சொந்தமா யோசிக்கத் தெரியாது! விளையாட்டில் சிக்கி சின்னா பின்னமாகிறார்.. அடுக்கடுக்காக வரும் புகார்கள்
பிக்பாஸ் வீட்டில் யார் ஒன்றும் இல்லாத விஷயத்தை பெரிதாக்குகிறார், யார் எல்லோரிடமும் சுலபமாக ஏமாந்து விடுகிறார் என்பசது குறித்து போட்டியாளர்கள் விவாதித்து வருகின்றனர்.

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான் என்ற காலம் இருந்தது. ஆனால், தற்போது நடந்துவரும் 8வது சீசனில் மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு போட்டிகள் மும்மரமாக இல்லை. அதுமட்டுமின்றி, விஜய் டிவி மட்டுமல்லாது, பிக்பாஸ் நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும் 24 மணி நேர நேரடியாக ஒளிபரப்பாகி வருவதால், பலரும் இந்த நிகழ்ச்சியை நேரம் கிடைக்கும் போது பார்த்து வந்து தங்கள் கருத்தகளைக் கூறி வருகின்றனர்.
விமர்சிக்கும் விஜய் சேதுபதி
இந்நிகழ்ச்சியைப் பார்த்து வாராவாரம் போட்டியாளர்களை சந்தித்து வரும் விஜய் சேதுபதியும் போட்டியாளர்களையும் அவர்கள் விளையாடும் முறையையும் பலமுறை விமர்சித்துள்ளார். இதற்கிடையில், பிக்பாஸ் வீட்டின் சுவாரசியத்தைக் கூட்டுவதற்காக தீபாவளி போனஸாக 6 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். அவர்கள் அங்கு சென்ற நிமிடத்திலிருந்து விளையாட்டின் போக்கையே மாற்றி விட்டுள்ளனர்.
போட்டியின் போக்கை மாற்றிய வைல்டு கார்டு
வெளியில் இருந்து பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த போட்டியாளர்கள் தங்களைப் பற்றி கூறுவது உண்மை என நம்பி, போட்டியாளர்கள் தங்கள் விளையாட்டின் முறையை மாற்றி வருகின்றனர்.