Bigg Boss Vanitha: செருப்பாலயே அடிப்பேன்... சுயமரியாதைக்கு விளக்கமா? கடுகடுத்த வனிதா
Bigg Boss Vanitha: மணிமேகலை- பிரியங்கா விவகாரத்தில் கணவனுடன் இருக்கும் பெண்களுக்கு சுயமரியாதை உள்ளது என சிலர் கருத்து தெரிவித்தவர்களை, செருப்பால் அடிப்பேன் என பிக்பாஸ் வனிதா காட்டமாக கூறியுள்ளார்.

Bigg Boss Vanitha: செருப்பாலயே அடிப்பேன்... சுயமரியாதைக்கு விளக்கமா?... கடுகடுத்த வனிதா
விஜய் டீவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மணிமேகலைக்கும் அதில் பங்கேற்பாளராக வந்த பிரியங்காவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் பூகம்பமாக மாறி, சோசியல் மீடியாவில் நான் ஸ்டாப்பாக சுழன்று வருகிறது.
விஜய் டிவியின் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளர் மணிமேகலைக்கும், தொகுப்பாளராக இருந்து பிரபலமடைந்து தற்போது நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்று வந்த பிரியங்காவிற்கும் பிரச்சனை வெடித்துள்ளது.
இதனால், நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே பாதியில் வெளியேறிய மணிமேகலை, பின்னர் நிகழ்ச்சியிலிருந்து முற்றிலும் வெளியேறுவதாக அறிவித்தார். இதற்கு காரணமாக அவர் கூறிய விஷயம் தான் தற்போது பேசுபொருளே.
