பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 15 எபிசோட்: கோபியை வீட்டை விட்டு வெளியேற சொன்ன பாக்கியா.. பாக்கியலட்சுமி சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 15 எபிசோட்: கோபியை வீட்டை விட்டு வெளியேற சொன்ன பாக்கியா.. பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 15 எபிசோட்: கோபியை வீட்டை விட்டு வெளியேற சொன்ன பாக்கியா.. பாக்கியலட்சுமி சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published Mar 15, 2025 09:00 AM IST

பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 15 எபிசோட்: குடும்ப விஷயத்தில் தொடர்ந்து மூக்கை நுழைத்து பிரச்சனை செய்யும் கோபியை நினைத்து கோபமான பாக்கியா அவரை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறாள்.

பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 15 எபிசோட்: கோபியை வீட்டை விட்டு வெளியேற சொன்ன பாக்கியா.. பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 15 எபிசோட்: கோபியை வீட்டை விட்டு வெளியேற சொன்ன பாக்கியா.. பாக்கியலட்சுமி சீரியல்

பதிலடி தந்த செல்வி

இத்தனை அசிங்கப்படுத்திய பிறகும் இந்த வீட்டிற்குள் வரும் செல்வியை ஈஸ்வரியும் கோபியும் வாய்க்கு வந்த படி பேசுகின்றனர். இதனால், கலங்கும் செல்வி, நான் மரியாதை தராத இந்த வீட்டிற்கு வரணும்ன்னு நினைக்கல. என்னோட நகையை வாங்க வந்தேன் என சொல்கிறாள். நகையோடு இவ பொருள் என்ன இருக்கோ அதை எல்லாம் கொடுத்துடு திரும்ப அவ இந்த வீட்டுக்கு வரவே கூடாதுன்னு ஈஸ்வரி மேலும் அசிங்கப்படுத்துகிறாள். இதை எல்லாம் கேட்டு பாக்கியா மிகவும் வருத்தப்படுகிறாள்.

போலீஸ் ஸ்டேஷன் போனா

அதன்பின், என் பக்கத்து வீட்டில இருக்கவங்க எல்லாம் உங்க மேல கேஸ் கொடுக்க சொன்னாங்க. நான் தான் கொடுக்கல. அப்படி நான் கேஸ் கொடுத்தா எல்லா உண்மையும் சொல்ல வேண்டி இருக்கும். இனியா பாப்பாவும் என் பையனும் பழகுனத சொல்ல வேண்டி இருக்கும். அப்புறம் போலீஸ் இனியாவ கூப்டு விசாரப்பாங்க.

இனியாக்கு இப்படி பண்ண மனசு வரல

அந்த புள்ளைய போலீஸ் ஸ்டேஷன்ல நிறுத்த எனக்கு மனசு வரல. என்ன இருந்காலும் இனியா நான் தூக்கி வளர்த்துன பொன்னு என தன் பக்க நியாயத்தை கூற, மொத்த வீடே செல்வியை மிரட்ட வருகிறது. இதைப் பார்த்த பாக்கியா செல்வியை அனுப்புகிறாள்.

பாக்கியாவை கேள்வி கேட்ட கோபி

பின், வீட்டில் நடக்கும் பிரச்சனைகளால் மனமுடைந்து இருக்கும் பாக்கியாவை பார்க்க வந்த கோபி, ஆபிஸ் விஷயத்துல எல்லா முடிவையும் கரெக்டா எடுக்குற நீ குடும்பம்ன்னு வந்துட்டா ஏன் இப்படி குழம்புற என கேட்க பாக்கியாவிற்கு கோவம் வந்தது. இந்த வீட்டுல நடக்குற பிரச்சனை எல்லாத்தையும் மறந்துடு. எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன் என கோபி சொன்னதும், பொறுமாயாக இருந்த பாக்கிய பொங்கி எழ ஆரம்பிக்கிறாள்.

எரிச்சலான பாக்கியா

எப்படி பாத்துப்பீங்க, செழியன அடிதடியில இறக்கியா என பாக்கியா கேட்டதும், நீ எங்களுக்கு சப்போர்ட்டா இருந்திருந்தீன்னா இந்த நிலை வந்திருக்காது என கோபி ஆத்திரப்படுகிறான். இனியா என் பொண்ணு. அவளோட வாழ்க்கைய இனி நான் பாத்துக்குறேன் என சொன்னதும் பாக்கியா எரிச்சலடைந்தார்.

வீட்டை விட்டு போக சொன்ன பாக்கியா

அப்போ இனியா எனக்கு யாரு, இப்போ வந்து நான் பாத்துக்குறேன்னு சொல்றீங்க. நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு போகும் போது நான் அவள மொத்தமா பாத்துக்கிட்டேன். நீங்க செஞ்சத எல்லாம் கேட்டா ரொம்ப அசிங்கமா ஆகிடும்.

 நீங்க எனக்கு சில கடமை இருக்குன்னு சொல்லி தான இந்த வீட்டுல இருக்கீங்க. ரெண்டு புள்ளைங்களயும் இதே வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததும் உங்க கடமை முடிஞ்சதுன்னு சொன்னீங்க இல்ல. எப்போ இந்த வீட்ட விட்டு போக போறீங்க என திரும்ப திரும்ப கேட்டு கோபியை அசிங்கப்படுத்தினாள்.