அய்யனார் துணை சீரியல் மே 6 எபிசோட்: உண்மையை அறிந்த போலீஸ்.. கெத்து காட்டிய நிலா.. அய்யனார் துணை சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அய்யனார் துணை சீரியல் மே 6 எபிசோட்: உண்மையை அறிந்த போலீஸ்.. கெத்து காட்டிய நிலா.. அய்யனார் துணை சீரியல்

அய்யனார் துணை சீரியல் மே 6 எபிசோட்: உண்மையை அறிந்த போலீஸ்.. கெத்து காட்டிய நிலா.. அய்யனார் துணை சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published May 06, 2025 09:10 AM IST

அய்யனார் துணை சீரியல் மே 6 எபிசோட்: கார்த்திகா விவகாரத்தில் சேரனுக்கு எந்த தொடர்பும் இல்லை என நிலா போராடி போலீசாரிடம் நிரூபித்ததால் அண்ணன் தம்பிகள் 4 பேரையும் போலீசார் ரிலீஸ் செய்தனர்.

அய்யனார் துணை சீரியல் மே 6 எபிசோட்: உண்மையை அறிந்த போலீஸ்.. கெத்து காட்டிய நிலா.. அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை சீரியல் மே 6 எபிசோட்: உண்மையை அறிந்த போலீஸ்.. கெத்து காட்டிய நிலா.. அய்யனார் துணை சீரியல்

போராடிய நிலா

இந்த விவகாரம் பெரிதாகவே, அவர்கள் கையோடு போலீசாரை கூட்டிவந்து சேரனையும் அவரது தம்பிகள் 3 பேரையும் கைது செய்து அழைத்து சென்றனர். இதை பார்த்து பயந்து போன நிலா, சேரன் மீது எந்த தப்பும் இல்லை என நிரூபிக்க போராடினாள். இதற்காக கார்த்திகாவை நேரில் பார்த்து பேசியும் எந்த பயனும் இல்லாமல் போனது.

போலீசிடம் கேள்வி

இதனால், ஆத்திரத்தில் இருந்த நிலா நேரடியாக போலீஸ் ஸ்டேஷனிற்கு சென்று சேரனுக்காக பேசினாள். நானும் ஒரு பெண் தான். ஒரு பெண்ணுக்கு பிரச்சனை வந்தா நான் ஆதரவா நிப்பேன் என பேசி, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரிக்காமல் எப்படி வழக்கு பதியலாம் என்றும் கேள்வி எழுப்பினார். அதோடு நில்லாமல், இரு வீட்டாருக்கும் இருக்கும் பிரச்சனைகளையும் போலீசாரிடம் எடுத்துக் கூறினாள்.

கார்த்திகாவிடம் கத்திய நிலா

இதையடுத்து, போலீசார் கார்த்திகாவிடம் விசாரிக்க சம்மதம் சொல்லவே, நிலா கார்த்திகாவிற்கு போன் செய்து நடந்தவற்றை எல்லாம் போலீசாரிடம் சொல்லச் சொல்லி திட்டினாள். ஆனால், கார்த்திகா அம்மா, அப்பாவிற்கு பயந்து உண்மையா சொல்ல மறுத்தாள். அப்போது மிகுந்த கோபமான நிலா, சேரனின் நிலையை சொல்லி செய்யாத தப்பிற்கு எதற்காக 4 பேரும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் கேட்டு ஆக்ரோஷமானாள்.

சொதப்பிய திட்டம்

பின், நேரில் வந்து நடந்ததை சொல்ல முடியவில்லை என்றாலும் வீடியோ கால் செய்து தருகிறேன். போலீசாரிடம் பேசி உண்மையை சொல்லுமாறு நிலா சொன்னாள். இதற்கு கார்த்திகா சம்மதம் சொன்னதும் நிலா போலீசாரிடம் சொல்லி வீடியோ கால் செய்தாள். ஆனால், அதற்குள்ளாக நிலாவின் அம்மா கார்த்திகாவின் போனை பிடுங்கி திட்டிச் சென்றாள்.

உண்மை அறிந்த போலீஸ்

இதனால், நிலா போலீசாரை கார்த்திகாவின் வீட்டிற்கு அழைத்து சென்றாள். அப்போது கார்த்திகாவின் அம்மா, அப்பா போலீசாரை சமாளித்தனர். ஆனால், நிலா பிடிவாதமாக இருந்ததால் கார்த்திகாவை அழைத்து விசாரித்தனர். அப்போது கார்த்திகா நடந்த உண்மை அனைத்தையும் சொன்னார். இதைக் கேட்டு கோபமான போலீசார், குடும்ப சண்டைக்காக சொந்த பெண் மீது இப்படி ஒரு புகார் கொடுப்பீர்களா என திட்டிவிட்டு, கார்த்திகாவின் அப்பாவை ஸ்டே,னுக்கு அழைத்து சென்று புகாரை வாபஸ் வாங்க வைத்தார்.

பாராட்டு மழையில் நிலா

பின், சேரன் மற்றும் அவனது தம்பிகளை ரிலீஸ் செய்து, நிலாவின் தைரியத்தை பாராட்டினார். அத்துடன், தவறான வழக்கு பதிவு செய்ய இருந்ததையும் தடுத்ததற்கு பாராட்டினார். அவரோடு சேர்ந்து சேரன் மற்றும் அவனது தம்பிகள் எல்லோரும் நிலாவின் செயலை பாராட்டினர். இதையடுத்து இவர்கள் எல்லாம் வெளியில் டீ குடித்துக் கொண்டிருந்த போது, கார்த்திகாவின் அப்பா அனைவரையும் கோபத்துடன் பார்த்து சென்றார்.