“வீட்டுக்குள் இருந்து கொண்டே விரட்டி அடித்த கொடுமை.. ஸ்ரீதருக்கு விக்ரம் செய்த பச்சை துரோகம்..” கிழித்த பாலாஜி பிரபு!
விக்ரம் சாரிடம் சொல்லிவிட்டு வந்து விடுகிறேன் என்று மேலே சென்றவர், கீழே வந்து விக்ரம் ஹைதராபாத்தில் இருக்கிறாராம் என்று மாற்றி பேசினார். இதை ஸ்ரீதர் என் அப்பாவிடம், இந்த உலகம் மிகவும் நன்றி கெட்ட உலகம் என்று சொல்லி வருத்தப்பட்டார்” - பாலாஜி பிரபு!

“வீட்டுக்குள் இருந்து கொண்டே விரட்டி அடித்த கொடுமை.. ஸ்ரீதருக்கு விக்ரம் செய்த பச்சை துரோகம்..” கிழித்த பாலாஜி பிரபு!
பிரபல தயாரிப்பாளுரும், இயக்குநருமான பாலாஜியின் மகன் பாலாஜி பிரபு, இயக்குநர் ஸ்ரீதருக்கு நடிகர் விக்ரம் செய்த துரோகத்தை பற்றி மீடியா சர்க்கிள் சேனலுக்கு கடந்த மாதம் கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
வாய்ப்புக்காக காத்துக்கிடந்த விக்ரம்
இது குறித்து அவர் பேசும் போது, “இயக்குநர் ஸ்ரீதர் அலுவலகத்தில் காலையிலிருந்து, இரவு வரை ஒரே ஒரு வாய்ப்புக்காக காத்துக் கிடந்தவர்தான் இந்த நடிகர் விக்ரம். அதற்கு காரணம், ஸ்ரீதர் சார் மிகவும் பிரபலமான இயக்குநர். அவர் மூலமாக நாம் அறிமுகமானால், ஒரே நாளில் பிரபலமாக முடியும் என்ற கணக்கில் தான் விக்ரம் அங்கு அப்படி காத்துக் கிடந்தார்.