பூசி மொழுகும் போட்டியாளர்கள்! புரட்டி எடுக்கு விஜய் சேதுபதி! பிக்பாஸில் இன்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பூசி மொழுகும் போட்டியாளர்கள்! புரட்டி எடுக்கு விஜய் சேதுபதி! பிக்பாஸில் இன்று!

பூசி மொழுகும் போட்டியாளர்கள்! புரட்டி எடுக்கு விஜய் சேதுபதி! பிக்பாஸில் இன்று!

Suguna Devi P HT Tamil
Published Oct 27, 2024 09:55 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 22 ஆவது நாளான இன்றைய புரோமோ வெளியாகியுள்ளது. அதில் போட்டியாளர்களை விஜய் சேதுபதி சரமாரியாக கேள்வி கேட்கிறார்.

பூசி மொழுகும் போட்டியாளர்கள்! புரட்டி எடுக்கு விஜய் சேதுபதி! பிக்பாஸில் இன்று!
பூசி மொழுகும் போட்டியாளர்கள்! புரட்டி எடுக்கு விஜய் சேதுபதி! பிக்பாஸில் இன்று!

தனிநபர் தாக்குதல் 

பிக்பாஸில் தற்போது மூன்றாவது வார இறுதி வந்து விட்டது. ஆனால் கடந்த மூன்று வாரங்களாக ஒரு நூறு நாள் பிக்பாஸில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் அரங்கேற்றி விட்டன. இந்நிலையில் இந்த வார நாட்களில் பிக் பாஸ் ஹோட்டல் டாஸ்க் எனும் ஒரு டாஸ்க்கை கொடுத்து இருந்தார். இந்த டாஸ்க்கில் தான் தனி நபரை குறி வைத்து எதிரணிகள் விளையாடியதாக விஜய் சேதுபதி கூறுகிறார். இந்த டாஸ்க்கில் முதலில் பெண்கள் அணியினர் ஹோட்டல் பணியாளர்களாகவும், ஆண்கள் அணியினர் வாடிக்கையாளர்களாகவும் விளையாடினர். இதில் பவித்ரா ஹோட்டல் மேனேஜர் ஆக விளையாடினார். 

பவித்ராவை குறி  வைத்து ஆண்கள் அணியினர் குற்றச்சாட்டுகளை அடுக்கி அவரை மேனேஜர் என்ற இடத்தில் இருந்து விளக்குவதையே நோக்கமாக வைத்து விளையாடினார். மேலும் ஆண்கள் அணியினர் ஹோட்டல் பணியாளர்களாக விளையாடிய போது மேனேஜர் ஆக இருந்த முத்துவை பெண்கள் அணி குறி வைத்து விரட்டினர். மேலும் சௌந்தர்யா மேனேஜர் ஆக இருந்த போதும் இதே நிகழ்ந்தது. 

பூசி மொழுகும் போட்டியாளர்கள்

இந்த சீசன் தொடங்கி முதல் வார இறுதி எபிசோட்டில் இருந்தே தொகுப்பாளர் விஜய் சேதுபதி கேட்கும் எந்த கேள்விகளுக்கும் போட்டியாளர்கள் நேரடியாக பதில் அளிக்க வில்லை. சுற்றி வளைத்து தாங்கள் கூற வந்ததை தெளிவாக கூறாமல் பதிலளித்து வந்தனர். இதனை மீண்டும் மீண்டும் விஜய் சேதுபதி சுட்டிக் காட்டி வந்தார். ஆனால் யாரும் வெளிப்படையாக பேசுவதாக இல்லை. 

இந்நிலையில் இன்றைய புரோமோ வெளியாகி உள்ளது. அதில் ஹோட்டல் டாஸ்க்கில் நடந்த தனி நபர் தாக்குதல் குறித்து விஜய் சேதுபதி கேள்வி கேட்ட போது, அப்படி எதுவும் நடக்க வில்லை எனக் கூறுகின்றனர். இதற்கு கடுப்பான விஜய் சேதுபதி இவர்கள் எப்படி பூசி மொழுகுவது என யோசிக்கின்றனர். இந்த நிலையில் முத்துக்குமார் மற்றும் சௌந்தர்யா இந்த மாதிரி நடக்க வில்லை எனும் தொனியில் பதில் அளிக்கின்றனர். குறிப்பாக ஜெப்ரி கோபத்தில் மேசையை தட்டியதும் விளையாட்டா என கேட்டு விஜய் சேதுபதி கண்டிக்கிறார். 

ஒருவர் செய்த தவறை வெளிப்படையாக கூறாமல் பூசி மொழுகி டிப்ளோமெட்டிக் ஆக பேசுவது ரசிகர்கள் மத்தியிலும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது விளையாட்டில் இருநந்து நாமினேஷன் ஆகமால் இருப்பதற்கு போட்டியாளர்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் எனப் பேசப்படுகிறது. இதனை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.