அவர பத்தி உனக்கு என்ன தெரியும்? அருணிடம் சரமாரி கேள்வி கேட்ட தீபக் மனைவி .. பேச முடியாமல் தவித்த அருண்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அவர பத்தி உனக்கு என்ன தெரியும்? அருணிடம் சரமாரி கேள்வி கேட்ட தீபக் மனைவி .. பேச முடியாமல் தவித்த அருண்!

அவர பத்தி உனக்கு என்ன தெரியும்? அருணிடம் சரமாரி கேள்வி கேட்ட தீபக் மனைவி .. பேச முடியாமல் தவித்த அருண்!

Divya Sekar HT Tamil Published Dec 24, 2024 11:03 AM IST
Divya Sekar HT Tamil
Published Dec 24, 2024 11:03 AM IST

பிக்பாஸ் வீட்டில் தற்போது freezing task நடைபெற்று வருகிறது. இதில் தீபக் மனைவி மற்றும் மகன் இருவரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தந்துள்ளன. தீபக் மனைவி அருணிடம் சரமாரி கேள்வி கேட்டுள்ளார்.

அவர பத்தி உனக்கு என்ன தெரியும்? அருணிடம் சரமாரி கேள்வி கேட்ட தீபக் மனைவி .. பேச முடியாமல் தவித்த அருண்!
அவர பத்தி உனக்கு என்ன தெரியும்? அருணிடம் சரமாரி கேள்வி கேட்ட தீபக் மனைவி .. பேச முடியாமல் தவித்த அருண்!

நாளுக்கு நாள் புதிது, புதிதாக டாஸ்க்குகளை பிக்பாஸும் கொடுத்து நிகழ்ச்சியை சுவார்சியமாக்க முயற்சி செய்து வருகிறார். அதனால் நிகழ்ச்சி விமர்சனத்திற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

பிக்பாஸ் வீட்டில் தற்போது Freezing Task

பிக்பாஸ் வீட்டில் தற்போது freezing task நடைபெற்று வருகிறது. இதில் தீபக் மனைவி மற்றும் மகன் இருவரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தந்துள்ளன. இதில் பிக்பாஸ் வீட்டில் தீபக் மனைவி வந்து அனைவரிடமும் பேசி கலகலப்பாக வைத்திருக்கிறார். அப்பொழுது திடீரென பிக்பாஸ் தீபக் மனைவியிடம் நான் கேட்ட கேள்வி என்ன ஆனது இன்னும் பதில் வரவில்லை எனக் கூற தற்போது சொல்கிறேன் என தீபக் மனைவி சொல்கிறார்.

தீபக் அப்படி ஒன்றும் கிடையாது

தீபக் உடனான சண்டைக்கு பின் கார்டன் ஏரியாவிற்கு சென்று சத்யாவிடம் பேசும்போது, நான் இப்போ டிரெண்டிங்ல இருக்க ஹீரோ, என்கிட்டயே இப்படி நடந்துக்கிறாரு. அப்போ அவர் டிரெண்டிங்ல இருக்கும்போது அவருடைய அசிஸ்டண்ட் கிட்ட எப்படி நடந்திருப்பார் என்று பேசி இருந்தார். அது தன்னை மிகவும் காயப்படுத்தியதாக கூறிய தீபக்கின் மனைவி, அவர் உண்மையில் அப்படி கிடையவே கிடையாது என தெரிவித்தார்.

 மேலும் பேசிய அவர், தீபக் அப்படி ஒன்றும் கிடையாது. அவருடைய பர்சனல் லைஃப் உங்களுக்கு தெரியாது. தீபக் உடன் நண்பர்கள் அனைவரும் இன்னமும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். அவருடைய நண்பர்களுக்கு ஒரு ப்ராஜெக்ட் கிடைத்தால் அது எங்களுக்கு கிடைப்பது போல இருக்கும் அவ்வளவு நாங்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவோம். தீபக் அப்படிப்பட்ட நபர் கிடையாது. நீங்கள் அவரை இப்படி பேசியது எனக்கு பிடிக்கவில்லை” எனக் கூறுகிறார்.

மீண்டு பழையபடி அருண் விளையாடுவாரா?

அருண் இதை கேட்டு மௌனம் காக்கிறார். பின்னர் சாரி கேட்கிறார். இதன் பிறகு அவர் பல பொழுதுபோக்காக பேசி பிக்பாஸ் போட்டியாளர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார். ஆனாலும் அருண் மட்டும் முகத்தை சோகமாகவே வைத்துள்ளார். இதிலிருந்து மீண்டு பழையபடி அருண் விளையாடுவாரா? அல்லது இந்த விஷயத்தில் லாக்காகி அப்படியே அமைதி காப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

டிஆர்பி ரேட்டிங்கில் சரிவு

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இன்னும் ஒரு மாதத்தில் நிகழ்ச்சி நிறைவடையவுள்ளதால் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த 7 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை கண்டுள்ளது.

இன்னும் ஒரு மாதத்தில் நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ள நிலையில் தீபக், முத்துக்குமரன், விஜே விஷால், அருண் பிரசாத், ஜெஃப்ரி, ராணவ், ரயான், சௌந்தர்யா, ஜாக்குலின், அன்ஷிதா, பவித்ரா, மஞ்சரி ஆகிய 12 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.

வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்

முன்னதாக, ரவீந்தர் சந்திரசேகர், தர்ஷா குப்தா, சுனிதா, அர்னவ், ரியா,வர்ஷினி வெங்கட், மற்றும் சிவகுமார், ஆனந்தி, சாச்சனா தர்ஷிகா, சத்யா ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில், கடந்த வாரம் ரஞ்சித்,வெளியேற்றப்பட்டார்.

75 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர். அதிகபட்சமாக இன்னும் நான்கு வாரங்களில் இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக இன்னும் சில டபுள் எவிக்ஷன் நடக்கவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.