அய்யனார் துணை சீரியல் ஜூன் 06 எபிசோட்: பாய் பெஸ்டி போன்கால்.. விவாகரத்து கேட்ட நிலா.. சிதறிய சோழன்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அய்யனார் துணை சீரியல் ஜூன் 06 எபிசோட்: பாய் பெஸ்டி போன்கால்.. விவாகரத்து கேட்ட நிலா.. சிதறிய சோழன்!

அய்யனார் துணை சீரியல் ஜூன் 06 எபிசோட்: பாய் பெஸ்டி போன்கால்.. விவாகரத்து கேட்ட நிலா.. சிதறிய சோழன்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 06, 2025 10:20 AM IST

அய்யனார் துணை சீரியல் ஜூன் 06 எபிசோட்: இன்னொரு பக்கம் சோழனும் நிலாவும் காரில் சென்று கொண்டிருந்த நிலையில், ஆதார் கார்டு விரைவில் வந்தவுடன் நாம் நம்முடைய விவாகரத்துக்கு அப்ளை செய்ய வேண்டும் என்று நிலா கூற, சோழன் சோகமானான்

அய்யனார் துணை சீரியல் ஜூன் 06 எபிசோட்: பாய் பெஸ்டி போன்கால்.. விவாகரத்து கேட்ட நிலா.. சிதறிய சோழன்!
அய்யனார் துணை சீரியல் ஜூன் 06 எபிசோட்: பாய் பெஸ்டி போன்கால்.. விவாகரத்து கேட்ட நிலா.. சிதறிய சோழன்!

கடுப்பான கார்த்திகா குடும்பம்

இதைப் பார்த்த கார்த்திகாவின் குடும்பத்தினர் கடுப்பாகினர். தொடர்ந்து அங்கிருந்து சென்ற நடேசன் வழியில் புரோக்கரை சந்தித்து, என்னுடைய மகனுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்க வேண்டும் அதற்கான வேலைகளைப் பார் என்று ஆர்டர் போட்டார்.

வீட்டில் சேரன், சோழன், நிலா, பல்லவன், பாண்டி எல்லோரும் விறகடுப்பில் சிக்கன் சாப்பாடு சமைத்து சாப்பிட்டனர். அனைவரும் சேரனிடம் சாப்பாடு மிகவும் நன்றாக இருந்தது என்று பாராட்ட, சேரனும் மிகவும் சந்தோஷம் அடைந்தான். அதனைத் தொடர்ந்து எல்லோரும் கூடி சந்தோசமாக தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

அப்போது நிலா சோழனை அடிக்கடி பார்த்ததை அவன் பார்த்து விட்டான். இதையடுத்து நிலாவிடம் நேரடியாகவே நீங்கள் என்னை சைட் அடிக்கிறீர்களா என்று சோழன் கேட்க, அவள் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று சொல்லி கிளம்பி விட்டாள்.

சுவிட்ச் ஆப் செய்து படுத்தான்.

எல்லோரும் இரவு படுக்கச் சென்ற நிலையில் சேரனை இதற்கு முன்னதாக பாய் பெஸ்டியோடு வந்து மாப்பிள்ளை பார்த்த பெண் போன் செய்தாள். அந்த போனை சேரன் எடுக்க மறுக்க, சோழன் அந்த போனை எடுத்து சேரன் போல பேசினான். அவன் பேசியது அந்த பெண்ணுக்கு மிகவும் பிடித்து போனது.

இந்த நிலையில் போனை பிடுங்கிய சேரன் அப்படியெல்லாம் செய்யக்கூடாது; முதலில் காலையில் நிலாவிடம் சொல்லி அந்த பெண் எனக்கு வேண்டாம் என்று கூறப்போகிறேன் என்று கூறி போனை சுவிட்ச் ஆப் செய்து படுத்தான். இன்னொரு பக்கம் சோழனும் நிலாவும் காரில் சென்று கொண்டிருந்த நிலையில், ஆதார் கார்டு விரைவில் வந்தவுடன் நாம் நம்முடைய விவாகரத்துக்கு அப்ளை செய்ய வேண்டும் என்று நிலா கூற, சோழன் சோகமானான்