Marry Me.. புரொபோஸ் செய்த செளந்தர்யா.. என் வாழ்க்கையில் இதுபோல் நடந்ததில்லை! வெட்க சிரிப்பு - பிக்பாஸில் க்யூட் சம்பவம்
தன்னை சந்தித்து சர்ப்ரைஸ் செய்ய வந்து விஷ்ணுவிடம் will you marry me என புரொபோஸ் செய்து காதலை வெளிப்படுத்தியுள்ளார் செளந்தர்யா. இந்த புரொமோ விடியோ வைரலாகி வருவதுடன் ரசிகர்களும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
![Marry Me.. புரொபோஸ் செய்த செளந்தர்யா.. என் வாழ்க்கையில் இதுபோல் நடந்ததில்லை! வெட்க சிரிப்பு - பிக்பாஸில் க்யூட் சம்பவம் Marry Me.. புரொபோஸ் செய்த செளந்தர்யா.. என் வாழ்க்கையில் இதுபோல் நடந்ததில்லை! வெட்க சிரிப்பு - பிக்பாஸில் க்யூட் சம்பவம்](https://images.hindustantimes.com/tamil/img/2024/12/27/550x309/soundariya_propose_to_vishnu_1735280760301_1735280769333.png)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி, கடந்த அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கியது. இதுவரை நடந்த 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். தற்போது நிகழ்ச்சி 80 நாள்களை கடந்திருக்கும் நிலையில், இன்னும் சில வாரங்களில் முடிவடைய உள்ளது.
பிக் பாஸ் முந்தைய சீசன்களை விட மிகவும் உப்பு சப்பு இல்லாத சீசசனாக தற்போது நடந்துகொண்டிருக்கும் பிக் பாஸ் 8 இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்த கருத்துகளை ஆமோதிப்பதுபோல் டிஆர்பியிலும் பெரிய அளவில் முன்னேற்றம் காணாமலேயே இந்த சீசன் சென்று கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க பல்வேறு விதமான சர்ச்சைகளை கிளப்பியும், சண்டை சச்சரவுகளை ஊதி பெரிசாக்கியும் இந்த சீசன் பெரிய அளவில் எடுபடாமலேயே உள்ளது.
வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் போட்டியாளர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு இடையிலான சந்திப்பு, அப்போது நடக்கும் உணர்ச்சி பூர்வமான தருணங்கள், அதன் விளைவாக ஏற்படும் பிரச்னைகள் என கடந்த சில நாள்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது.
தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களான ராணவ், மஞ்சரி, ஜெப்ரி, தீபக், அன்ஷிதா போன்றோரின் உறவினர்கள் வீட்டினுள் வந்து நலம் விசாரிப்புகளும், தங்களது இன்புட்களையும் கொடுத்துவிட்டு போயுள்ளனர்.
இன்றைய பிக் பாஸில் ரசிகர்களுக்கான சர்ப்ரைஸ்
இதையடுத்து இந்த சீசனில் ரசிகர்களால் விரும்பப்படும், பேசப்படும் போட்டியாளராக இருந்து வரும் செளந்தர்யாவை சந்திக்க யார் வரப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. தற்போது அதற்கான பதில் கிடைத்திருப்பதுடன், மற்றொரு சர்ப்ரைஸான விஷயமும் நடந்துள்ளது
இன்று வெளியாகியிருக்கும் முதல் புரொமோவில் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர், செளந்தர்யா காதலர் என கிசுகிசுக்கப்பட்ட விஷ்ணு வந்துள்ளார். சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு பரிச்சியமான விஷ்ணு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் தொடர் மூலம் பிரபலமானார். இதன் பின்னர் பல்வேறு சீரியல்களில் நடித்த இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா என்ற சீரியலிலும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
காதலை வெளிப்படுத்திய செளந்தர்யா
தன்னை பார்க்க வந்த விஷ்ணுவிடம், மண்டியிட்டு ஒரு பிளேட்டில் Will You Marry Me என எழுத்துகளை வடிவமைத்து புரொபோஸ் செய்துள்ளார். இதை பார்த்து ஷாக்கான விஷ்ணு, இந்த மாதிரி மொமண்ட் என லைஃப்ல நடந்தது கிடையாது. நான் உனக்கு சர்ப்ரைஸ் பன்னலாம்னு நினைச்சா, நீ எனக்கு பன்றியா என வெட்கத்துடன் பேசுகிறார். எனக்கும் இப்படி நடந்தது கிடையாது டா என செல்லமாக பேசிய செளதர்யா வெட்கத்துடன் சிரிக்க, மற்ற போட்டியாளர்கள் இந்த க்யூட் தருணத்தை என்ஜாய் செய்கிறார்கள். இந்த சீனை வைத்து இன்றைய எபிசோட் ரசிகர்களுக்கு சிறந்த ட்ரீட்டாக அமையும் என்ற தெரிகிறது.
நீண்ட நாள் பழக்கம்
விஷ்ணு - செளந்தர்யா இடையே நீண்ட நாள்களாக பழக்கம் இருந்து வருகிறது. இவர்கள் இருவரும் காதலிப்பதாக பல முறை வதந்திகள் பரவிய நிலையில், செளந்தர்யா தனது பிரண்ட் தான் என சொல்லி வந்துள்ளார் விஷ்ணு.
கடந்த பிக் பாஸ் சீசனில் கடைசி எபிசோட் வரை இருந்த போட்டியாளர்களில் ஒருவராக விஷ்ணு உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் மனமுடைந்த இருந்த நேரத்தில் விடியோ கால் மூலம் விஷ்ணு பேசியது செளந்தர்யாவிடம் தான். ஆனால் அப்போது அவரை தனது தோழி என்று குறிப்பிட்டார் விஷ்ணு. இன்று நடைபெற்றிருக்கும் புரொபோசல் இப்போது இருவருக்கும் இடையிலான காதலை உறுதிப்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு இடையே இதற்கு முன் காதல் மலர்ந்துள்ளது. ஆனால் போட்டியாளர்களை சந்திக்க வருவதில் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே இதுவரை வந்துள்ளனர். இப்படியான நிலையில் முதல் முறையாக ரியல் காதலர்களுக்கு இடையே சந்திப்பும், க்யூட்டான புரொபோசலும் பிக் பாஸில் நடந்துள்ளது.
ரியல் காதலர்களான செளந்தர்யா - விஷ்ணு சந்திப்பு தற்போது நடந்திருக்கும் நிலையில், அடுத்து மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர் அருண், கடந்த சீசன் வெற்றியாளர் அர்ச்சனா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பும் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)
டாபிக்ஸ்