அய்யனார் துணை சீரியல் ஜூன் 11 எபிசோட்: கவிதா ஆன் தி லைன்..கிளியராகுமா சேரனின் மேரேஜ் ரூட்;பயத்தில் நடுங்கும் தம்பிகள்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அய்யனார் துணை சீரியல் ஜூன் 11 எபிசோட்: கவிதா ஆன் தி லைன்..கிளியராகுமா சேரனின் மேரேஜ் ரூட்;பயத்தில் நடுங்கும் தம்பிகள்..

அய்யனார் துணை சீரியல் ஜூன் 11 எபிசோட்: கவிதா ஆன் தி லைன்..கிளியராகுமா சேரனின் மேரேஜ் ரூட்;பயத்தில் நடுங்கும் தம்பிகள்..

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 11, 2025 10:31 AM IST

அய்யனார் துணை சீரியல் ஜூன் 11 எபிசோட்: சேரனுக்கு கவிதாவிடம் இருந்து அழைப்பு வந்தது. சோழனிடம் அவள் சேரனிடம் பேச வேண்டும் என்று சொல்ல, சேரன் பேசினான். அப்போது கவிதா நீங்கள் பெண் பார்த்து சென்றதற்கு பின்னர் பல மாப்பிள்ளைகள் வந்தும் எனக்கு பெரிதாக யாரையும் பிடிக்கவில்லை.

கவிதா ஆன் தி லைன்..கிளியராகுமா சேரனின் மேரேஜ் ரூட்;பயத்தில் நடுங்கும் தம்பிகள்..
கவிதா ஆன் தி லைன்..கிளியராகுமா சேரனின் மேரேஜ் ரூட்;பயத்தில் நடுங்கும் தம்பிகள்..

மறுநாள் காலை சிந்தனை தவறி அவன் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது, நிலா அங்கு வந்து உங்களுக்கு கவிதாவை பிடிக்கவில்லையா என்று கேட்டாள். அதற்கு சேரன் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. எனக்கு இந்த மாற்றத்தில்தான் பெரிய சந்தேகம் இருக்கிறது என்று கூறினார்.

குழப்பமடைந்த நிலா

உண்மையை எப்படி இப்படி மறைத்து கொண்டே இருப்பது என்று நிலா யோசித்தாலும், வேறு வழியில்லாமல் அமைதியாக இருந்தாள். இந்த விஷயத்தை சோழனிடம் பேசும் போது ஒரு சில நல்ல விஷயங்கள் நடப்பதற்கு பொய் கூறினால் தவறு ஏதும் இல்லை என்று கூறினான். ஆனாலும் நிலா எப்படி இருந்தாலும் இந்த விஷயம் அடிக்கடி நிகழும் சந்திப்புகளில் தெரிந்து விடுமே என்று கூற, அதை நடக்காமல் நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சோழன் கூறினான்.

இதற்கிடையே சேரனுக்கு கவிதாவிடம் இருந்து அழைப்பு வந்தது. சோழனிடம் அவள் சேரனிடம் பேச வேண்டும் என்று சொல்ல, சேரன் பேசினான். அப்போது கவிதா நீங்கள் பெண் பார்த்து சென்றதற்கு பின்னர் பல மாப்பிள்ளைகள் வந்தும் எனக்கு பெரிதாக யாரையும் பிடிக்கவில்லை.

அப்படியே எனக்கு பிடித்திருந்தாலும் என்னுடைய குடும்பத்திற்கு அவரைப் பிடிக்கவில்லை. உங்களுடைய அப்பாவித்தனம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று சொல்ல, சேரனும் சிரித்துக்கொண்டான். ஆனால், இங்கு எங்கே தனிக்குடித்தனம் விஷயம் சென்று விடுமோ என்று தம்பிகள் அதிர்ச்சியில் உறைந்து நின்று கொண்டிருந்தனர்.