'கடவுள் பெருமாளை அவமதித்தார் சந்தானம்'.. போலீஸ் ஸ்டேஷன் சென்ற பாஜகவினர்.. பட ரிலீஸிற்கு சிக்கலா?
நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகவுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் கடவுள் பெருமாள் அவமதிக்கப்பட்டதாகக் கூறி பாஜகவினர் சேலம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளனர்.

'கடவுள் பெருமாளை அவமதித்தார் சந்தானம்'.. போலீஸ் ஸ்டேஷன் சென்ற பாஜகவினர்.. பட ரிலீஸிற்கு சிக்கலா?
நடிகர் சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு என்ற திகில் கலந்த காமெடி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, சந்தானம் இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார்.
அந்த வகையில் டிடி நெக்ஸ்ட் லெவல் என்பது தில்லுக்கு துட்டு படத் தொடரின் 4வது படம் ஆகும். இந்தப் படம் மே 16 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸிற்கு எதிராக காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.