எனது ஓட்டும் கருத்துக்களும் விற்பனைக்கு கிடையவே கிடையாது.. ஆர்.ஜே. ஆனந்தி போட்ட பதிவு.. குவியும் பாராட்டு!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எனது ஓட்டும் கருத்துக்களும் விற்பனைக்கு கிடையவே கிடையாது.. ஆர்.ஜே. ஆனந்தி போட்ட பதிவு.. குவியும் பாராட்டு!

எனது ஓட்டும் கருத்துக்களும் விற்பனைக்கு கிடையவே கிடையாது.. ஆர்.ஜே. ஆனந்தி போட்ட பதிவு.. குவியும் பாராட்டு!

Divya Sekar HT Tamil Published Dec 19, 2024 01:06 PM IST
Divya Sekar HT Tamil
Published Dec 19, 2024 01:06 PM IST

எனது ஓட்டும் கருத்துக்களும் விற்பனைக்கு கிடையவே கிடையாது. மேலும், என்னால் ஒருவரின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருக்க முடியாது என ஆர்.ஜே. ஆனந்தி தெரிவித்துள்ளார்.

எனது ஓட்டும் கருத்துக்களும் விற்பனைக்கு கிடையவே கிடையாது.. ஆர்.ஜே. ஆனந்தி போட்ட பதிவு.. குவியும் பாராட்டு!
எனது ஓட்டும் கருத்துக்களும் விற்பனைக்கு கிடையவே கிடையாது.. ஆர்.ஜே. ஆனந்தி போட்ட பதிவு.. குவியும் பாராட்டு!

இந்த சீசனில் முதல் எட்டாவது வாரம் டபுள் எவிக்‌ஷனே நடக்காமல் இருந்த நிலையில், 9-ஆவது வாரத்தில் டபுள் எவிக்‌ஷன் என அறிவித்தார் விஜய் சேதுபதி. அதன்படி அடுத்தடுத்து சாச்சனா, ஆர்.ஜே.ஆனந்தி ஆகியோரை எலிமினேட் ஆனார்கள்.  முதலில் ஆர்.ஜே.ஆனந்தியை தான் எலிமினேட் செய்தார் விஜய் சேதுபதி. அவர் பெயர் எலிமினேஷன் கார்டில் வந்ததை பார்த்ததும் போட்டியாளர்கள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர்.

எனது ஓட்டும் கருத்துக்களும் விற்பனைக்கு கிடையவே கிடையாது

இப்படியான நிலையில், எவிக்ட் ஆன போட்டியாளர் ஆனந்தி தனது எக்ஸ் பக்கத்திலும் தனது இன்ஸ்டா பக்கத்திலும் பதிவிட்டுள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர் தனது பதிவில், " மிகவும் விஷமத்தனமான எண்ணம் கொண்டவர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வெளியேதான் இருக்கின்றார்கள். ஆனால் போட்டியாளர்கள் மத்தியில் இப்படியான விஷமத்தனமான எண்ணங்கள் இல்லவே இல்லை. மேலும் போட்டியாளர்கள் வில்லன்கள் கிடையாது, அதேநேரத்தில் கதாநாயகர்களும் கிடையாது. அவர்கள் தவறு செய்யக் கூடிய சாதாரண மனிதர்கள். '

எனது ஓட்டும் கருத்துக்களும் விற்பனைக்கு கிடையவே கிடையாது. மேலும், என்னால் ஒருவரின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருக்க முடியாது. எனது ஹவுஸ்மேட்ஸ்தான் போட்டியை வெல்லப்போகின்றார்கள். அவர்கள் அவர்களின் சொந்த முயற்சியில், சொந்தத் திறமையில் வெல்லட்டும். அதுதான் சரியானது" எனது பதிவிட்டுள்ளார். இவரது பதிவுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகின்றது.

சில போட்டியாளர்களுக்காக வெளியே செயல்பட்டு வரும் பி.ஆர். டீமினைச் சேர்ந்தவர்கள் ஆனந்தியிடம் எதாவது கருத்துக்கள் பதிவிடவும், வீடியோக்கள் பதிவிடவும் அணுகியிருப்பார்களோ? அதனால் தான் அவர் இவ்வாறு பதிவு செய்து இருக்கிறார்என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டிஆர்பி ரேட்டிங்கில் சரிவு

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இன்னும் ஒரு மாதத்தில் நிகழ்ச்சி நிறைவடையவுள்ளதால் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த 7 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை கண்டுள்ளது.

இன்னும் ஒரு மாதத்தில் நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ள நிலையில் தீபக், முத்துக்குமரன், விஜே விஷால், அருண் பிரசாத், ஜெஃப்ரி, ரஞ்சித், ராணவ், ரயான், சௌந்தர்யா, ஜாக்குலின், அன்ஷிதா, பவித்ரா, மஞ்சரி ஆகிய 13 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.

வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்

முன்னதாக, ரவீந்தர் சந்திரசேகர், தர்ஷா குப்தா, சுனிதா, அர்னவ், ரியா,வர்ஷினி வெங்கட், மற்றும் சிவகுமார், ஆனந்தி, சாச்சனா ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில், கடந்த வாரம் தர்ஷிகாவும், சத்யாவும் வெளியேற்றப்பட்டனர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.