Rishab Shetty: இவரு ஹனுமானா? கடவுள அவமானப்படுத்தாதிங்க.. ரிஷப் ஷெட்டி மீது வழக்கு - புஷ்பா 2 பிரச்னைக்கு பின் அடுத்து
Rishab Shetty: புஷ்பா 2 கூட்ட நெரிசல் வழக்கில் இருந்து தற்காலிக நிவாரணம் பெற்ற மைத்ரி மூவி மேக்கர்ஸ், தற்போது அடுத்த பிரச்னையில் சிக்கியுள்ளனர். ரிஷப் ஷெட்டி நடிக்கும் ஜெய் ஹனுமான் படத்தில் கடவுளின் சித்தரிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காந்தாரா படம் மூலம் பான் இந்தியா அளவில் புகழ் பெற்றார் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி. இதையடுத்து இவர் ஜெய் ஹனுமான் என்ற தெலுங்கு படத்தில் ஹனுமான் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிரசாந்த் வர்மா இயக்கும் இந்த படத்தில் கடவுள் ஹனுமானின் உருவத்தை மனித உருவம் போல் காட்டி இழிவு படுத்தி இருப்பதாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மாமிடல் திருமால் ராவ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடவுளை அவமானப்படுத்தியுள்ளனர்
ஜெய் ஹனுமான் படத்தின் டீஸரை கடந்த அக்டோபரில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தினர் வெளியிட்டனர். இதில் தேசிய விருது வென்ற நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டரில் ரிஷப் ஒரு வலிமைமிக்க ராஜா போல் உடலின் தசைகள் இறுக்கமாக புடைக்க காட்சியளிக்கிறார். அவரது முகம் மனித முகமாக இருக்கிறது. அதாவது, ஹனுமானை மனித முகமாக காண்பித்து, கடவுளை அவமானப்படுத்தும் வகையில் சித்தரித்துள்ளனர்.
ரிஷப் ஷெட்டி தேசிய விருது பெற்ற நடிகர் என்பதால், ஹனுமானாக நடித்தாலும் அவரது முகம் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக நான் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் நான் எனது வாதத்தை முன்வைத்தேன். அப்போது, "ஹனுமான் எப்படி இருக்கிறார் என்பதை நான் நிரூபிக்க வேண்டும். அதைச் செய்ய, வெவ்வேறு நாடுகளில் அவர் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார் என்பதற்கான உதாரணங்களை எடுத்துக்கொண்டேன்.
பணம் சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்
இதுபோன்ற சித்தரிப்புகளை தொடர அனுமதித்தால், இளைய தலைமுறையினர் ஹனுமான் ஒரு மனிதர் இல்லை என்பதை அறிய மாட்டார்கள். எனவே இதை நாம் நிருபிக்க வேண்டும். இல்லாவிட்டால், கணேஷ் மற்றும் வராஹ சுவாமி போன்ற பிற கடவுள்களின் தோற்றம் பணம் சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் செய்ய நேரிடும். நாம் வேறுவிதமாக நிரூபிக்க வேண்டியிருக்கும். அப்படி நடக்க நாம் அனுமதிக்க கூடாது" என்று கூறினார்.
ஜெய்ஹனுமான் படம்
2024இல் வெளியாகி தெலுங்கில் சூப்பர் ஹிட்டான படம் ஹனுமான். இந்த படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் ஜெய் ஹனுமான் படம், தேவைப்படும் நேரத்தில் அனுமனிடமிருந்து சூப்பர் பவர்களைப் பெறும் நபரை பற்றியை கதையாக அமைந்துள்ளது. தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ராணா டகுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அம்ரிதா ஐயர், வரலட்சுமி, சமுத்திரகனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் 2026இல் திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.
ரிஷப் ஷெட்டி இந்த படம் தவிர காந்தாரா இரண்டாம் பாகமாக உருவாகி வரும் காந்தாரா சாப்டர் 1 என்ற படத்தில் நடித்து வருகிறார். அத்துடன் தி பிரைட் ஆஃப் பாரத் சத்ரபதி சிவாஜி மகாராஜ் என்ற இந்தி படத்திலும் நடிக்கிறார்.
சிறந்த நடிகர் தேசிய விருது
70 ஆவது தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த நடிகர் தேசிய விருதை வென்றுள்ளார் நடிகர் ரிஷப் ஷெட்டி. சிறந்த நடிகருக்கான ரேஸில் மலையாள நடிகர் மம்முட்டியும், ரிஷப் ஷெட்டியும் கடைசி கட்டம் வரை இருந்ததாக கூறப்பட்ட நிலையில், நடிகரும், இயக்குனருமான ரிஷப் ஷெட்டி, காந்தாரா படத்துக்காக சிறந்த நடிகர் தேசிய விருதை வென்றார். ரூ. 16 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட காந்தாரா படம் ரூ. 400 கோடி மேல் வசூலித்தது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்