அய்யனார் துணை சீரியல் மே 8 எபிசோட்: டைவர்ஸ் கேட்ட நிலா.. போட்டுக் கொடுத்த வக்கீல்.. அய்யனார் துணை சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அய்யனார் துணை சீரியல் மே 8 எபிசோட்: டைவர்ஸ் கேட்ட நிலா.. போட்டுக் கொடுத்த வக்கீல்.. அய்யனார் துணை சீரியல்

அய்யனார் துணை சீரியல் மே 8 எபிசோட்: டைவர்ஸ் கேட்ட நிலா.. போட்டுக் கொடுத்த வக்கீல்.. அய்யனார் துணை சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published May 08, 2025 09:47 AM IST

அய்யனார் துணை சீரியல் மே8 எபிசோட்: சோழனும் நிலாவும் டைவர்ஸ் கேட்டு வக்கீலிடம் செல்ல அவர் ஆதார் கார்ட் இல்லாமல் எப்படி கல்யாணம் நடந்தது என கேட்டு குண்டைத் தூக்கி போட்டுள்ளார்.

அய்யனார் துணை சீரியல் மே8 எபிசோட்: டைவர்ஸ் கேட்ட நிலா.. போட்டுக் கொடுத்த வக்கீல்.. அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை சீரியல் மே8 எபிசோட்: டைவர்ஸ் கேட்ட நிலா.. போட்டுக் கொடுத்த வக்கீல்.. அய்யனார் துணை சீரியல்

டைவர்ஸ் கேட்ட நிலா

இதையடுத்து, அவர் நிலாவிடம் உடனே சோழனிடமிருந்து டைவர்ஸ் வாங்கினால் தான் உன்னுடைய வாழ்க்கைக்கும் அவனுடைய வாழ்க்கைக்கும் அது நல்லதாக இருக்கும் எனக் கூறினார். இது நிலாவிற்கு சரி என்று பட அவளும் சோழனை தனியாக அழைத்து அவளுக்கு உடனே டைவர்ஸ் வேண்டும் எனச் சொல்கிறாள். நிலா தன்னிடம் ஆசையாக பேச வந்திருக்கிறாள் என நினைத்திருந்த சோழனுக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

வக்கீலிடம் சென்ற ஜோடி

இதையடுத்து, அடுத்த நாளே நிலா டைவர்ஸ் உடனடியாக கிடைக்க வேண்டும் என சோழனை வற்புறுத்தியதால் அவர்கள் இருவரும் வக்கீலை பார்க்க சென்றனர். அங்கு தங்களுக்கு எப்படி திருமணம் ஆனது என்று கூறாமல் தங்கள் இருவருக்கும் ஒத்துவரவில்லை என்று மட்டும் கூறி விவாகரத்து கேட்டனர். வக்கீல் நிலா, சோழனிடம் எதற்காக விவாகரத்து வேண்டும், என்ன காரணம், எப்போது திருமணம் ஆனது என அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டார்.

கோபத்தில் நிலா

அப்போது தங்களுக்கு திருமணமாகி 2 மாதங்கள் ஆவதாகவும் தங்கள் இருவருக்குள்ளும் ஒத்து வராததால் இந்த விவாகரத்து முடிவை எடுத்ததாகவும் நிலா கூறினாள். அத்தோடு இருவரும் மியூட்சுவலா சேர்ந்து விவாகரத்து கேட்டால் அதில் எந்த சிக்கலும் இல்லை தானே என கேட்டதோடு உங்களால் முடிந்தால் பாருங்கள் இல்லை என்றால் நான் வேறு வக்கீலை பார்த்துக் கொள்வேன் என கோபமாக பேசினாள்.

வம்பிழுத்த சோழன்

இதைக் கேட்ட வக்கீல் அவர்கள் இருவரின் திருமண சர்ட்டிபிகேட்டையும், ஆதார் கார்டையும் கேட்டார். இதைக் கேட்ட உடன் சோழனுக்கு இப்போதைக்கு நிலாவிடம் இருந்து தனக்கு டைவர்ஸ் கிடைக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு வந்தான். ஏனென்றால் நிலாவிடம் ஆதார் கார்டு உள்ளிட்ட எந்த ப்ரூப்பும் இல்லாததால் தான் இன்னமும் சோழன் வீட்டிலேயே தங்கி இருக்கிறாள். இதையெல்லாம் யோசித்த சோழன் வேண்டுமென்றே அவனுடைய ஆதார் கார்டை நீட்டினான்.

அசிங்கப்படுத்திய வக்கீல்

அப்போது, நிலா தன்னிடம் ஆதார் கார்டு இல்லை என சொல்ல, ஆதார் கார்டு இல்லாமல் எப்படி கல்யாணம் பண்ணீங்க எனக் கேட்டு பெரிய குண்டைத் தூக்கி போட்டார். சோழனிடம் நிலா ஆதார் கார்டை கொடுத்தது கூட தெரியாமல் இருந்ததால், சோழன் நிலா வீட்டில் இருப்பவர்களோ அல்லது அவளை கல்யாணம் செய்து கொள்ள இருந்த மாப்பிள்ளையோ தான் ஆதார் கார்ட்டை கொடுத்திருப்பார்கள் என சமாளித்தான்.

நிலாவின் நம்பிக்கை

அதற்குள், வக்கீல் ஆதார் நம்பர் தெரிந்தால் ஆதார் கார்டை எடுத்து விடலாம் என சொன்னதும் நிலா சந்தோஷமாகி சோழன் வருத்தப்பட ஆரம்பித்தான். ஆனால், நிலா தன் பழைய சிம்மை தூக்கிப் போட்டதால் ஆதார் நம்பரும் போய்விட்டதை அறிந்து கோபப்பட்டாள். இருந்காலும், தனக்கு விரைவில் ஆதார் கார்ட் கிடைக்கும், அதன் மூலம் டைவர்ஸ் வாங்கி, சொந்தமாக வேலைக்ககு செல்ல முடியும் என நினைத்து நிலா சந்தோஷப்பட்டாள்.