33 Years of Chinna Thambi :’போவோமா ஊர்கோலம்’.. 356 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த படம்.. 33 ஆம் ஆண்டில் சின்னத்தம்பி!
33 Years of Chinna Thambi : இப்படத்தின் கதை சாதாரணமாக தோன்றினாலும் இந்த கதைக்கு இயக்குனர் பி வாசு தனக்கே உரிய பாணியில் படத்தின் தரத்தை மெருகேற்றி நமக்கு கொடுத்திருப்பார். இதுவே இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

இயக்குனர் பி வாசுவின் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சின்னத்தம்பி. இப்படத்தில் நாயகனாக பிரபுவும் நாயகியாக குஷ்பூவும் நடித்திருப்பார்கள். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருப்பார். இப்படம் தமிழ் சினிமாவின் மிக முக்கிய திரைப்படமாக இன்று வரை இருக்கிறது.
இப்படத்தின் கதை என்பது மகாராணி போல குஷ்புவை வளர்க்கும் அண்ணன்கள், அந்த வீட்டில் வேலை செய்யும் பிரபுவுக்கும் குஷ்புவுக்கும் காதல் மலர்கிறது. இந்த காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் இந்த சின்ன தம்பி.
அதாவது இப்படத்தில் பிரபு உலகம் தெரியாமல் ஒரு குறு வட்டத்தில் சுற்றித் திரியும் கள்ளம் கபடம் அற்ற நபராக நடித்திருப்பார். அதேபோல குஷ்பூவும் துள்ளித் திரிந்து பறக்க நினைக்கும் ஒரு சுட்டி பெண்ணாக நடித்திருப்பார்.
இப்படத்தின் கதை சாதாரணமாக தோன்றினாலும் இந்த கதைக்கு இயக்குனர் பி வாசு தனக்கே உரிய பாணியில் படத்தின் தரத்தை மெருகேற்றி நமக்கு கொடுத்திருப்பார். இதுவே இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் என்று சொல்லலாம். அதேபோல இப்படத்தில் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள். இப்படத்தில் அமையப்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்.
இப்படத்தின் பாடல்களை இன்றும் திருமண விழாவிலும், காதுகுத்து விழாவிலும் அல்லது மஞ்சள் நீராட்டு விழாவிலும் நாம் இன்று வரை கேட்டுக் கொண்டிருக்கும் பாடல் ஆகத்தான் இப்படத்தின் பாடல் உள்ளது.
குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற
”போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்
ஓடும் பொன்னி ஆறும்...பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்...காணும் நேரம் ஆனந்தம்”
”அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே
ஒரு அழகுப் பெட்டகம் புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே
முழுச் சந்திரன் வந்ததுபோல்
ஒரு சுந்தரி வந்ததென்ன
ஒரு மந்திரம் செஞ்சதப்போல்
பல மாயங்கள் செஞ்சதென்ன
இது, பூவோ பூந்தேனோ” டாப் ஹிட் பாடல்கள் என்றே சொல்லலாம்.
இப்படம் செம ஹிட் ஆகி வசூலை வாரி குவித்தது இப்படம் ஒரு வருட காலமாக திரையிடப்பட்டு புதிய சாதனையும் படைத்தது குறிப்பாக 45 க்கும் அதிகமான திரையரங்குகளில் 100 நாள் ஓடிய படம் இப்படம் அதேபோல கிட்டத்தட்ட ஒன்பது திரையரங்குகளில் 356 நாட்களுக்கு மேல் இப்படம் ஓடி சாதனை படைத்து வசூல் சாதனையும் படைத்தது.
இப்படி இந்த படத்திற்கு பல பெருமைகள் உள்ளது. அதேபோல இப்படம் குஷ்புவுக்கு பெரிய திருப்பு முனையாக அமைத்த படம் என்றும் சொல்லலாம்.
இப்படத்தில் குஷ்பூ பிரபுவின் காம்பினேஷன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லலாம். இப்படத்தில் பிரபுவின் அம்மாவாக மனோரமா நடித்திருப்பார் அவரின் கதாபாத்திரம் இப்படத்தில் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும். மனோரமாய் வைத்து சென்டிமென்ட் காட்சியை வாசு இயக்கிய விதம் அனைவரின் மனதையும் உருக வைத்திருக்கும் அந்த காட்சியை பார்த்து கண்ணீர் விடாதவர்கள் இருக்க முடியாது அந்த அளவிற்கு சென்டிமென்டால் அனைவரையும் அழ வைத்திருப்பார் இயக்குனர் வாசு.
ஆனால் இந்தப் படத்தில் மனோரமாவை முதலில் வேண்டாம் என வாசு முடிவு செய்தாராம். ஏனெனில் இதற்கு முன்னதாக நடிகன் என்ற படத்தில் சத்யராஜை பார்த்து ஒருதலை காதல் செய்யும் கதாபாத்திரத்தில் நடிகை மனோரமா நடித்ததை பார்த்த வாசுவுக்கு இந்த கதாபாத்திரம் செட் ஆகாது என தோன்றியுள்ளது. இதனால் மனோரமாவை வேண்டாம் என முடிவெடுத்தார். பின்னர் மனோரமா அதனை மக்கள் எல்லாம் மறந்து இந்த கதாபாத்திரத்தோடு பயணம் செய்வார்கள்.
எனவே நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என கேட்டுள்ளார். பின்னர் வாசு அதற்கு சம்மதித்து பின்னர் தான் மனோரமா அதில் நடித்தார். இப்படி முதலில் மனோரமாவே வேண்டாம் என நினைத்த வாசுவுக்கு மனோரமாவின் கதாபாத்திரம் இப்படத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படம் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகள் ஆகிறது.

டாபிக்ஸ்