‘இது ஒரு பொன்மாலை பொழுது’ நன்றி மறந்த வைரமுத்து..காபி கொடுத்து அசிங்கப்படுத்திய இயக்குநர்! - ஓப்பனாக பேசிய மகன்!
சூலம் படத்திற்கு முன்னதாகவே நிழல்கள் படம் வெளியாகிவிட்டது. அந்தப்படத்தின் மூலம் கிடைத்த வெளிச்சமானது, வைரமுத்துவின் மீது விழ, பத்திரிகைகள் அவரிடம் சென்று பேட்டி கண்டது. அந்த பேட்டியில் வைரமுத்து தன்னை பாரதிராஜா தான் அறிமுகப்படுத்தினார் என்று கூறிவிட்டார். - பாலாஜி

ஆஸ்கார் மூவீஸ் உரிமையாளரும், இயக்குநருமான எம். பாஸ்கர் அவர்களின் மகன் வைரமுத்து அப்பாவிற்கு செய்த துரோகம் குறித்து மீடியா சர்க்கிள் யூடியூப் சேனலுக்கு பேசினார்.
இளையராஜாவின் சூலம்
இது குறித்து அவர் பேசும் போது, ‘இளையராஜாதான் வைரமுத்துவை அப்பாவிடம் அறிமுகப்படுத்தினார். அப்போது அவர், இவர் பெயர் வைரமுத்து, மிக நன்றாக பாட்டு எழுதுவார். இவருக்கு நாம் வாய்ப்பு கொடுக்கலாம் என்று கூற, அவரைப் பார்த்த அப்பா, சிறிது நேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்தார்.
இதனையடுத்து, இளையராஜா சூலம் படத்திற்கு இசையமைத்திருந்த இரண்டு டியூன்களை கொடுத்து, இந்த ட்யூன்களுக்கு பாடல்களை எழுதி வாருங்கள் என்று அனுப்பி வைத்தார். அதனைக்கேட்ட வைரமுத்து, அதற்கான பாடல்களை எழுதி அப்பாவிடம் கொடுத்தார். பாடல் வரிகள் அப்பாவிற்கு மிகவும் பிடித்துப் போக, அதே வரிகள் அப்படியே இருக்கட்டும் என்று கூறிவிட்டார். இதையடுத்து வைரமுத்து அப்பாவிடம் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்காக உங்களுக்கு நன்றி என்று தெரிவித்தார்.


