அல்லு அர்ஜூனுக்கு போலீஸ் திடீர் நோட்டீஸ்.. ‘வருகை ரகசியம் காக்குமாறு’ வலியுறுத்தல்!
அல்லு அர்ஜுனிடம், காயமடைந்து சிகிச்சையில் இருக்கும் எட்டு வயது சிறுவனை சந்திக்கும் விஷயத்தை ரகசியமாக வைத்திருக்குமாறு போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அல்லு அர்ஜூன் சமீபத்தில் நடித்து வெளியான புஷ்யா 2 ரிலீஸ் அன்று, ஏற்பட்ட நெரிசல் விபத்து தொடர்பான வழக்கில் சமீபத்தில் ஜாமீன் பெற்றார். இந்த விபத்தில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில், அவரது எட்டு வயது மகன் KIMS மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹைதராபாத்தில் உள்ள ராம்கோபால்பேட் காவல் நிலையம், அல்லு அர்ஜுனிடம் புதிய நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது. பொது அமைதியைப் பேணுவதற்காக எட்டு வயது சிறுவனை சந்திக்கும் விஷயத்தை ரகசியமாக வைத்திருக்குமாறு அந்த நோட்டீஸில் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
காவல்துறை அல்லு அர்ஜுன் வழங்கிய நோட்டீஸ்
முன்னதாக, நம்பள்ளி நீதிமன்றம் தனது ஜாமீன் உத்தரவில் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காக அல்லு அர்ஜுன் சிக்காட்பள்ளி காவல் நிலையத்திற்கு வந்தபோது, KIMS மருத்துவமனையில் எட்டு வயது சிறுவனை சந்திக்க திட்டமிட்டிருந்தார். இருப்பினும், அவரது சட்டக் குழுவினர் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தினர். தற்போது, எட்டு வயது சிறுவனை சந்திப்பது குறித்து நடிகருக்கு காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு, வருகைப் பற்றி விளம்பரப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.