Baakiyalakshmi: நைட் பார்ட்டியில் இனியா; பாக்யா பக்கம் சாயும் கோபி; அதிர்ச்சியில் ராதிகா; பாக்கியலட்சுமி சீரியலில் இன்று
Baakiyalakshmi: அதிர்ச்சியடைந்த கோபி, இதற்கு நீங்கள் என்னை விஷம் கொடுத்தே கொன்று விடலாம் என்று சொல்ல, இடையில் கோபமடைந்த அவனது அப்பா, இன்னும் கொஞ்சம் நேரம் நீ இங்கு இருந்தால், நான் அதையும் செய்தே விடுவேன் என்று கொந்தளிக்க, கோபியை வெளியே தள்ளி ஈஸ்வரி கதவை சாத்தினாள். - பாக்கியலட்சுமி சீரியலில் இன்று

Baakiyalakshmi: விஜய் டிவி தொலைக்காட்சியில், பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. இதில் ப்ளவர்வாஷ் தடுக்கி விழுந்ததால், ராதிகாவின் கர்ப்பம் கலைந்த நிலையில், ஈஸ்வரி தள்ளிவிட்டுதான், அவரின் கர்ப்பம் கலைந்துவிட்டது என்று சொல்லி, ராதிகாவின் அம்மா கமலா கொடுத்த புகாரின் அடிப்படையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
காப்பாற்றிக்கொண்டு வந்த பாக்யா
இதற்கிடையே, பார்க்கில் பாக்யாவை பார்த்த மயூ உண்மையைச் சொல்ல, ராதிகாவுக்கு தெரியாமல், மயூவை கோர்ட்டில் ஆஜர் படுத்தி, உண்மையை வெளிக்கொண்டு வந்தாள் பாக்யா. இந்த நிலையில், ஈஸ்வரி நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார். இந்த உண்மை தெரியாமல், கோபி அம்மாவுக்கு எதிராக சாட்சி சொல்லி இருந்த நிலையில், பின்னர் வருந்தினான்.
தொடர்ந்து அம்மாவிடம் அவன் சென்ற போது, ஈஸ்வரி அவனிடம்… நீ என்னுடைய மகனே கிடையாது. உன்னை நான் தலைமுழுகுவதாக சொன்னார். இதில் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றகோபி ராதிகாவிடம், உங்களால்தான் எனக்கு இந்த நிலைமை என்று கூறி ஆதங்கப்பட்டான். இந்த நிலையில், இன்றைய தினம் நடக்கும் நிகழ்வுகளை பார்க்கலாம்.