'மனசாட்சி இருக்கா' கண்ணீர் வடித்த சாச்சனா.. வெடித்தது சண்டை.. குமுறும் பெண்கள் அணி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'மனசாட்சி இருக்கா' கண்ணீர் வடித்த சாச்சனா.. வெடித்தது சண்டை.. குமுறும் பெண்கள் அணி!

'மனசாட்சி இருக்கா' கண்ணீர் வடித்த சாச்சனா.. வெடித்தது சண்டை.. குமுறும் பெண்கள் அணி!

Malavica Natarajan HT Tamil
Published Oct 15, 2024 01:46 PM IST

பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட சமையல் டாஸ்க்கால் பெண்கள் அணி கூட்டு சேர்ந்து ஆண்கள் அணியிடம் சண்டையிட்டுள்ளனர். இந்த ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

'மனசாட்சி இருக்கா' கண்ணீர் வடித்த சாச்சனா.. வெடித்தது சண்டை.. குமுறும் பெண்கள் அணி!
'மனசாட்சி இருக்கா' கண்ணீர் வடித்த சாச்சனா.. வெடித்தது சண்டை.. குமுறும் பெண்கள் அணி!

சமைப்பது யார்?

பிக்பாஸ் வீட்டில் ஆண்கள் அணி, பெண்கள் அணி என பிரித்த நாளில் இருந்த சண்டை ஓயாமல் இருக்கிறது. இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் மொத்த போட்டியாளர்களுக்கு சமைப்பது யார் என ஆண்கள் அணி முடிவு செய்ய வேண்டும் என பிக்பாஸ் கூறியுள்ளது. இதையடுத்து, பெண்கள் அணியைச் சேர்ந்த ஜாக்குலினும், சாச்சனாவும் இணைந்து அத்தனை போட்டியாளர்களுக்கும் சமைக்க வேண்டும். அத்துடன் அவர்களே சமைத்த பாத்திரங்களை கழுவியும் வைக்க வேண்டும் என ஆண்கள் அணியினர் கூறியுள்ளனர்.

ஆரம்பித்த சண்டை

இதனால், கடுப்பான பெண்கள் அணி, இரண்டு பேரால் எப்படி இத்தனை வேலைகளையும் செய்ய முடியும் என கேள்வி எழுப்பி ஆண்கள் அணியிடம் சண்டையிட்டுள்ளனர். இதுதான் டாஸ்க் இப்படித் தான் விளையாட வேண்டும் என ஆண்கள் அணியினர் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

அழுகையைத் தொடங்கிய சாச்சனா

இதனால், மொத்த பெண்கள் அணியினரும் கத்தி கூச்சலிடுகின்றனர். இதற்கிடையில், சாச்சனா, எப்படி இத்தனை வேலைகளையும் 2 பெண்களால் செய்ய முடியும் என கேள்வி எழுப்பி, உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா என அழுதுகொண்டே புலம்பியுள்ளார்.

இந்த சமயத்தில், தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாத ஜாக்குலின் அர்னவ்விடம் இனி பெண்களை மதிக்கிறோம். தாய் குலங்களை மதிக்கிறோம் என இனி பேச வேண்டாம் என காட்டமாக பேசி வருகிறார்.

இதையடுத்து, விஜய் டிவி வெளியிட்ட இந்த ப்ரோமாவை பார்த்த ரசிகர்கள் இன்னைக்கு பிக்பாஸ் வீட்டில் சம்பவம் காத்திருக்கிறது எனக் கூறி வருகின்றனர்.

பொருட்களை கேன்சல் செய்த பிக்பாஸ்

முன்னதாக காலையில் வெளியான ப்ரோமோவில், நேற்று நடந்த டாஸ்க்கில் ஆண்கள் அணி ரூ.8700 சம்பாத்தித்து இருந்தனர். ஆனால் அவர்கள் ரூ.8700 க்குள் மட்டுமே சமையல் பொருட்களை வாங்கி கொள்ள வேண்டும் என்பது விதிமுறையாக இருந்தது. ஆனால் ஆண்கள் அணியினர் அவர்கள் வாங்கிய சமையல் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவற்றின் மதிப்பு ரூ. 12000 யை தாண்டியது. இதன் காரணமாக பிக்பாஸ் இது குறித்தான அறிவிப்பு ஒன்றை கூறினார்.

அந்த அறிவிப்பின் படி அதிக பணத்துக்கு பொருட்கள் வாங்கிய காரணத்தினால், மொத்தமாக அனைத்து மளிகை பொருட்களும் ரத்து செய்யப்பட்டு, பிக் பாஸ் என்ன தருகிறாரோ, அதை வைத்து மட்டுமே இந்த வாரத்தில் சமைத்து சாப்பிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆத்திரமடைந்த தர்ஷா

ஆண்கள் அணியின் சரியாத திட்டமிடல் இல்லாத காரணத்தால் அவர்களுக்கு இந்த வாரம் முழுக்க போதுமான சமையல் பொருட்கள் வழங்கப்படமாட்டாது எனத் தெரியவந்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து பெண்கள் அணியில் இருந்து ஆண்கள் அணிக்கு சென்ற தர்ஷா மிகவும் கோபாமடைந்தார். 

மேலும் உங்கள நம்புனதுக்கு நான் சாப்பிடாமா இருக்கணுமா? பிளான் ஏ, பிளான் பி ன்னு அத்தன பிளான் போட்டீங்களே உள்ள யாரு போகணும்னு பிளான் பண்ணலாயா என கேள்வி கேட்கிறார். ஆண்கள் செய்த இந்த தவறால், பெண்கள் அணியில் இருந்த ஆண்கள் அணிக்கு வந்த தர்ஷா கடும் கோபத்தில் ஆண்கள் அனைவரையும் திட்டித்தீர்த்துவிட்டார்.

குஷியில் பெண்கள் அணி

ஆண்கள் அணியின் இந்த தவறால் பெண்கள் அணியினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்ட போது மிகவும் குஷியாக கத்தி அவர்களது வெற்றியை கொண்டாடினார். மேலும் தர்ஷா கோபம் அடைந்து கத்திய போதும், அதை உற்சாகப் படுத்தி கைத்தத்தி மகிழ்ச்சி அடைந்தனர். இந்த புரோமோ வெளியானதை தொடர்ந்து, ரசிகர்கள் பலர் தர்ஷாவை பாராட்டி வருகின்றனர். அவரது வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டதாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் முத்துக் குமரன் தர்ஷாவை ஜோக்கர் எனக் கூறியதற்கு தர்ஷா சரியான பதிலடி கொடுத்துள்ளார் எனவும் கூறி வருகின்றனர். இனி ஆண்கள் அணியில் இருக்கும் தர்ஷா முழுக்க பெண்கள் அணிக்காக மட்டுமே விளையாடுவார் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.