Abishek Raaja: “பிடிவாதக்காரி.. இவன் வேண்டாம்னு எத்தனையோ பேர் சொன்னாங்க.. எனக்காக நின்னா” அபிஷேக் ராஜா எமோஷனல்!
Abishek Raaja: நானும் சுவாதியும் பழகிக் கொண்டிருந்தபோது பலமுறை இந்த உறவு வேண்டாம் இது கல்யாணத்தில் முடியாது என்றெல்லாம் சொல்லி இருக்கிறேன். ஆனால் அவளுக்கு ஒரு பிடிவாதம் இருந்தது. - அபிஷேக் ராஜா எமோஷனல்!

Abishek Raaja: யூடியூப்பில், பல திரைப்படங்களை விமர்சனம் செய்து பிரபலமானவர் அபிஷேக்ராஜா. அதில் கிடைத்த பிரபலத்தின் வாயிலாக, பிக்பாஸ் தமிழ் 5 ஆவது சீசனிலும் போட்டியாளராக களமிறங்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. வீட்டிற்குள் அவர் சக போட்டியாளர்களுடன் நடந்து கொண்ட விதமும், பேசிய வார்த்தைகளும் மக்களிடம் கடுமையான விமர்சனங்களை பெற்றன.
நெட்டிசன்கள் இவர் பேசுவதை க்ரிஞ்ச் என்று கூறி ட்ரோல் செய்தனர். இதனையடுத்து அவர் அவர் பிக்பாஸில் நுழைந்த 21ம் நாள் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் அவர் அண்மையில் தன்னுடைய காதலியான சுவாதி நடராஜனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இவர்கள் அண்மையில் கலாட்டா சேனலுக்கு பேட்டியளித்தனர்.
அவன் வேண்டாம் என்று சொன்னார்கள்
இது குறித்து அபிஷேக் பேசும் போது, “உண்மையில் எனக்கும் என்னுடைய கடந்த காலம், அதில் ஏற்பட்ட விவாகரத்து உள்ளிட்டவை பயங்கரமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மைதான். ஆனாலும் நாம் அதிலிருந்து மீண்டு கடந்து சென்று தான் ஆக வேண்டும்.