அய்யனார் துணை சீரியல் மே 6 எபிசோட்: உண்மையை அறிந்த போலீஸ்.. கெத்து காட்டிய நிலா.. அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை சீரியல் மே 6 எபிசோட்: கார்த்திகா விவகாரத்தில் சேரனுக்கு எந்த தொடர்பும் இல்லை என நிலா போராடி போலீசாரிடம் நிரூபித்ததால் அண்ணன் தம்பிகள் 4 பேரையும் போலீசார் ரிலீஸ் செய்தனர்.

அய்யனார் துணை சீரியல் மே 6 எபிசோட்: உண்மையை அறிந்த போலீஸ்.. கெத்து காட்டிய நிலா.. அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை சீரியல் மே 6 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில், கார்த்திகா சேரனை கட்டிப்பிடித்து நின்று கொண்டிருந்ததை பார்த்த அவரது அப்பா, அம்மா, மாமா ஆகியோர் சேரனை தாக்கியதுடன் அவர் மீது போலீசில் புகாரும் அளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சேரனின் தம்பிகள் கார்த்திகாவின் அப்பாவை வீடு புகுந்து தாக்கினர்.
போராடிய நிலா
இந்த விவகாரம் பெரிதாகவே, அவர்கள் கையோடு போலீசாரை கூட்டிவந்து சேரனையும் அவரது தம்பிகள் 3 பேரையும் கைது செய்து அழைத்து சென்றனர். இதை பார்த்து பயந்து போன நிலா, சேரன் மீது எந்த தப்பும் இல்லை என நிரூபிக்க போராடினாள். இதற்காக கார்த்திகாவை நேரில் பார்த்து பேசியும் எந்த பயனும் இல்லாமல் போனது.