சூடு கண்ட பூனையாக இருக்கும் த்ரிஷா.. எச்சரிக்கையுடன் செயல்படும் விஜய் - கிசுகிசு பற்றி பயில்வான் பேச்சு
சூடு கண்ட பூனையாக த்ரிஷா இருக்கிறார். ஆனால் எச்சரிக்கையுடன் விஜய் செயல்படுகிறார் என விஜய் - த்ரிஷா உறவு குறித்து உலா வரும் வதந்தி பற்றி பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.
தளபதி விஜய் - த்ரிஷா இடையே சமீப காலமாக கிசுகிசுக்களும், இவர்களை இணைத்து பல்வேறு செய்திகளும் உலா வருகின்றன. சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு இருவரும் இணைந்து தனி விமானத்தில் செல்வதற்கு முன் விமான நிலையத்தில் வந்து விடியோக்களும் வைரல் ஆகின. இதன் பின்னர் விஜய் - த்ரிஷாவை இணைத்து தொடர்ந்து பல்வேறு வதந்திகள் வெளியான வண்ணம் இருக்கின்றன.
இதைத்தொடர்ந்து, இதுதொடர்பாக நியூஸ்டன் தமிழ் என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, "விஜய் - த்ரிஷா குறித்து பல்வேறு கிசுகிசுக்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய பின்னரும் த்ரிஷாவுடனான தொடர்பை விஜய் விடவில்லை போல தெரிகிறது.
விஜய் - த்ரிஷா பற்ற உலாவும் வதந்திகள்
விஜய் அலுவலகத்துக்கு அருகிலேயே த்ரிஷா பிளாட் வாடகைக்கு எடுத்திருகிறார் எனவும், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசிக்கொள்கிறார்கள் எனவும் பேசப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கோவாவில் கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தாட்டில் திருமணத்துக்கு தனி விமானத்தில் சென்றுள்ளார்கள்.
பொதுவாக ஐயர், ஐயங்கார் வீட்டு திருமணங்களில் தந்தை மடியில் மகள் அமர்ந்திருப்பார். மணமகன் நின்றுகொண்டே தாலி கட்டுவார். திருமணம் முடிந்த கையொடு தாலி கட்டும் கீர்த்தி சுரேஷ் கழுத்தில் ஆண்டனி தாலி கட்டும் புகைப்படங்கள் மட்டுமே வெளியானது
இந்த திருமணத்துக்கு த்ரிஷா, மாளவிகா மோனன் வந்துள்ளனர். இவர்களின் புகைப்படம் எதுவும் வெளியாகவில்லை. சென்னையில் இருந்து சார்டட் பிளைட்டில் விஜய், த்ரிஷா ஆகியோர் சென்றுள்ளனர். இதில் செக்யூரிட்டி சோதனையின்போது இருந்து கடிகாரம் மூலம் தெளிவாக தெரிந்தது.
விஜய்யை நோக்கி பாயும் கேள்விகள்
தொடர்ந்து த்ரிஷாவுடன் ஒன்றாகவே விஜய் பயணத்து வருவதால் பலரும் சமூக வலைத்தளங்களில் அண்ணி சங்கீதாவை எங்கே என கேள்வி எழுப்பி வருகின்றனர். த்ரிஷாவுடன் தான் அவர் வாழ்ந்து வருகிறரா என்றும் கேள்விகளை துளைத்து வருகிறார்கள். இதனால் விஜய் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறார். விஜய்யுடன், த்ரிஷாவும் சென்றதால் இந்த கேள்விகள் விஜய் மீது பாய்ந்து வருகின்றன.
பொதுவாக திருமண விழாக்களுக்கு திருமணமான நடிகர்கள் மனைவியுடன் செல்வார்கள். திருமணமாகாத பிரபலங்கள் தங்களது காதலன் அல்லது காதலியோடு செல்வார்கள். இதன் மூலம் விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். அப்படித்தான் சிம்புடன், பிரபுதேவாவுடன் சில திருமணங்களுக்கு ஒன்றாக நயன்தாரா வந்த புகைப்படங்கள் ஆதாரங்களாக உலவி வருகின்றன.
நடிகர் விஜய் மறுமணம் செய்து கொள்ளபோகிறாரா என்கிற கேள்விக்கு எனவே த்ரிஷாவே சொல்லியுள்ளார். "திருமண்ததின் மீது நம்பிக்கை இல்லை. திரைப்பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். பின்னர் புரிந்து கொண்டார்களோ இல்லையோ பிரிந்து விடுகிறார்கள். பிரிந்து கொள்ளவா திருமணம் செய்ய வேண்டும். இந்த உலகத்தில் யாரை நம்புவது என தெரியவில்லை" என எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த வயதில் த்ரிஷா திருமணம் செய்து கொண்டால் அவரது மார்க்கெட் சரிந்துவிடும். எனவே த்ரிஷாவின் தாயாரும் மகளின் திருமணம் பற்றி கவலைப்படவில்லை. த்ரிஷாவுக்கு ஏற்கனவே தயாரிப்பாளர் வருண் மணியனுடன் நிச்சியதார்த்தம் வரை நடந்துள்ளது. பின்னர் திருமணம் நடக்காமல் நின்றுபோனது. இதனை நினைவூட்டி கொள்கிறேன்
சூடு கண்ட பூனையாக இருக்கும் த்ரிஷா
சூடு கண்ட பூனை என்று சொல்வார்கள். சூடான பாலை குடிக்காமல் அப்படியே சுற்றி வரை. அந்த மனநிலையில் த்ரிஷா இருக்கிறாரோ என்று தெரிகிறது. விஜய்யி த்ரிஷா திருமணம் செய்து கொள்வதற்கு வாய்ப்பு இல்லை.
விஜய்க்கு கல்லூரி படிக்கும் மகன், மகள் இருக்கிறார்கள். இருவரும் அம்மாவுடன் லண்டனில் இருக்கிறார்கள். அரசியல் கட்சி வேற விஜய் தொடங்கியுள்ளார். இத்தகைய சூழ்நிலையில் அவர் தனது மரியாதையை கெடுத்து கொள்ள மாட்டார். எனவே கேர்ள்பிரண்ட், பாய்பிரண்ட் என இருவரிடையே உறவு செல்லும் தவிர மறுமணம் வரை செல்லாது.
எச்சரிக்கையுடன் செயல்படுகிறார் விஜய்
விஜய் ஒரே இடத்துக்கு சென்றால் அவரை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நெரிசல் உண்டாகி விபத்துகள் ஏற்படலாம். அதேபோல் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தால் நேரில் ஆறுதல் சொல்லலாம். விஜய்யை பொறுத்தவரை விமர்சகர்களுக்கு பாராட்ட கற்றுக்கொள்ளுங்கள் என்பது தான்.
விஜய் நேரில் சென்றால் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கமாட்டார்கள். அவரது பெயரை கெடுக்க அரசு நினைத்துக்கொண்டிருக்கிறது. அந்த துர்பாக்கியத்துக்கு ஆளாகிவிட கூடாது என்பதை உணர்ந்து எச்சரிக்கையுடன் செயல்படுகிறார்"
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.