‘குரலை வச்சு அவ்வளவு கிண்டல்.. ஒரே போன் கால்ல 17 லட்சம் காலி.. அப்பா மட்டும் இல்லன்னா.. ‘ - கண்ணீர் வடித்த சவுண்ட்
‘குரல் கிண்டல் முதல் போன் காலில் இழந்த 17 லட்சம் வரை என தன் வாழ்க்கையில் சந்தித்த கஷ்டமான சம்பவங்களை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கும் செளந்தர்யா பகிர்ந்து இருக்கிறார்.

‘குரலை வச்சு அவ்வளவு கிண்டல்.. ஒரே போன் கால்ல 17 லட்சம் காலி.. அப்பா மட்டும் இல்லன்னா.. ‘ - கண்ணீர் வடித்த சவுண்ட்
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில், நேற்றைய தினம் கதை சொல்லல் டாஸ்க் நடந்தது. அதில் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் கடந்த வந்த பாதை குறித்து பேசினர். அந்த வரிசையில் போட்டியாளராக உள்ளே இருக்கும், செளந்தர்யா தன் கதையை எமோஷனலாக பகிர்ந்து கொண்டார்.
குரலால் நடந்த கிண்டல்
அவர் பேசும் போது, “ நான் கடந்த வந்த பாதையை சொல்வதே எனக்கு பெரும் கனவாக இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக நான் அவ்வளவு காலம் காத்திருந்து இருக்கிறேன். காரணம் செளந்தர்யா யார் என்பதை வெளியே சொல்ல வேண்டும் என்ற தவிப்பு எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. சின்ன வயதில் இருந்தே என்னுடைய குரல் இப்படித்தான் இருக்கும்.
