செம கடுப்பான ஈஸ்வரி.. ஆட்டத்தை ஆரம்பித்த ராதிகா.. வீட்டிற்கு வந்த லெட்டர்.. பாக்கிய எடுக்க போகும் முடிவு என்ன?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்க்கலாம். தரமான சம்பவம் காத்திருக்கிறது. இதில் பாக்கியலட்சுமி என்ன முடிவு எடுக்கப் போகிறார்? கேசை வாபஸ் வாங்குவாரா என்பதை பார்ப்போம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்க்கலாம். இனியா ஹாலில் அமர்ந்து தனது டான்ஸ் நிகழ்ச்சிக்காக மேக்கப் போட்டு பார்க்கிறார். அதற்காக அவருடைய மேக்கப் பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்து ஒன்றொன்றாக சோதனை செய்து பார்க்கிறார்.
அப்போது திடீரென இனியாவுக்கு போன் கால் வருகிறது. அதை பேசுவதற்காக அவர் வெளியே செல்கிறார். பின்னர் அந்த சமயத்தில் அங்கு வரும் மயு மேக்கப் ஐட்டத்தை பார்த்து ஆசைப்பட்டு அதனை எடுத்து போட்டு அழகு பார்க்கிறார். அப்போது அங்கு வந்த இனியா கோபமடைந்து ஒருவருடைய பொருளை எப்படி கேட்காமல் எடுப்பாய் என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.
பாக்கியலட்சுமி என்ட்ரி
அந்த சமயத்தில் அங்கு ஈஸ்வரி என்ட்ரி கொடுக்கிறார். எப்போ பிரச்சனை வரும் ராதிகாவையும் மயூவையும் வீட்டை விட்டு துரத்தலாம் என காத்துக் கொண்டிருக்கும் ஈஸ்வரிக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. ஈஸ்வரி வந்து மயூவை உன்னை யார் இதையெல்லாம் எடுக்க சொன்னது. நீ ஹால் எதற்கு வந்தாய் ரூமில் இருக்க வேண்டியதுதானே? இருக்க வேண்டிய இடம் தெரிந்து இருக்க வேண்டும் என மயூவை திட்டுகிறார்.