எந்த வேலையும் செய்யாத பாஸ் யார்?தூண்டி விட்ட விஜய் சேதுபதி! பிக்பாஸ் புரோமோ!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எந்த வேலையும் செய்யாத பாஸ் யார்?தூண்டி விட்ட விஜய் சேதுபதி! பிக்பாஸ் புரோமோ!

எந்த வேலையும் செய்யாத பாஸ் யார்?தூண்டி விட்ட விஜய் சேதுபதி! பிக்பாஸ் புரோமோ!

Suguna Devi P HT Tamil
Published Oct 27, 2024 02:44 PM IST

தமிழ் பிக் பாஸ் சீசன் 8 கடந்த அக்டோபர் ஆறாம் தேதி அன்று தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் புதுவிதமான விதிமுறைகளும் புது தொகுப்பாளரும் என முழுக்க முழுக்க புதிய பாணியிலேயே இந்த பிக் பாஸ் நடந்து வருகிறது.

எந்த வேலையும் செய்யாத பாஸ் யார்?தூண்டி விட்ட விஜய் சேதுபதி! பிக்பாஸ் புரோமோ!
எந்த வேலையும் செய்யாத பாஸ் யார்?தூண்டி விட்ட விஜய் சேதுபதி! பிக்பாஸ் புரோமோ!

பிக்பாஸ் புரோமோ 

பிக் பாஸ் தொடங்கி இருபத்தி ரெண்டாவது நாளான இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் கடந்த வாரம் நடந்த ஹோட்டல் டாஸ்க் எந்த வேலையும் செய்யாமல் அனைவரும் வேலை வாங்கிக்கொண்டு மேனேஜராக நடந்த போட்டியாளரை தேர்வு செய்யுமாறு விஜய் சேதுபதி போட்டியாளரிடம் கூறுகிறார். இதனை அடுத்து பெண்கள் அணியில் சுனிதா அதிக அதிகம் நபரால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகமாக மேனேஜர் போல் அனைவரும் வேலை வாங்கும் நபராக இருப்பதாக ஜாக்குலின் மற்றும் தர்ஷிகா ஆகியோர் தெரிவிக்கின்றனர். 

மேலும் சூனிதாவிற்கு வீட்டு வேலைகள் செய்ய விருப்பமில்லை எனவும், அனைவரையும் வேலை வாங்கும் பாஸியாக இருக்கிறார் எனவும் சக போட்டியாளர்கள் கூறுகின்றனர்.  ஆண்கள் அணியில் முத்துக்குமாரை அதிகம் பேர் தேர்ந்தெடுக்கின்றனர். அதிலும் அவர் சரியாக வேலை பார்ப்பதில்லை எனவும், அணைவரிடம் இருந்தும் வேலை வாங்குகிறார் எனவும் கூறுகிறார். 

சுயமாக சிந்திக்கத் தெரியாதவர் 

மேலும் சுயமாக சிந்திக்க தெரியாமல் அடுத்தவர்களின் பேச்சை மட்டுமே கேட்டு விளையாடி வரும் நபரை தேர்ந்தெடுக்குமாறு விஜய் சேதுபதி கூறுகிறார். அதற்கு ஒரு சில ஜெஃப்ரியை தேர்ந்தெடுக்கின்றனர். இதனை அடுத்த ஜெஃப்ரி சுயமாக சிந்திக்கத் தெரியாதவராக இருப்பவர் என்றபோது அருண் அவ்வாறு சிந்திக்கவில்லை என கூறி அவரது கையில் அந்த டேகை கட்டுகிறார். இவ்வாறு கட்டும்போது ரசிகர்கள் கத்தி ஆர்ப்பரிக்கின்றனர்.

சுவாரஸ்யம் சற்றும் குறையாமல் பிக் பாஸ் சீசன் 8 சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் அவரவர்களுக்கு ஏற்றவாறு அவர் அவர்கள் விரும்பும் வரையில் விரும்பும் வகையில் நடக்கின்றனர். குறிப்பாக அடுத்தவர்களோடு ஒத்துழைக்காமல் அவர்களின் வெற்றியை நோக்கி மட்டுமே பயணித்துக் கொண்டிருந்தனர் கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாகவே பிக் பாஸ் சீசன் 8 முற்றிலும் சண்டையும் சச்சரவுமாக இருந்து வந்துள்ளது. கடந்த சீசன் களை விட அதிக சுவாரசியங்கள் நிறைந்த சீசனாக இந்த சீசன் பார்க்கப்படுகிறது. மேலும் ரசிகர்கள் பலர் இந்த சீசன் தொடங்கிய நாளிலிருந்து வந்து கொண்டிருக்கும் சண்டையைப் பார்க்க இது ஒரு வேலை உண்மையாகவே ஸ்கிரிப்டட் ஷோவாக இருக்கலாம் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர். 

பிக் பாஸ் தொடங்கிய முதல் வாரத்தில் பேட்மேன் ரவீந்திரன் எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த இரண்டாவது வாரமாக கடந்த வாரத்தில் மரணம் எளிமை செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று தர்சா எழும்பிட் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகிறது.