அய்யனார் துணை சீரியல் மே 8 எபிசோட்: டைவர்ஸ் கேட்ட நிலா.. போட்டுக் கொடுத்த வக்கீல்.. அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை சீரியல் மே8 எபிசோட்: சோழனும் நிலாவும் டைவர்ஸ் கேட்டு வக்கீலிடம் செல்ல அவர் ஆதார் கார்ட் இல்லாமல் எப்படி கல்யாணம் நடந்தது என கேட்டு குண்டைத் தூக்கி போட்டுள்ளார்.

அய்யனார் துணை சீரியல் மே8 எபிசோட்: டைவர்ஸ் கேட்ட நிலா.. போட்டுக் கொடுத்த வக்கீல்.. அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை சீரியல் மே 8 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில், நிலாவும் சோழனும் எதிர்பாராத விதமாக தான் கல்யாணம் செய்து கொண்டனர். அவர்கள் இருவரும் விருப்பப்பட்டு கல்யாணம் செய்யவில்லை என்ற உண்மை நிலாவின் அண்ணிக்கு தெரிந்தது.
டைவர்ஸ் கேட்ட நிலா
இதையடுத்து, அவர் நிலாவிடம் உடனே சோழனிடமிருந்து டைவர்ஸ் வாங்கினால் தான் உன்னுடைய வாழ்க்கைக்கும் அவனுடைய வாழ்க்கைக்கும் அது நல்லதாக இருக்கும் எனக் கூறினார். இது நிலாவிற்கு சரி என்று பட அவளும் சோழனை தனியாக அழைத்து அவளுக்கு உடனே டைவர்ஸ் வேண்டும் எனச் சொல்கிறாள். நிலா தன்னிடம் ஆசையாக பேச வந்திருக்கிறாள் என நினைத்திருந்த சோழனுக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.