போட்டியே புரியல.. கப்பு வேணாம்.. உளறிய தர்ஷா குப்தா.. கவ்விக் கொள்வாரா ரவீந்தர்.. வீடியோ வைரல்..
பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு ஜெயிக்கும் கப் எனக்கு வேண்டாம் என தர்ஷா குப்தா பேசியுள்ளார். இதனால், இவருக்கு இன்னும் விளையாட்டு புரியவில்லை என பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில், தன்னுடன் வந்த சக போட்டியாளர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு ஜெயிக்கும் கப் எனக்கு வேண்டாம் என தர்ஷா குப்தா பேசியிருக்கிறார். இதனைக் கேட்ட ரவீந்தரும் பவித்ராவும் இந்த நிகழ்ச்சியே இப்படித் தான் கட்டமைக்கப் பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போக்கில் தான் நாம் விளையாட வேண்டும். இதனை நம்மால மாற்ற முடியாது எனக் கூறியுள்ளனர்.
எனக்கு கப் வேண்டாம்
பிக்பாஸ் வீட்டிலுள்ள அனைவரையும் தங்களது சிறந்த விளையாட்டின் மூலம் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, இங்கு போட்டியை ஜெயித்து கப் வாங்க வேண்டும் என்பதே குறிக்கோள் என ஃபேட் மேன் ரவீந்திரனும், பவித்ரா ஜனனியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த தர்ஷா குப்தா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். உங்களைப் போல் நான் இல்லை. எனக்கு இப்படி கிடைக்கும் கப் வேண்டாம் எனக் கூறி மக்கள் மனதிலும் போட்டியாளர் மனதிலும் நல்ல பெயர் வாங்க சில வார்த்தைகளை செலவு செய்தார்.
கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்
ஆனால், இவரது கருத்துக்கு குறுக்கிட்ட ரவீந்தரும் பவித்ராவும் இந்த போட்டியின் நடைமுறையே இதுதான். இந்தப் போட்டியை விளையாட தான் நாம் வந்துள்ளோம் என அழுத்தம் திருத்தமாக கூறினர். இதையடுத்து, எதுக்கு வீட்டிற்குள் வந்தோம் எனவே தெரியால் தர்ஷா உள்ளதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
த்ரஷா பேசிய இந்த வீடியோவை பதிவிட்டு, வேலாயுதம் படத்தில் எல்லோருக்கும் ஒரு வேலை சொல்லிவிட்டு, திருட வந்ததை மறந்துவிடுவார் சிங்கமுத்து. அதுபற்றி சந்தானம் கேட்டபோது, ஐயோ அதை மறந்துட்டனே என்பார். அந்தக் காட்சியை தர்ஷா குப்தாவுடன் ஒப்பிட்டு பலரும் கேலி செய்து வருகின்றனர்.
முதல் நாளில் எகிறிய தர்ஷா
முன்னதாக, முதல் நாள் முதல் டாஸ்க்கில், தனக்கு அனைவர் பற்றியும் தெரியும். நான் பெண்கள் அணி சார்பாக விளையாட சென்றால் அனைத்தையும் நமக்கு சாதகமாக்கித் தருவேன் எனக் கூறி பவித்ரா மற்றும் பெண்கள் அணியுடன் சண்டையிட்டார். ஆனால், இப்போது, தான் யாரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்ப மாட்டேன் என பேசி பல்பு வாங்கியுள்ளார்.
நேற்றைய தினம் அதில், ஆண்கள் vs பெண்கள் என்ற போட்டியில், ஆண்கள் அணி சார்பாக விளையாட ஆண்கள் வீட்டிலிருந்து ஒரு நபர் பெண்கள் வீட்டிற்கும், பெண்கள் அணி சார்பாக விளையாட ஒரு நபர் ஆண்கள் வீட்டிற்கும் செல்ல வேண்டும் என போட்டி அறிவிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் எந்த நபர் ஆண்கள் வீட்டிற்கும் பெண்கள் வீட்டிற்கும் செல்வார் என்பதை அந்தக் குழுவினர் தேர்வு செய்ய வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது.
பாவம் பார்த்து விட்டுக் கொடுத்த தர்ஷா
இதையடுத்து, இரு குழுக்களும் தனித்தனியாக ஆலோசனை செய்த போது, யார் பெண்கள் அணியின் சார்பில் விளையாட செல்வது என்ற ஆலோசனை நடந்த சமயத்தில், தன்னை நிரூபிக்க தர்ஷா குப்தா பல காரணங்களை கூறினார். அத்துடன் அப்போதும், பவித்ரா அழுதுகொண்டே சென்றதால் பாவம் பார்த்து அவரையே ஆண்கள் அணிக்கு அனுப்ப ஒப்புக் கொண்டார் தர்ஷா. அந்த சமயத்தில் தர்ஷா கூறிய அனைத்தும் லாஜிக்காக இருந்தது போல் இருந்தது.
ரவீந்தரிடம் சிக்குவாரா தர்ஷா?
ஆனால், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு ஜெயிக்கும் கப் எனக்கு வேண்டாம் என தர்ஷா குப்தா பேசியதால் இவருக்கு இன்னும் விளையாட்டு புரியவில்லை என பலரும் கிண்டல் செய்து வர காரணமாக அமைந்துள்ளது.
அதேசமயத்தில், சாச்சனா இந்த வீட்டை விட்டு வெளியே செல்கிறேன் என கூறிய ஒற்றை வார்த்தையை வைத்து அவரை மொத்த டீமும் வெளியே அனுப்பினர். அதே மாதிரி தர்ஷாவின் இந்த வார்த்தையும் அவருக்கு எதிராக திரும்புமா எனவும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனெனில், அவர் இந்த மாதிரி பேசியதே ரவீந்தரிடம் என்பதால் இனி என்ன நடக்கும் என மக்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.
