‘விஷால் பொறுக்கி.. கிரிஞ் பண்ணி அனுப்பி விட்டுடான்’.. அன்ஷிதா போட்ட பதிவு.. திட்டி தீர்க்கும் ரசிகர்கள்!
அன்ஷிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். இந்த பதிவில் அன்ஷிதா தனது சகோதரருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகம் தேவை இல்லை. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சி ஆரம்பம் ஆனதில் இருந்தே, போட்டியாளர்கள் போட்டியை சுவாரசியமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதை காட்டமாக பேசி, வாரம் வாரம் ட்ரில் எடுத்து வரும் அவரின் தொகுத்து வழங்கும் பாங்கு அனைவரையும் கவர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் புதிது, புதிதாக டாஸ்க்குகளை பிக்பாஸும் கொடுத்து நிகழ்ச்சியை சுவார்சியமாக்க முயற்சி செய்து வருகிறார். அதனால் நிகழ்ச்சி விமர்சனத்திற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.
டிஆர்பி ரேட்டிங்கில் சரிவு
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இன்னும் மூன்று வாரத்தில் நிகழ்ச்சி நிறைவடையவுள்ளதால் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த 7 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை கண்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ள நிலையில் தீபக், முத்துக்குமரன், விஜே விஷால், அருண் பிரசாத், ராணவ், ரயான், சௌந்தர்யா, ஜாக்குலின், பவித்ரா, மஞ்சரி ஆகிய 10 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.
அன்ஷிதா முதல் பதிவு
தற்போது பிக்பாஸ் 8 வீட்டில் 10 போட்டியாளர்கள் உள்ளனர்.இந்த சீசன் யார் வின்னர் என கணிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கு முதல் சீசன்களில் நிகழ்ச்சி முடிவினை நெருங்கும் போது அநேகமாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் டைட்டில் வின்னர் குறித்து கணிப்பிட்டு விடுவார்கள் ஆனால் இந்த சீசனில் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை.
இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் 8 வீட்டில் டபுள் எவிக்ஷன் நிகழ்ந்தது. இதில் அன்ஷிதா மற்றும் ஜெப்ரி வெளியேறினர். ஜெப்ரி வீட்டிற்கு திரும்பியபோது அவருக்கு கோலாகலமான வரவேற்பு கிடைத்தது. இதற்கிடையே அன்ஷிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
இந்த பதிவில் அன்ஷிதா தனது சகோதரருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட் செய்தும் வருகின்றனர்.
இதில் “நல்லா விளையாடு இருந்தவங்க எல்லாரும் விஷால் கிரிஞ் பண்ணி அனுப்பி விட்டுடான்”, ”விஷால் பொறுக்கி அன்ஷி தர்ஷிகா கேம்ஸ் கெட்டுப்போக காதல் காண்டட் தான் காரணம்”,விஷால் உங்களை ரொம்பவே மிஸ் பண்றாரு.. இன்று மிகவும் சலிப்பாகவும், விஷால் தனிமையாகவும் இருக்கிறார்” என பலவிதமாக கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.
84 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் வீட்டிற்குள் 10 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர். அதிகபட்சமாக இன்னும் மூன்று வாரங்களில் இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக இன்னும் சில டபுள் எவிக்ஷன் நடக்கவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்