அய்யனார் துணை சீரியல் மே 7 எபிசோட்: அண்ணி கொடுத்த அட்வைஸ்.. விவாகரத்துக்கு தயாராகும் நிலா.. அய்யனார் துணை சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அய்யனார் துணை சீரியல் மே 7 எபிசோட்: அண்ணி கொடுத்த அட்வைஸ்.. விவாகரத்துக்கு தயாராகும் நிலா.. அய்யனார் துணை சீரியல்

அய்யனார் துணை சீரியல் மே 7 எபிசோட்: அண்ணி கொடுத்த அட்வைஸ்.. விவாகரத்துக்கு தயாராகும் நிலா.. அய்யனார் துணை சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published May 07, 2025 03:47 PM IST

அய்யனார் துணை சீரியல் மே 7 எபிசோட்: நிலா சோழனிடம் இருந்து விவாகரத்து வாங்கினால் தான் அவளது வாழ்க்கை நன்றாக இருக்கும் என அவளது அண்ணி அட்வைஸ் செய்கிறாள்.

அய்யனார் துணை சீரியல் மே 7 எபிசோட்: அண்ணி கொடுத்த அட்வைஸ்.. விவாகரத்துக்கு தயாராகும் நிலா.. அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை சீரியல் மே 7 எபிசோட்: அண்ணி கொடுத்த அட்வைஸ்.. விவாகரத்துக்கு தயாராகும் நிலா.. அய்யனார் துணை சீரியல்

கார்த்திகா தான் பிரச்சனை

அப்போது, தப்பே செய்யாத நீங்க எப்படி ஜெயில்ல இருக்க முடியும் என அவர்களை சமாதானம் செய்தாள். அத்தோடு கார்த்திகாவும் இந்த விஷயத்தில் எனக்கு உதவி செய்தாள் எனவும் வீட்டில் இருப்பவர்களிடம் கூறினாள். ஆனால், அவளது பெயரைக் கேட்டதுமே சேரனைத் தவிர எல்லோருக்கும் கோபம் வந்தது. அவங்க வீட்டுக்கு வந்தது தான் பிரச்சனையே. அவங்க வரலன்னா இந்த பிரச்சனையே நடந்திருக்காதே என திட்டினர்.

சப்போர்ட் செய்யும் நிலா

அப்போது, நிலா, என்னோட சூழ்நிலை வேற, கார்த்திகாவோட சூழ்நிலை வேற. வீட்டை விட்டே வெளிய வர முடியாத சூழ்நிலை இருந்தும் அவங்க நமக்காக யோசிச்சிருக்காங்க. அவங்களோட பிரச்சனையையும் நாம புரிஞ்சிக்கனும் என நிலா சொல்வதை யாரும் காதில் வாங்கவே இல்லை. அதோடு, இனி அவளை வீட்டிற்குள் விடவே கூடாது என சேரனை பார்த்து திட்டினர்.

வாங்கிக் கட்டிக் கொள்ளும் கார்த்திகா

அந்த நேரத்தில் கார்த்திகாவை அவளுடைய வீட்டில் ரவுண்டு கட்டி திட்டிக் கொண்டிருந்தனர். அவளை வளர்த்தே சரியில்லை. நாங்க பேசிட்டு இருக்கும் போது போலீஸ்கிட்ட நீ எப்படி எங்களுக்கு எதிரா பேசலாம். அவன் வீட்டுல இருக்கவங்ககிட்ட என்ன உறவு வேண்டிக் கிடக்குது என கார்த்திகாவை திட்டி தீர்த்தனர். அப்பா, அப்பா, மாமா என எல்லாரிடத்திலும் திட்டும் அடியும் வாங்கி அழுது கொண்டிருந்த கார்த்திகா இதற்கு மேல் எதாவது சொன்னால் நான் செத்தே போயிடுவேன் என மிரட்டுகிறாள்.

பெண் பார்க்கும் படலம்

அப்போது, கார்த்திகாவை பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் போன் செய்து நாங்கள் வீட்டின் பக்கம் வந்துவிட்டதாக சொன்னதும் கார்த்திகாவை அவளுடைய அம்மா தயார் படுத்துகிறாள். பின், அனைவர் முன்னிலையிலும் கார்த்திகாவை நிறுத்தி பெண் பார்க்கும் படலம் தொடங்குகிறது. வீட்டிற்கு வந்த பெண்ணோ கார்த்திகா ஏன் சிரிக்கல, ஏன் பூ வைக்கல என அடுக்கடுக்காக கேள்வி கேட்க அவளுடைய அம்மா சமாளிக்கிறாள்.

துக்கத்தில் கார்த்திகா

பின், மாப்பிள்ளைக்கு கொஞ்ச நாள் தாந் லீவ் இருக்கு என சொல்லி கல்யாண வேலையை உடனடியாக தொடங்கனும் என இருவீட்டாரும் பேசி தட்டு மாற்றிக் கொள்கின்றனர். இதைப் பார்த்த கார்த்திகாவால் துக்கம் தாங்க முடியாமல் அழுகையை அடக்கிக் கொண்டு நிற்கிறாள்.

அண்ணியை சந்திக்கும் நிலா

இதையடுத்து, நிலாவின் அண்ணி சென்னையில் இருக்கும் அவளுடைய பிரண்டை பார்த்துவிட்டு வருவதாக பொய் சொல்லிவிட்டு நிலாவை பார்க்க வந்துள்ளாள். அப்போது நிலாவை பார்த்து சந்தோஷப்பட்ட அவர், சோழனை பார்த்ததும் கோபமானார். பின் நிலா அவளுடைய அண்ணியிடம் தனக்கு எப்படி கல்யாணம் நடந்தது. இப்போது அவள் என்ன செய்கிறாள் என எல்லாவற்றையும் சொன்னாள். இதைக் கேட்டு ஷாக் ஆன அவளுடைய அண்ணி, வீட்டில் இருக்கும் போதே இலதை எல்லாம் சொல்ல வேண்டியது தானே எனக் கேட்க நிலா சூழ்நிலையை விளக்கினாள்.

அண்ணியின் அட்வைஸால் நடக்கப் போவது என்ன?

இந்த சமயத்தில் தான் நிலாவின் அண்ணிக்கு நிலாவும் சோழனும் சட்டப்படி கணவன் மனைவி என்பது தெரியவருகிறது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், இன்னும் இந்த விஷயத்தை சிக்கலாக்கிக் கொண்டே செல்ல வேண்டாம். சீக்கிரம் சோழனிடம் விவாகரத்து வாங்கினால் தான் உன்னுடைய கனவை அடைய முடியும் என அட்வைஸ் செய்கிறாஶள் இதைக் கேட்ட நிலா சோழனிடம் விவாகரத்து கேட்க தயாராகி எல்லோரும் தூங்கிய பின் சோழனை தனியாக அழைக்கிறாள்.