அய்யனார் துணை சீரியல் ஜூன் 3 எபிசோட்: கார்த்திகாவிற்கு குட் சர்ட்டிபிகேட் கொடுக்கும் சேரன்.. அய்யனார் துணை சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அய்யனார் துணை சீரியல் ஜூன் 3 எபிசோட்: கார்த்திகாவிற்கு குட் சர்ட்டிபிகேட் கொடுக்கும் சேரன்.. அய்யனார் துணை சீரியல்

அய்யனார் துணை சீரியல் ஜூன் 3 எபிசோட்: கார்த்திகாவிற்கு குட் சர்ட்டிபிகேட் கொடுக்கும் சேரன்.. அய்யனார் துணை சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published Jun 03, 2025 03:53 PM IST

அய்யனார் துணை சீரியல் ஜூன் 3 எபிசோட்: கார்த்திகாவை திருமணம் செய்யவுள்ள குடும்பத்திடம் அவரைப் பற்றியும் அவரது குடும்பத்தினர் பற்றியும் நல்ல விதமாக பேசி அவர்களுக்கு சர்ட்டிபிகேட் கொடுத்துள்ளார் சேரன்.

அய்யனார் துணை சீரியல் ஜூன் 3 எபிசோட்: கார்த்திகாவிற்கு குட் சர்ட்டிபிகேட் கொடுக்கும் சேரன்.. அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை சீரியல் ஜூன் 3 எபிசோட்: கார்த்திகாவிற்கு குட் சர்ட்டிபிகேட் கொடுக்கும் சேரன்.. அய்யனார் துணை சீரியல்

கார்த்திகாவை பற்றிய விசாரணை

இந்த நிலையில், சேரனும் பாண்டியனும் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் சாலையில் செல்லும் போது, கார்த்திகாவை திருமணம் செய்து கொண்டு செல்லும் வீட்டில் இருந்து ஒருவர் வந்து கார்த்திகா பற்றியும் அவரது குடும்பத்தைப் பற்றியும் விசாரித்துக் கொண்டிருந்தார்.

குட் சர்ட்டிபிகேட் தந்த சேரன்

அப்போது, அவர் நேராக சேரனிடம் வந்து கார்த்திகாவின் தந்தை பற்றி விசாரித்தார். பின் கார்த்திகா பற்றியும் விசாரித்தார். அப்போது, சேரன் நடந்த எதனையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் கார்த்திகா பற்றி பெருமையாக பேசினான். அவர் மிகவும் நல்ல பெண், அருமையாக சமைப்பாள் என்றெல்லாம் சர்ட்டிபிகேட் கொடுத்துக் கொண்டிருந்தான்.

பாண்டியனின் ஆத்திரம்

அதோடு நில்லாமல் அவரது அம்மா, குடும்பம் என அனைவரும் மிகவும் நல்லவர்கள் எனக் கூறினான். இதைக் கேட்ட பாண்டியன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தன் அண்ணனை திட்டினான். ஆனால், அவன் கார்த்திகா நல்ல பொன்னு அந்த குடும்பத்துக்காக அவளை பத்தி தப்பா சொல்லக் கூடாது என கிளாஸ் எடுத்தான். இதை கேட்டு பாண்டியனுக்கு இன்னும் ஆத்திரம் வந்தது.

சேரனிடம் சிக்கிய நடேசன்

இதையடுத்து, அந்த நபர் அடுத்ததாக டீக்கடையில் இருந்த நடேசனிடம் சென்று கார்த்திகா பற்றியும் அவளது குடும்பம் பற்றியும் விசாரித்து இருக்கிறார். அப்போது, நடேசன் அவர்களைப் பற்றி மிகவும் மோசமாக கூறினார். இதை தூரத்தில் இருந்து பார்த்த சேரன் ஆத்திரம் தாங்காமல் நடேசனை வந்து அமைதிப்படுத்த முயன்றான்.

நடேசனின் கோபம்

அப்போதும் நடேசன் கேட்காத நிலையில், அவர்கள் தங்களது சொந்தம் என்றும் என் அப்பா குடித்துவிட்டு பேசுகிறார் என்றும் கூறி நிலமையை சமாளித்தான். இதனால், ஆத்திரமான நடேசன் சேரனை மிக மோசமாதக திட்டி கோவத்தோடு வீட்டிற்கு வந்தான். மனதில் யேசு நாதர் என நினைப்பு ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டுவார். இவனுக்கு எல்லாம் கல்யாணமே நடக்காது என்றெல்லாம் திட்டித் தீர்த்தார்.

இதை எல்லாம் கவனித்த நிலாவும் பல்லவனும் யாரை இப்படி திட்டுகிறார் என யோசித்துக் கொண்டிருந்தனர். அப்போது தான் சேரன் செய்தது அவர்களுக்கு தெரியவந்தது. மேலும், நிலா சேரனின் நடவடிக்கையை நினைத்து பெருமைப்பட்டார். ஆனால், பல்லவனுக்கு சேரன் மீது கோபம் தான் வந்தது.

ஏங்கும் கார்த்திகா

இது இப்படி இருக்க, கார்த்திகா வீட்டில் கல்யாண ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடந்து வந்தது. இதைப் பார்தது சேரனும் சோழனும் பேசி வந்தனர். அப்போது, வீட்டிற்குள் இருந்த கார்த்திகா சேரனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இதை சோழன் பார்த்து சேரனிடம் சொன்னபோது, பிரச்சனையாகிவிடும் என பயந்து சேரன் வீட்டிற்கு வந்துவிட்டான்.

தடுமாற்றத்தில் சேரன்

ஆனால், சேரன் மனதில் இருந்து கார்த்திகா மீதான பாசமும் நினைப்பும் போகவே இல்லை. அந்த நினைப்பிலேயே இருப்பதால் அவனால் எந்த வேலைகளிலும் கவனம் செலுத்த முடிவதில்லை. இதை சேரனின் தம்பிகளும் நிலாவும் கவனித்து தான் வந்தனர். சமையலில் கவனம் இல்லாமல் தீய விடுவது, உப்பு போட்டதை மறந்து மறுபடியும் உப்பு போடுவது, எந்த பொருளை எடுத்தோம் என தெரியாமல் இருப்பது என சேரன் ஒரு மார்க்கமாக இருக்கிறான்.

வம்பிழுத்த சோழன்

இதனால், வீட்டில் உள்ள எல்லோரும் சேரனை நினைத்து வருந்தினர். அப்போது, சோழன் உன் கவலையை மறக்க கொஞ்சம் குடி எனக் கூறி சேரனை வம்பிழுத்தான். ஆனால், சேரன் அதற்கு எல்லாம் ஒத்து வராமல் பிடிவாதம் பிடித்தான்.