Bose Venkat: கங்குவா தோல்வி.. ‘டேய் சூர்யா..ஏய் சிவா’ என்று விமர்சனம்; நாக்கைப்பிடுங்குவது போல கேட்கணும்’ - போஸ் வெங்கட்
Bose Venkat: கங்குவா திரைப்படம் பார்த்துவிட்டு ஒருவர் வருகிறார். மைக் முன்னர் வந்தவுடன்.. டேய் சூர்யா ஏய் சிவா என்று பேச ஆரம்பிக்கிறார், அவருக்கு அந்த உரிமையை யார் கொடுத்தது. - போஸ் வெங்கட்

Bose Venkat: இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட் எஸ் எஸ் யூடியூப் சேனலுக்கு அண்மையில் பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த பேட்டியில் அவர் ‘கங்குவா’ படத்தின் தோல்வி குறித்து பேசி இருக்கிறார்.
விவாதமாக மாறும்
இதுகுறித்து அவர் பேசும் பொழுது,' ‘கங்குவா’ ‘விடுதலை’ ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு நான் கொடுக்கும் முதல் நேர்காணல் இது; அந்த சமயத்தில் என்னிடம் பல பேர் நேர்காணல்கள் கேட்டார்கள்; ஆனால் நான் கொடுக்கவில்லை. காரணம், என்னவென்றால் அன்றைய தினம் நான் எது பேசி இருந்தாலும் அது விவாதப்பொருளாக மாறி இருக்கும்.
நான் பேசிய பேச்சு பரவலாக பேசப்படும் பொழுது, நாளையும் இன்னொன்று அதே போல பேசலாம் என்று நினைப்பவன் நான் அல்ல. என்னுடைய விவாதம், தேவைக்கு நியாயத்திற்கு மட்டுமே இருக்கும். சும்மா பேர் வாங்குவதற்காக நான் விவாதம் செய்வதில்லை. நானும் எல்லோர் போல சாதாரண மனிதன்தான். ஆனால், இங்கு கேட்க வேண்டிய விஷயங்கள் என்று சிலவை இருக்கின்றன. அந்த விஷயங்களை நாம் எப்படி கேட்க வேண்டும் என்றால், நாக்கை பிடுங்கிக் கொள்வது போல கேட்க வேண்டும்.
தோல்விக்கு படம் எடுப்பார்களா?
சினிமா எடுப்பவர் பல்லாயிரம் கோடி முதலீட்டைப்போட்டு படத்தை வெளியிட்டு 3 மணி நேரம் மக்களை சித்ரவதை செய்ய வேண்டும் என்று நினைப்பாரா? நிச்சயமாக நினைக்க மாட்டார். ஒரு சினிமா எடுப்பவர் தன்னுடைய அதிகபட்ச கற்பனையை திரையில் சொல்ல முயற்சிக்கிறார். அது சில சமயங்களில் மிஸ் ஆகிவிடும்..
எந்த படம் ஓடும் என்று இங்கு யாராலும் கணிக்க முடியாது. ஏன் ஏவிஎம் செட்டியாரே படத்தின் வெற்றிக்குறித்து சரியாக கணிக்கும் நபர் இருந்தால், என்னுடன் வேலைக்கு வந்து விடுங்கள். உங்களுக்கு ஒரு கோடி தருகிறேன் என்று கூறினார். அப்படி சொல்லக்கூடிய நபர் இங்கு யாருமே கிடையாது. கங்குவா திரைப்படம் பார்த்துவிட்டு ஒருவர் வருகிறார். மைக் முன்னர் வந்தவுடன்.. டேய் சூர்யா ஏய் சிவா என்று பேச ஆரம்பிக்கிறார், அவருக்கு அந்த உரிமையை யார் கொடுத்தது.
நானும் கேட்க்கட்டுமா?
நான் அவரது வீட்டு முன் நின்று அவரது குடும்பத்தாரை திட்டினால், அவர் நிச்சயமாக என் மீது புகார் கொடுப்பார். இப்போது அவர் தியேட்டர் வாசல் முன்பு நின்று சூர்யாவையும் சிவாவையும் திட்டிவிட்டார் என்று என்னாலும் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடியும். இதை நான் அப்போது பேசினேன். அத்தோடு கடுமையாக பேசுபவர்களின் தன்மை குறைந்தது.
திரைப்பட விமர்சனத்திற்கு வரலாம். உங்களுக்கு ஒரு நடிகரை பிடிக்கும் என்றால், இன்னொரு நடிகர் மீது கண்டிப்பாக உங்களுக்கு விறுப்பு, வெறுப்புகள் இருக்கலாம். அப்படி உள்ள நீங்கள் ஒரு படத்தை விமர்சனம் செய்யும் பொழுது, அது சரியாக இருக்கும் என்று எப்படி நம்புவது? உங்கள் கருத்து இவ்வாறாக இருப்பின், திரையரங்கிற்கு வந்து திரைப்படம் பார்க்கும் 300 பேரின் கருத்தும், உங்கள் கருத்தும் எப்படி ஒன்றாக இருக்கும். அவர்களுக்கும் கருத்துக்கள் மாறுபடும் இல்லையா? கங்குவா படத்திற்கு எழுந்த நியாயமற்ற விமர்சனங்களுக்கு நாங்கள் கொடுத்த அழுத்தம்தான், இன்று விமர்சனங்கள் ஓரளவுக்கு தன்மையாக மாறி இருப்பதற்கான காரணம்’ என்று பேசினார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்