அய்யனார் துணை சீரியல் ஜூன் 09 எபிசோட்: தனி குடித்தனம் கண்டிஷன்.. கிடுப்பிடி கேள்வி கேட்ட தம்பிகள்.. கலங்கிய சேரன்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அய்யனார் துணை சீரியல் ஜூன் 09 எபிசோட்: தனி குடித்தனம் கண்டிஷன்.. கிடுப்பிடி கேள்வி கேட்ட தம்பிகள்.. கலங்கிய சேரன்!

அய்யனார் துணை சீரியல் ஜூன் 09 எபிசோட்: தனி குடித்தனம் கண்டிஷன்.. கிடுப்பிடி கேள்வி கேட்ட தம்பிகள்.. கலங்கிய சேரன்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 09, 2025 11:26 AM IST

அய்யனார் துணை சீரியல் ஜூன் 09 எபிசோட்: தனக்காக சோழன் இப்படி உதவுவதைப் பார்த்த நிலா அவனைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள்.

அய்யனார் துணை சீரியல் ஜூன் 09 எபிசோட்: தனி குடித்தனம் கண்டிஷன்.. கிடுப்பிடி கேள்வி கேட்ட தம்பிகள்.. கலங்கிய சேரன்!
அய்யனார் துணை சீரியல் ஜூன் 09 எபிசோட்: தனி குடித்தனம் கண்டிஷன்.. கிடுப்பிடி கேள்வி கேட்ட தம்பிகள்.. கலங்கிய சேரன்!

மேலும், தான் ஆதார் கார்டு கிடைப்பதற்கு உதவியது அண்ணனுக்கு தெரிந்து விட்டதாக கூறிய அண்ணி இனி தன்னால் உதவ முடியாது என்று கூறிவிட்டாள். இந்த நிலையில் ஏற்கனவே சோகத்தில் இருந்து நிலா இன்னும் வருத்தமடைந்தாள். இதைப் பார்த்த சோழன் ஆதார் கார்டு கிடைப்பதற்காக ப்ரோசிங் சென்டர் சென்றான். ஆனால், அங்கு அவர்கள் முகவரி ஆவணத்தை கேட்டனர். இதனால் அங்கும் முயற்சி தோல்வி அடைந்தது.

முயற்சி செய்தான்

போன் கடைக்கு சென்று இழந்த எண்ணை எடுத்து விடலாமென்று முயற்சி செய்தால், அங்கும் முகவரிக்கான அடையாளத்தை கேட்டனர். இந்த நிலையில் சோழன் யார் யாருக்கோ போன் செய்து இந்த பிரச்சினையை தீர்க்க முடியுமா என்று கேட்டுக் கொண்டிருந்தான்.

தனக்காக சோழன் இப்படி உதவுவதைப் பார்த்த நிலா அவனைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள். மற்றொரு பக்கம் வீட்டிற்கு வந்த புரோக்கர் ஆவடி அருகே நீங்கள் பார்த்த பெண்ணுக்கு உங்களையும் உங்களது குடும்பத்தையும் பிடித்திருப்பதாகவும், ஆனால், அந்தப் பெண் கண்டிஷன் ஒன்றை வைத்து இருப்பதாகவும் கூறினார்.

வழிமறித்து கேட்ட தம்பிகள்

அது என்ன என்று தம்பிகள் கேட்க, அது சேரனுக்கு மட்டுமே தெரியும் என்றும் சேரனும் அந்தப்பெண்ணும் இது குறித்து தனியாக சந்தித்து பேசி இருக்கிறார்கள் என்று கூறினார்.

இந்த நிலையில் வேலை முடிந்து வந்த சேரனை மடக்கிப்பிடித்த தம்பிகள் நீ ஆவடி அருகே நாம் சென்று பார்த்த பெண்ணை தனியாக பார்த்தாயா என்று கேட்க, ஆமாம் பார்த்தேன் என்று சேரன் கூறினான். இதை ஏன் எங்களிடம் சொல்லவில்லை என்று தம்பிகள் கேட்க, வேலை காரணமாக மறந்துவிட்டேன் என்று சாதாரணமாக கூறினான். தொடர்ந்து, அந்தப்பெண் உன்னிடம் என்ன சொன்னார் என்று கேட்க, அவையெல்லாம் தற்போது தேவையில்லை என்று சொல்லி வேலையை பார்க்க ஆரம்பித்தான் சேரன்.

இந்த நிலையில் நிலாவும் சோழனும் சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண்ணிடம் கண்டிஷனை கேட்கின்றனர். அப்பொழுது அந்த பெண் தனிகுடித்தனம் என்றால் ஓகே என்று சொல்ல இவர்கள் அதிர்ச்சி அடைந்து நின்றனர்.