பிக்பாஸ் வீட்டிற்குள் துடித்த ராணவ்.. கட்டு போட்டு அனுப்பிய பிக்பாஸ்.. என்னதான் ஆச்சு?
பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கை விளையாடிக் கொண்டிருந்த ராணவ், அடிபட்டு வலியால் துடித்து கையில் கட்டுடன் வீட்டிற்குள் வந்துள்ளார்.
![பிக்பாஸ் வீட்டிற்குள் துடித்த ராணவ்.. கட்டு போட்டு அனுப்பிய பிக்பாஸ்.. என்னதான் ஆச்சு? பிக்பாஸ் வீட்டிற்குள் துடித்த ராணவ்.. கட்டு போட்டு அனுப்பிய பிக்பாஸ்.. என்னதான் ஆச்சு?](https://images.hindustantimes.com/tamil/img/2024/12/17/550x309/ranav_1734443814744_1734443829027.png)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகம் தேவை இல்லை. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சி ஆரம்பம் ஆனதில் இருந்தே, போட்டியாளர்கள் போட்டியை சுவாரசியமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதை காட்டமாக பேசி, வாரம் வாரம் ட்ரில் எடுத்து வரும் அவரின் தொகுத்து வழங்கும் பாங்கு அனைவரையும் கவர்ந்து வருகிறது.
72வது நாளில் ராணவ்விற்கு வந்த வினை
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டின் 72வது நாளான இன்று போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் கொடுத்த டாஸ்கை விளையாடி வந்தனர். அப்போது, ஜெஃப்ரி ராணவ்வை கீழே தள்ளி அழுத்தியுள்ளார். இதில், ராணவ்விற்கு தோள்பட்டையில் அடிபட்டு வலியால் துடித்துள்ளார்.
இருப்பினும், பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களான அன்ஷிதா, சௌந்தர்யா, ஜெஃப்ரி போன்றோர் விளையாட்டில் ராணவ் தனியாக தெரியவேண்டும் என்பதற்காக நடித்து வருகிறார் என கூறிவந்தனர்.
ராணவ்வை நம்பாத போட்டியாளர்கள்
இருப்பினும் ராணவ் தொடர்ந்து வலியால் துடித்து வந்ததை கவனித்த அருண் அவரை பிக்பாஸிடம் அழைத்துச் சென்றார். அந்த சமயத்திலும், அன்ஷிதா போட்டியை திசைத்திருப்ப ராணவ் நடிப்பதாகவும், வலது பக்கம் திரும்பி விழுந்த ராணவ்விற்கு எப்படி இடது பக்கம் வலி வரும் என ஜெஃப்ரியும் கூறி வந்தனர்.
அந்த சமயத்தில் பேசிய பிக்பாஸ், ராணவ் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். பின் கையில் கட்டோடு பிக்பாஸ் வீட்டிற்குள் திரும்பி வந்த ராணவ்விடம் அன்ஷிதா மன்னிப்பு கேட்டார். ஆனால், சௌந்தர்யா ராணவ் மீது தான் தவறு என்பதை கூறி அவரிடம் சண்டைக்கு நின்றார்.
ராணவ்விற்கு ஓய்வு
இதற்கிடையில், பிக்பாஸ் ஆக்டிவிட்டி டாஸ்க்கில் இருந்து ராணவ்விற்கு 3 வாரம் ஓய்வு அளித்து அறிவித்துள்ளார். முன்னதாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோள் பட்டை வலியால் துடித்த நிலையில், அவரது பெற்றோர், ராணவ்வை நிகழ்ச்சியில் இருந்து வீட்டிற்கு அனுப்பி விடுமாறும், தங்கள் பிள்ளை வலியால் துடிப்பதை தங்களால் காண முடியவில்லை என்றும் பேட்டி ஒன்றில் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பார்வையாளர்கள் கேள்வி
இப்படி தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் வலியால் துடித்து வரும் ராணவ் தொடர்ந்து போட்டியில் நீடிப்பாரா அல்லது போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவாரா என தொடர்ந்து கேள்விகள் கேட்டு வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 8 தொடர் கடந்த அக்டோபர் 6ம் தேதி தொடங்கியது. பிக்பாஸ் சீசன் 8 முதலில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இந்த சீசன் தொடங்கிய நாள் முதலே பஞ்சாயத்துக்கு பஞ்சமில்லாமல் இருந்த நிலையில், நான்காவது வாரம் முடிவுறும் வேளையில் வைல்ட் காட் என்ட்ரி மூலம் 5 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவார்கள் என கடந்த 2 வாரங்களாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இது குறித்தான தகவல்களைக் கூறியுள்ளார் விஜய் சேதுபதி. இந்நிலையில், வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த 6 பேரில் ஒருவராக ராணவ் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)
டாபிக்ஸ்