பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 10 எபிசோட்: காதல்.. காதல்.. காதல்.. இடியாப்ப சிக்கலில் இனியா.. கோபியை பந்தாடிய பாக்கியா!
பாக்கியலட்சுமி: இனியாவின் பாட்டி வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசி இனியாவை வசைபாடினாள். இதற்கிடையே உள்ளே வந்த கோபி, இனி நீ கல்லூரிக்கு என்னுடன் தான் வர வேண்டும். வீட்டிற்கு திரும்புவதும் என்னுடன் தான் என்று கூறினான்.

பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 10 எபிசோட்: காதல்.. காதல்.. காதல்.. இடியாப்ப சிக்கலில் இனியா.. கோபியை பந்தாடிய பாக்கியா!
பாக்கியலட்சுமி: பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியான ப்ரோமோவில், ‘இனியா செல்வியின் மகனை காதலிக்கிறாள் என்று தெரிந்தவுடன், இனியாவின் அண்ணனும், கோபியும் செல்வியின் மகனை அவனது வீட்டிற்கே சென்று வெளுத்தார்கள்.
இதைக் கேள்விப்பட்ட பாக்கியலட்சுமி கோபமானாள். இதனையடுத்து கோபியின் பக்கம் சென்ற அவள், இதுவரை நீங்கள் செய்தது எல்லாவற்றையும் சகித்துக் கொண்டது, என்னுடைய பிள்ளைகளுக்காகதான்; இனி நீங்கள் இந்த வீட்டில் இருக்கக்கூடாது வெளியே செல்லுங்கள் என்று தடாலடியாக சொல்லிவிட்டாள். இதைக்கேட்ட கோபி அதிர்ச்சியில் உறைந்தான்’ இது தொடர்பான நிகழ்வுகள் இடம் பெற்று இருக்கின்றன.