகுந்த காட்சிகளுடன் மோகினி ஆட்டம் ஆரம்பம் இந்த வார எபிசோட் காட்சிகள் இடம்பெறவுள்ளன.

மகா அசுரன் vs மோகன்: மோகினியை காப்பாற்றும் முயற்சியில் நடக்கப்போவது என்ன? மோகினி ஆட்டம் ஆரம்பம் இந்த வார எபிசோட்
மகா அசுரன் vs மோகன்: மோகினியை காப்பாற்றும் முயற்சியில் நடக்கப்போவது என்ன? மோகினி ஆட்டம் ஆரம்பம் இந்த வார எபிசோட்

நிஷாந்தியை மந்திர சாம்ராஜியத்துக்கு அனுப்பும் மகா அசுரன்

மகா அசுரனின் சூனியம் கலந்த ஆப்பிளை சாப்பிட்டதால், மோகனின் உடல் சூடேறி உயிருக்கு போராடும் நிலையில் உள்ளது. இதைப் பார்த்து தாங்க முடியாத நிஷாந்தி, தனது உயிரைப் பொருட்படுத்தாமல் மந்திர சக்தியால் மோகனை குணப்படுத்த உதவுகிறாள்.

ஆனால், நிஷாந்தியின் உதவியை அறிந்த மோகன், எரிச்சலுடன் அவளது செயல்களை ஒப்புக்கொள்ள மறுக்கிறான். கோவத்தில் மகா அசுரனை எதிர்கொள்கிறாள் நிஷாந்தி. ஆனால் மகா அசுரன், அவளை மந்திர சாம்ராஜ்யத்துக்கு அனுப்பி விடுகிறார். விஷ்வன், நிஷாந்தியை மீட்க மோகனின் உதவியை நாடுகிறான். இதற்கு மோகன் வேறு வழியின்றி, அவனின் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறான்.

நிஷாந்தியை மீட்கும் மோகன்

மந்திர சாம்ராஜ்யத்தில், நிஷாந்தி மலர் புதர்களால் பிணைக்கப்பட்டு, உதவிக்காக காத்திருக்கிறாள். அவள் குரலைக் கேட்டு மோகன் கண்டுபிடிக்கிறான். ஆனால் அவர்கள் அறியாது ஓர் மர்ம உருவம் ஒன்று அவர்களை நோட்டமிட்டு கொண்டிருக்கிறது. அந்த மந்திர சாம்ராஜ்யத்தில், மந்திரச் சூழலையும் மகா அசுரனின் சதியையும் எதிர்கொண்டு, நிஷாந்தியை மீட்டு, மோகனும் நிஷாந்தியும் தப்பிப்பார்களா? என்கிற எதிர்ப்பார்ப்புடன் இந்த வார காட்சிகள் இடம்பெற

இந்த ஆவலூட்டும் நிகழ்வுகளை பார்த்து ரசிக்க, கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் 'மோகினி ஆட்டம் ஆரம்பம்' தொடரை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு தவறாமல் பாருங்கள்

காதல் - அமானுஷ்யம் கலந்த கதை

இந்த புதிய கற்பனைக் கதை நிஷாந்தி (நியா ஷர்மா) என்ற தீய மந்திரக்காரியின் சூழ்ச்சிகளுக்கு எதிராக, தமக்கு நெருக்கமானோரை காக்கும் போராட்டத்தை மையமாகக் கொண்டுள்ளது. நிஷாந்தி, "சோலா ஷ்ரிங்கார்" எனப்படும் 16 அதிசய ஆபரணங்களைத் தேடி, நிரந்தர அழகையும் இளமையையும் பெற முயற்சிக்கிறாள்.

16 ஆபரணங்களை அடைய, அழகான ஒவ்வொரு பெண்களின் கணவரையும் யாகத்துக்கு பலி கொடுக்கிறாள். அதனால் அவளது தீய சக்திகள் மேலும் வலுபெறுகின்றன.

இப்போது, அவள் தனது 16வது குறியாக மோகனைக் (செய்ன் இபாத் கான்) இலக்காகக்கொண்டு, இறுதி ஆபரணத்தை பெற திட்டமிடுகிறாள். ஆனால் நிஷாந்திக்கு எதிராக தியா (டெப்சந்திரிமா சிங் ராய்) எனும் துணிச்சலான பெண் மோகனை காப்பாற்ற முன்வருகிறாள்.

கலர்ஸ் டிவி பிற சீரியல்கள்

கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் பிற சீரியல்களாக சிவசக்தி திருவிளையாடல், லட்சுமி நாராயணா நமோ நமஹ போன்றவை உள்ளன. இவை இரண்டும் ஆண்மிக புராண தொடர்களாக இருக்கின்றன. இதில் சிவசக்தி திருவிளையாடல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கும், லட்சுமி நாராயணா நமோ நமஹ சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. மிக பிரமாண்டமாகவும் பார்ப்போரை ஈர்க்கும் வகையில் மிகுந்த சுவாரஸ்யத்தோடும் இந்த தொடர் அமைந்திருக்கிறது.