Nayanthara: ‘6 மணி நேர தாமதம்.. அவ்வளவு அகங்காரம்… உங்களுக்கு கொம்பா முளைச்சிருக்கு.. இரண்டு பேருமே நோயாளிகள் - பிஸ்மி
Nayanthara: நயன்தாரா எப்போதும் தன்னை வாழ வைத்த மக்களுக்கு விசுவாசமாக இருந்ததில்லை; எல்லாவற்றிற்கும் மேலாக அவருக்கு இந்த வாழ்க்கையை, பணத்தை, புகழை அந்தஸ்தை, கௌரவத்தை கொடுத்த சினிமா துறைக்கு அவர் நேர்மையாக இல்லை என்பது தான் உண்மையான விஷயம். - பிஸ்மி

பிரபல நடிகை நயன்தாரா அண்மையில் மதுரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றார். அந்த நிகழ்விற்கு அவர் சொன்ன நேரத்தில் இருந்து, 6 மணி நேரம் தாமதமாக சென்றதாக சொல்லப்படுகிறது. இதனால் அங்கு கூடியிருந்தவர்கள் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து அந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதவர், நயன் நம்மை போன்று சாதரண மனிதர் கிடையாது என்று சொல்லி, அவர் தாமதமாக வந்ததை நியாப்படுத்த முயன்றார்.இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி மீடியா சர்க்கிள் யூடியூப் சேனலுக்கு பேட்டிக்கொடுத்திருக்கிறார்.
விசுவாசமாக இருந்ததில்லை
அந்த பேட்டியில், ‘நயன்தாரா எப்போதும் தன்னை வாழ வைத்த மக்களுக்கு விசுவாசமாக இருந்ததில்லை; எல்லாவற்றிற்கும் மேலாக அவருக்கு இந்த வாழ்க்கையை, பணத்தை, புகழை அந்தஸ்தை, கௌரவத்தை கொடுத்த சினிமா துறைக்கு அவர் நேர்மையாக இல்லை என்பது தான் உண்மையான விஷயம்.
எப்போதுமே நாம் நேர்மையானவர்களை தான் கொண்டாட முடியும்; நேர்மை அற்றவர்களை ஒரு காலமும் கொண்டாட முடியாது. ஆனால், பாமர மக்களுக்கு இந்த உண்மை, இந்த பக்குவம் தெரியாது. நயன்தாரா ஒரு விழாவுக்கு வருகிறார் என்றால் பத்து பேர் கூட வர மாட்டார்கள்.
நிஜ முகத்தை மறைத்து
ஆனால், அவர்கள் தங்களுடைய நிஜ முகத்தை மறைத்து, ஒரு பொய் முகத்தை காட்டி, மீடியாக்கள் மற்றும் சோசியல் மீடியாக்கள் மூலமாக ஒரு போலியான பிம்பத்தை கட்டமைக்கிறார்கள். அதை முட்டாள் மக்கள் உண்மை என்று நம்புகிறார்கள். அதனால் தான் மதுரையில் அவ்வளவு கூட்டம் கூடியது. இத்தனைக்கும் மதுரையில் நடந்த விழாவானது இவரது தயாரிப்பில் உருவான ஒரு பொருளை புரமோட் செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதற்கே இவர் ஆறு மணி நேரம் தாமதமாக சென்றிருக்கிறார் என்றால், அவருடைய மனநிலை என்ன என்பதை நாம் இங்கே கவனிக்க வேண்டும்; நான் வரும் வரைக்கும், இவர்களெல்லாம் காத்திருக்கட்டும் என்ற ஒரு அகங்காரம் தான் அவரை இப்படி செய்ய வைத்திருக்கிறது; அதை நாம் ஆதரிக்கவே கூடாது.
எல்லோரும் சமம்தான்
இதைவிட பெரிய கொடுமை என்னவென்றால் இதையெல்லாம் மறந்து அங்கிருந்தவர் நயன்தாரா விக்னேஷ் சிவன் நம்மை போல அல்ல; அவர்கள் நம்மை விட உயர்ந்தவர்கள் என்று பேசுகிறார். இங்கு மனிதர்கள் எல்லோரும் சமம்தான்; யாரும் யாரை விட உயர்ந்தவன் கிடையாது. அதுதான் தமிழ்நாட்டினுடைய பலமும் கூட. அப்படி இருக்கும் பொழுது அங்கு நயன்தாராவை நம்மை விட உயர்ந்தவன் என்று ஒருவர் கூறுகிறான் என்றால் அவனை விட்டு வைக்கவே கூடாது
புகழ் பாடுவதை கேட்டு கேட்டு அவர்கள் அதற்கு அடிமையாகி விட்டார்கள்; ஒருவகையில் இவர்களும் ஒரு வகை நோயாளிகள் தான். அவருக்கு சுயநினைவும் அறிவும் இருந்திருந்தால் அவர் பேசும் பொழுதே, அதை தடுத்து இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், நீங்கள் பேசும்போதாவது இங்கு ஒருவர் தவறாக பேசிவிட்டார். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை எல்லோரும் இங்கு சமம்தான் என்றாவது விளக்கம் கொடுத்திருக்க வேண்டும்.
நயன்தாராவிடம் இருந்து இந்த விளக்கமும் வரவில்லை, தான் தாமதமாக வந்து விட்டேன் என்று வருத்தமும் தெரிவிக்கவில்லை. அதிலிருந்து இவர் எப்படிப்பட்டவர் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்
இதில் மக்கள் குற்றவாளிகள் என்றாலும் கூட, இன்னொரு பக்கம் குற்றம் மீடியாக்கள் மீதும் இருக்கிறது; ஏனென்றால் நயன்தாராவும் நம்மை போன்ற ஒருவர்தான்; அவருக்கு கொம்பு ஒன்றும் முளைத்து விடவில்லை;அவரும் தரையில் தான் நடக்கிறார்; இவரை ஒரு தேவதை போல நாம் தான் சித்தரித்து வைத்திருக்கிறோம். அதுதான் இதற்கு காரணம் என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்