அய்யனார் துணை சீரியல் ஜூன் 07 எபிசோட்: சேரனை தனிக்குடித்தனம் அழைக்கும் மணப்பெண்.. ஆதார் கார்டு நம்பரால் அவதியான நிலா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அய்யனார் துணை சீரியல் ஜூன் 07 எபிசோட்: சேரனை தனிக்குடித்தனம் அழைக்கும் மணப்பெண்.. ஆதார் கார்டு நம்பரால் அவதியான நிலா!

அய்யனார் துணை சீரியல் ஜூன் 07 எபிசோட்: சேரனை தனிக்குடித்தனம் அழைக்கும் மணப்பெண்.. ஆதார் கார்டு நம்பரால் அவதியான நிலா!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 07, 2025 10:16 AM IST

அய்யனார் துணை சீரியல் ஜூன் 07 எபிசோட்: இருவரும் ஆதார் கார்டு எடுப்பதற்கு கடைக்குச் சென்றனர். அங்கு ஆதார் கார்டு எடுப்பதற்கு ஓடிபி சரிபார்த்தல் நடைமுறை இருந்தது.

அய்யனார் துணை சீரியல் ஜூன் 07 எபிசோட்: சேரனை தனிக்குடித்தனம் அழைக்கும் மணப்பெண்.. ஆதார் கார்டு நம்பரால் அவதியான நிலா!
அய்யனார் துணை சீரியல் ஜூன் 07 எபிசோட்: சேரனை தனிக்குடித்தனம் அழைக்கும் மணப்பெண்.. ஆதார் கார்டு நம்பரால் அவதியான நிலா!

சோழன் விட்ட பாடில்லை

தொடர்ந்து அதனை சோழனிடம் சொல்ல, அவன் கடுப்பானான். தொடர்ந்து, ஆதார் கார்டு நம்பரை வைத்து ஆதார் கார்டை எடுத்துவிடலாம் என்று நிலா கடைக்கு கிளம்ப, சோழனும் உடன் வருகிறேன் என்று கூறினான். ஆனால் நிலா தயவுசெய்து வேண்டாம் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லியும், அவன் விட்ட பாடு இல்லை.

இந்த நிலையில் இருவரும் ஆதார் கார்டு எடுப்பதற்கு கடைக்குச் சென்றனர். அங்கு ஆதார் கார்டு எடுப்பதற்கு ஓடிபி சரிபார்த்தல் நடைமுறை இருந்தது. ஆனால், நிலா ஆதார் கார்டுடன் இணைத்த சிம்மை முன்னமே தூக்கி போட்டு விட்டதால், அந்த ஓடிபியை எடுக்க முடியாத சூழல் உருவானது.

ஆனால், நிலாவின் அண்ணன் ஆதார்டு கார்டுக்கான எண்ணை மாற்றி வைத்து விட்டார்.இந்த நிலையில் ஓடிபியானது நிலாவின் அண்ணி நம்பருக்கு சென்றது. இங்கே ஓடிபி கிடைக்காததால் ஆதார் கார்டு எடுக்க முடியாமல் போனது.

இந்த நிலையில் அவள் வருத்தமாக வந்து காரில் உட்கார்ந்தாள். அந்த பக்கம் ஓடிபி வந்ததையடுத்து ஏதும் தெரியாதது போல காட்டிக் கொண்ட நிலாவின் அண்ணியின் நடிப்பை, நிலாவின் அண்ணன் கண்டுபிடித்து திட்ட ஆரம்பித்தார். தொடர்ந்து நீதான் இங்கிருந்து எல்லா ஆவணங்களையும் அங்கு அனுப்புகிறாயா; தேவையில்லாத வேலையை பார்த்துக் கொண்டிருக்காமல், ஒழுங்காக வீட்டிலிருந்து வேலையை பார்க்க பழகிக் கொள்; இல்லையென்றால் குழந்தையை விட்டு விட்டு, வீட்டை விட்டு வெளியேறி விடு என்று கறாராக சொல்லிவிட்டார்.

இந்த பக்கம் வருத்தமாக வந்து கொண்டிருந்த நிலாவிடம் சோழன் மாறி மாறி பேச, நிலா தான் தூக்கிப்போட்ட நம்பருக்கு போன் செய்து முயற்சி செய்து பார்த்தாள்.

அது வேறு ஒருவருக்கு செல்ல அவரிடம் நிலா ஓடிபி கேட்டதும் தான் மிச்சம். அவர் கன்னா பின்னாவென்று திட்ட ஆரம்பித்து விட்டார். இந்த நிலையில் மற்றொரு பக்கம் சேரனை மாப்பிள்ளை பார்த்த குடும்பம், அவரை தனி குடித்தனம் வருவதற்கு ஒத்துக் கொள்ளச் சொல்கிறது. அத்துடன் நேற்றைய எபிசோடு முடிவடைந்தது.