அகமதாபாத் விமான விபத்து.. ‘முன்னாள் மனைவிக்கு இந்நாள் மனைவியுடன் பிரார்த்தனை’ - நடிகர் பாலா உருக்கம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அகமதாபாத் விமான விபத்து.. ‘முன்னாள் மனைவிக்கு இந்நாள் மனைவியுடன் பிரார்த்தனை’ - நடிகர் பாலா உருக்கம்!

அகமதாபாத் விமான விபத்து.. ‘முன்னாள் மனைவிக்கு இந்நாள் மனைவியுடன் பிரார்த்தனை’ - நடிகர் பாலா உருக்கம்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 13, 2025 05:46 PM IST

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்துக்குப் பிறகு நடிகர் பாலா மற்றும் அவரது மனைவி ஆகியோர் பாலாவின் முன்னாள் மனைவி எலிசபெத் உதயனின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்வதாக கூறியிருக்கின்றனர்.

அகமதாபாத் விமான விபத்து.. ‘முன்னாள் மனைவிக்கு இந்நாள் மனைவியுடன் பிரார்த்தனை’ - நடிகர் பாலா உருக்கம்!
அகமதாபாத் விமான விபத்து.. ‘முன்னாள் மனைவிக்கு இந்நாள் மனைவியுடன் பிரார்த்தனை’ - நடிகர் பாலா உருக்கம்!

சிறுத்தை சிவாவின் தம்பியும், நடிகருமான பாலாவின் முன்னாள் மனைவி டாக்டர் எலிசபெத் உதயனும் அதே மருத்துவக் கல்லூரியில்தான் படித்து வருகிறார். இந்த நிலையில் அவர் பாதுகாப்பாக இருக்க தன் மனைவி கோகிலாவுடன் சேர்ந்து கடவுளை வேண்டிக்கொள்வதாக நடிகர் பாலா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

பாதுகாப்பாக இருங்கள்

அந்தப்பதிவில் ‘அகமதாபாத் விமான விபத்து அதிர்ச்சி அளிக்கிறது. நம்மை நாமே எப்படி ஆறுதல்படுத்திக் கொள்வது என்று தெரிய வில்லை.’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று குறிப்பிட்ட பாலா தனது முன்னாள் மனைவி டாக்டர் எலிசபெத்தைக் குறிப்பிட்டு, டாக்டர் எலிசபெத் எனது பிரார்த்தனைகள் எப்போதும் உங்களுடன் இருக்கும். பாதுகாப்பாக இருங்கள். கடவுளின் ஆசீர்வாதத்தை நாடுங்கள்.’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

பாலா கடந்த 2021-ல் டாக்டர் எலிசபெத்தை மணந்தார்; அவர்கள் பிரிவு குறித்தான விவரம் பெரிதாக யாருக்கும் தெரியவில்லை. பாலா கடந்த 2024-ம் ஆண்டு கோகிலாவை திருமணம் செய்து கொண்டார்.

முன்னதாக, விமான விபத்தில் இருந்து பாதுகாப்பாக இருப்பதாக எலிசெபத் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

அதில், ‘எங்கள் கல்லூரியில் நடந்த விமான விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக தயவுசெய்து பிரார்த்தனை செய்யுங்கள். நான் பாதுகாப்பாக இருக்கிறேன்.

நான் பாதுகாப்பாக இருக்கிறேன்

ஆனால், எங்கள் சக மற்றும் எம்.பி.பி.எஸ் மாணவர்கள் பலர் இறந்து விட்டனர். இன்னும் பல மாணவர்கள் காயமடைந்து இருக்கின்றனர். அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். எலிசபெத் கல்லூரியில் டிரான்ஸ்மிஷன் மெடிசின் பிரிவில் முதுகலை பட்டம் படித்து வருகிறார்.

இந்த விபத்து குறித்து ஏர் இந்தியா எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டதாவது, ‘12 ஆண்டுகள் பழமையான போயிங் 787-8 விமானம் அகமதாபாத்தில் இருந்து 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் மதியம் 13;38 மணிக்கு புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். உயிர் தப்பிய ஒரே நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பயணிகளில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டன், 7 போர்த்துகீசிய நாட்டினர் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஒருவர் பயணித்தார். உயிர் தப்பியவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர் ஆவார்’ என்று குறிப்பிட்டு இருக்கிறது.